ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் களில், சத்தீஸ்கர், மத்தியப்பிர தேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்ற விதம் மிகவும் கவ னிக்கத்தக்கதாகும்.
அதிலும் மத்தியப்பிரதேசத்தில் அது பெரிய அளவில் மீண்டும் திரும்ப ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இம்மாநிலத்தில் இடையிலே காங்கிரஸ் கட்சி சுமார் 15 மாத காலம் ஆட்சி யிலிருந்ததைத் தவிர்த்துவிட்டால் கடந்த இருபது ஆண்டுகளாக, பாஜக, அங்கே ஆட்சி புரிந்து வருகிறது. சிவராஜ் சௌஹான் அரசாங்கம் ஆட்சிக்கு எதிரான போக்கை தவிர்த்ததோடு, காங்கிரஸ் கட்சி பெற்றதைவிட 8 விழுக்காடு கூடுதலாக (48.55 விழுக்காடு) வாக்குப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது.
இத்துடன் சத்தீஸ்கரிலும், ராஜஸ்தானி லும் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசாங்கங்க ளையும் அதனால் வீழ்த்த முடிந்திருக்கிறது. சத்தீஸ்கரில் சென்ற தேர்தலின்போது பாஜக துடைத்தெறியப்பட்டிருந்தது. இப்போதும்கூட தேர்தல் நடைபெற்றபின் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெறும் என்று ஊகிக்கப்பட்டி ருந்தபோதிலும், பாஜக, காங்கிரசைத் தோற்க டித்து, மொத்தம் உள்ள 90 இடங்களில் 54 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரசைத் தோற்கடிக்க முடிந்திருக்கிறது. முந்தைய தேர்தலில் பெற்றதைவிட 13.3 விழுக்காடு அள விற்கு அதிகம் பெற்று தன் வாக்குப் பங்கினை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
ராஜஸ்தானில், அசோக் கெலாட் அரசாங் கம் குறிப்பிடத்தக்க அளவிற்கு எண்ணற்ற நலத்திட்டங்களைக் கொண்டுவந்திருந்த போதிலும், காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கரில் ஆட்சி செய்ததைவிடச் சிறப்பாக ஆட்சி செய்துவருவ தாகக் கருதப்பட்டபோதிலும், பாஜக அதை எல்லாம் சமாளித்து, மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற 199 இடங்களில் 115 இடங்களைப் பெற முடிந்திருக்கிறது.
முக்கியக் காரணி
பாஜக-வின் வெற்றியையும், காங்கிரசின் வீழ்ச்சியையும் எவ்வாறு கணக்கிடுவது? இந்த தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் பகுத் தாய்வறிஞர்களால் (analysts), பல்வேறு காரணிகள் கூறப்பட்டுக் கொண்டிருக்கின் றன. எனினும், இவற்றில் மிகவும் மையமான ஒன்றாக நிலவும் உண்மை, இம்மூன்று மாநிலங்களிலும் இப்போது ஒருங்கிணைக் கப்பட்ட இந்துத்துவா செல்வாக்கு பெற்ற வாக்காளர் கூட்டம் ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க வேண்டும். இதேபோன்று 2019 மக்களவைத் தேர்தலின்போதும் பாஜக இந் துத்துவா அடையாளத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது வடக்கு இந்தியாவிலும், மேற்கு இந்தி யாவிலும் அதிகமாகும்.
காங்கிரஸ் கட்சியின் அடிப்படைத் தோல்வி என்பது, இந்துத்துவா சித்தாந்த மேலாதிக் கத்தை எதிர்த்து முறியடிக்கக்கூடிய விதத்தில் ஒரு சித்தாந்த தளத்தை அதனால் உருவாக்க முடியாமல் போனது என்பதேயாகும். தேர்தல் முடிவுகள் குறித்து பதிலளித்த ராகுல் காந்தி, பாஜக-விற்கு எதிரான சித்தாந்த போராட்டம் தொடரும் என்று கூறியிருக்கிறார். உண்மை யில் இதுதான் பிரச்சனையே. இவர்கள் எங்கே இந்துத்துவாவிற்கு எதிராக இத்தகைய சித்தாந் தப் போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்?