பஹல்காம் தாக்குதல்: இந்தியா பதிலடி! அமைதி, ஸ்திரத்தன்மை அவசியம்!
மே 7 ஆம் தேதி அதிகாலை யில், இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ் தான் பிரதேசங்களிலும் உள்ள ஒன்பது இடங்களை குறிவைத்து ஆபரேசன் சிந்தூர் என்ற இராணுவ நடவடிக்கை யைத் தொடங்கின. பஹல்காமில் நடந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் காட்டுமிராண்டித்தனமான படுகொலை களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசி யம் குறித்து நாடு முழுதும் ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசும் ஆயுதப்படைகளின் பிரதிநிதிகளும் பதிவு செய்த சான்றுகள், பாகிஸ்தான் நிறுவனத்தால் நேரடியாகக் கையாளப்படும் ஒரு அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா என்னும் அமை ப்பு சம்பந்தப்பட்டிருப்பதை மெய்ப்பிக் கின்றன. லஷ்கர்-இ-தொய்பா ஏற்க னவே ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டிய லில் உள்ளது.
ஊடகங்களின் செயல்பாடுகள் எழுப்பும் கேள்விகள்
இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு, செய்தியாளர் சந்திப்பில் உரை யாற்றிய வெளியுறவுச் செயலாளர், பஹல்காமில் நடந்த தாக்குதல் மத வெறித் தீயை விசிறிவிடும் நோக்கத் தைக் கொண்டது என்று சுட்டிக்காட்டி னார். இது உண்மைதான் என்றாலும், இந்திய பிரதான ஊடகங்கள், குறிப்பாக சமூக ஊடகங்கள் வெளியுறவுச் செய லாளரின் இந்தக் கருத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டனவா என்னும் கேள்வியை எழுப்புகின்றன. பஹல்காம் சம்பவம் குறித்து வலது சாரிகளின் கைத்தடிகள் கக்கும் விஷம் குறைவானவை அல்ல. உண்மையில் அவர்கள் இதேபோன்ற அணுகுமுறை யை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், பஹல்காமில் பயங்கரவாத திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்களைப் போ லவே மக்களின் ஒற்றுமையை சீர் குலைப்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதும் நன்கு தெரிகிறது. எனவே இந்த சம்பவம் தொடர்பாக இந்த ஊட கங்கள் கக்கும் விஷத்தை நீக்கும் விதத் தில் நமக்கு உறுதியான ஆதரவு நட வடிக்கை தேவை. இவற்றை நாம் நிறை வேற்றிட நம் அரசமைப்புச்சட்டத்திலும், நாட்டின் சட்டங்களிலும் போதுமான அளவிற்கு ஷரத்துகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் இவற்றை நாம் செய்தாக வேண்டும்.
கூடுதல் கவனம்தேவை
இந்திய அரசு இராணுவ நடவடிக்கை துல்லியமாக இருந்தது என்றும், நிலை மை மோசமடையாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இலக்குகள் தேர்ந் தெடுக்கப்பட்டன என்றும் கூறியுள்ளது. இன்றைய உலகத்தில், ஒரு முழுமை யான இராணுவ மோதலின் புவிசார் அரசியல் விளைவுகள் மிகவும் கடு மையான விதத்தில் பேரழிவை ஏற்படுத் திடும். எனவே, நாம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது போன்ற நடவடிக்கைகள் எப்போ தும் சுழன்று அதிகரிக்கும் சாத்தியக் கூறுகளால் நிறைந்திருக்கும். இது தவிர்க்கப்பட வேண்டும்.
ராஜதந்திர, அரசியல் ரீதியான அழுத்தம் அவசியம்
போர் நடவடிக்கைகள் மிகவும் குறைக்கப்பட வேண்டும். பஹல்கா மில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்க ளை மீண்டும் நிகழாமல் தடுக்க பாகிஸ் தான் அரசு மீது ராஜதந்திர மற்றும் அர சியல் ரீதியாக மேலும் அழுத்தம் கொ டுக்க இந்தியா இன்னும் நம்பகமான ஆதாரங்களை குவிக்க வேண்டும். இது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யும் விதத்தில் இதில் ஈடுபட்ட கய வர்கள் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். இரு நாடுகளிலும் வாழும் மக்களுக்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை அவசியமாகும்.
தவிர்க்க வேண்டிய வெறுப்புப் போக்கு
இந்தியா பன்முகத்தன்மைகள் நிறைந்த ஒரு சமூகமாகும். பன்முகத் தன்மையில் ஒற்றுமை காண்பதே நம் பலமும் ஆகும். அது அப்படியே தொடர வேண்டும். இவ்வாறு ஒற்றுமையுடன் வாழும் நம் மக்களை சீர்குலைக்கும் மற்றும் அவர்களின் வாழ்நிலையை அரித்துவீழ்த்திடும் எவ்விதமான நட வடிக்கையையும் நாம் மேற்கொள்ளக் கூடாது. மக்களை அடையாள அடிப்ப டையில் சித்தரித்து அவர்கள் மீது வெறுப்பை காட்டும் போக்கைத் தவிர்க்க வேண்டும்.