articles

img

மிரண்டு ஓடியவர்களின் உரிமையை மீட்டு தந்தது செங்கொடி- ​​​​​​​சி.திருவேட்டை

தெருவோர வியாபாரிகளிடம் பொருட்களை பிடுங்கிக் கொண்டு அடித்து விரட்டுவார்கள். பல நேரங்களில் காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்று அடித்து வழக்கும் போடுவார்கள். பொருட்களோடு இடுப்பில் இருந்த பணமும் பறி போகும். தெருவோரத்தில் துணியை  விரித்து வியாபாரம் செய்து கொண்டி ருக்கும்போதே வியாபாரியின் கண்கள் அங்குமிங்கும் அலைபாயும். காவல்துறையைப் பார்த்தால் திருடனைப் போல மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஆளுக்கு ஒரு மூலையாக ஓடுவார்கள். தெரு ஓரத்தில் வியாபாரம் செய்வது குற்றம். 50 ஆண்டுகளுக்கு முன் சென்னையின் அவல நிலை இது.

இந்தக் கொடுமையை எதிர்த்து காவல் நிலையத்திற்குள் நுழைந்து நியாயம் கேட்டு போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள். வியாபாரிகளை திரட்டி நம்பிக்கையூட்டி சங்க மாக்கி போராடியதோடு, நீதிமன்றத்தில் வழக்கு போட்டு காவல்துறை அராஜகத்திற்கு தடை யாக மாறினர். வி.கல்யாண சுந்தரம், பி.என்.கபூர், கே.எம்.ஹரிபட், வி.பி.சிந்தன், உ.ரா.வரதராஜன் என கம்யூனிஸ்ட்  தொழிற்சங்கத் தலை வர்கள் தெருவோர வியாபாரிகளை பாதுகாத்தனர்.

1980களில் உருவான இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் இந்த இளை ஞர்களை திரட்டி மாமுல் வசூல் செய்யும் ரவுடிகளை ஓடஓட விரட்டி யடித்ததோடு, காவல்துறை, மாநக ராட்சி அதிகாரிகளின் அராஜகத் திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

இதுபோல் நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்களின் தலையீடு ஆட்சியாள ர்களை அசைத்தது. 2004ஆம் ஆண்டு தெருவோர வியாபாரிகள் கொள்கை  அறிக்கையை ஒன்றிய அரசு வெளி யிட்டது. மேற்குவங்கம், கேரள அரசு கள் உள்ளாட்சிகளில் சட்டமியற்றி தெருவோர வியாபாரிகளை பாது காத்தன. 2010ஆம் ஆண்டு தெரு வோர வியாபாரத்தை வாழ்வாதா ரமாக இந்திய உச்சநீதி மன்றம் அங்கீகரித்தது. மத்திய சட்டத்தை உருவாக்க ஒன்றிய அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது. 

சட்டம் தெரியாத அதிகாரிகள்

இதன்படி ‘தெருவோர வியாபாரி கள் (வாழ்வாதாரம் மற்றும் தெரு வோர வியாபாரத்தை ஒழுங்கு படுத்துதல்) சட்டம்-2014’ வந்தது. இந்த  சட்டம் காவல்துறை, உள்ளாட்சி அதி காரிகளின் துன்புறுத்தலில் இருந்து தெருவேரா வியாபாரிகளை பாது காக்க, வியாபார மண்டலங்களை உரு வாக்கி வியாபாரத்திற்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும்,  வங்கிக் கடன் மற்றும் அடிப்படை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், இவற்றை செய்ய ஊராட்சி, நகராட்சி அளவில் ‘நகர விற்பனை குழுவை’அமைக்க வேண்டும் என்கிறது. 

தமிழக அரசு 2015ஆம் ஆண்டு சட்ட  விதிகளை உருவாக்கி அரசாணை வெளியிட்டது. 2017 ம் ஆண்டு சென்னை மாநகராட்சி  மண்டல வாரி யாக நகர விற்பனை குழு அமைத்தது. இக்குழுகளை சட்டத்திற்கு உட்பட்டு முறையாக அமைக்காததால் சென்னை உயர்நீதி மன்றம் இந்தக் குழுக்களை கலைத்தது. 

இந்தச் சட்டம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறையினருக்கு எதுவும் தெரியவில்லை. வியா பாரிகளை முழுமையாக கணக் கெடுத்து அனைவருக்கும் விற்பனை சான்றிதழ், அடையாள அட்டை வழங்கிய பின்னரே நகர விற்பனைக் குழு தேர்தல் நடத்த வேண்டும். வியா பாரிகள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டிய பின்பும் மாநகராட்சி நிர்வாகம் இதை  பொருட்படுத்தவில்லை.

பொதுத் தேவைக்கு வியாபாரம் செய்யப்படும் இடம் தேவையென் றால், நகர விற்பனைக் குழுவுக்குத் தான் அங்கு விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் அதிகாரம் உள்ளது. அப்போது கூட, மாற்று இடம் தராமல் அகற்ற முடியாது. இதற்குமாறாக, அதி காரிகளே முடிவெடுத்து அகற்று கின்றனர். சட்டத்தை மீறி புல்டோசர் மூலம் கடைகளை அகற்றுகின்றனர். இதற்கான சட்ட நடைமுறைகள்கூட தெரியாமல் அதிகாரிகள் இருப்பது கவலையளிக்கிறது.

 சட்டத்தின்படி குறைதீர்ப்பு கமிட்டி அமைக்க வேண்டும். அதில் ஒரு சிவில் நீதிபதி, இரு தொழில் வல்லுனர்கள் இருக்க வேண்டும். இந்த குழுவிடம் பாதிப்புக்கு உள்ளான வியாபாரி முறையீடு செய்து தீர்வை பெறுவார். சட்டம் அமலுக்கு வந்து 9 ஆண்டுகளாகியும் குறைதீர்ப்பு குழுவை மாநகராட்சி அமைக்கவில்லை.

அராஜகமாக அகற்றம்

தெருவோர வியாபாரிகள் உழைக்கும் மக்களுக்கு மிக மலிவான விலையில் அத்தியாவசிய தேவை களை கொண்டு சேர்க்கும் சமூக சேவகர்கள். சுயமாக சிறு முதலீட்டைக்  கொண்டு தொழில் நடத்துபவர்கள். இவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக அணுகக் கூடாது என சட்டத்தில் தெளி வாக  குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மறைத்து அதிகாரிகள் ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்றே சொல்கின்றனர். உழைக்கும் மக்களை நகரை விட்டு அகற்றிவிட்டு இந்தியா ஒளிர்கிறது, வளர்ச்சி என்கின்றனர். நீதிமன்றங் களும் பல நேரங்களில் இதை பிரதி பலிக்கின்றன.

நாட்டின் குடிமகன் கண்ணியமாக ஒரு தொழிலை செய்து வாழும் உரிமையை அரசியல் சாசனம் வழங்கி யிருந்தும் இதை ஏழைகளுக்கு மறுப்பது ஏன்? தடையில்லா வர்த்த கம் என சில்லரை வணிகத்தில் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களை ஏழைக் குடிமக்களை மட்டும் விரட்டியடிப்பது ஏன்?

சி.திருவேட்டை
மத்தியசென்னை மாவட்டச் செயலாளர், சிஐடியு