articles

img

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் -ஜி.ராமகிருஷ்ணன்-ஜி.ராமகிருஷ்ணன்

எளிய குடும்பத்தில் பிறந்து, போக்குவரத்துத் தொழிலாளர்க ளின் நேசத்திற்குரிய தலைவ ராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்வீரராகத் தடம் பதித்திருப்பவர் தோழர் எம். சந்திரன். திருப்பெரும்புதூர் வட்டம் நல்லூர் கிராமத்தில் 1942இல் விவ சாயமும் சலவைத் தொழிலும் சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர். வறட்சியால் வாழ் வாதாரத்தை இழந்த குடும்பம் சென்னை-  தேனாம்பேட்டைக்குப் புலம் பெயர்ந்தது.

ஏழாம் வகுப்பிற்கு மேல் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாதவராக  சிறார் பருவத்திலேயே ஓர் அச்சகத்தில் வேலை க்குச் சென்றார். ஒரு நண்பர் ஆலோசனை  கூற ஓட்டுநர் பயிற்சி பெற்று உரிமம் எடுக்க முயன்றார். அதற்குத் தேவைப் பட்ட பணத்திற்குத் தாயார் தன்னிடமி ருந்த கம்மலை விற்று ஏற்பாடு செய்தார்.

அரசு அதிகாரி ஒருவரிடம் ஓட்டுநரா னார். அவருடைய உதவியாளர் கூறிய ஆலோசனைப்படி அரசுப் போக்கு வரத்துத் துறையின் ஓட்டுநர் பணிக்கான விண்ணப்பத்தைத் தபாலில் அனுப்பி னார். 13ஆவது நாள் பணி நியமன ஆணை  வந்தது! இன்று இப்படி நடக்குமென நினைத்துப் பார்க்கவும் முடியாது. காங்கி ரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது (1967 மார்ச் 1) வேலையில் சேர்ந்தவர்,  திமுக ஆட்சிக்கு வந்த (அதே ஆண்டு மார்ச் 6) பிறகு முதல் மாதச் சம்பளத்தைப் பெற்றார்!

‘மெட்ராஸ் ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட்’ அடையாறு பணிமனை யில் ஓட்டுநராகச் சேர்ந்த சந்திரன் அப் போது திமுக ஆதரவாளராக இருந்தார். காங்கிரஸ் ஆட்சியின்போது வேலை நீக்கம் செய்யப்பட்டு தோழர் வி.பி.சிந்தன் மேற்கொண்ட முயற்சிகளால் மீண்டும் வேலையில் சேர்ந்த ஓட்டுநர் கே.வி.ராக வன் அந்தப் பணிமனையில்தான் இருந் தார். சக தொழிலாளர்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த அவர் தொழிற்சங்க முன்னோடிகளில் ஒருவரா கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் இருந்தார். சைதாப் பேட்டையில் அவரது வீட்டிற்குப் பல முறை சென்றார் சந்திரன். ஆளுங்கட்சியினர் பணிமனைக்குள் சங்கம் பற்றிப் பேச விடாத நிலையில், ராகவன் ‘தினமணி’ நாளேட்டை மடித்து அதனுள் சங்க உறுப்பி னர் பதிவு ரசீதுப் புத்தகத்தை மறைத்து அக்குளில் வைத்திருப்பார். பணி நேரம் முடிந்து வெளியில் வரும்போது தொழிலா ளர்களைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசி உறுப்பினராகச் சேர்த்ததை நினைவு கூர்கிறார் சந்திரன்.

இளையோரை மாற்றிய இரண்டு சம்பவங்கள்

தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரா கச் செயல்பட்டுப் பின்னாளில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரானவர் தோழர் வே.மீனாட்சிசுந்தரம். அவரை அழைத்து வாயிற்கூட்டம் நடத்தினார். “சங் கத்தில் ஈடுபட்டதற்காகத் தொழிலா ளர்களைப் பழிவாங்கினால் நிர்வாகத்தின் கையை முறிப்போம் என்று வி.எம்.எஸ். பேசியபோது ஆளுங்கட்சிக்காரர்கள் தக ராறு செய்து கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாமல் கலைத்தார்கள்,” என்றார் சந்திரன். 

சில நாட்களுக்குப் பிறகு அவர்களே பணிமனைக்குள்ளே தொழிலாளர் கூட்டத்தை நடத்தினார்கள். “தொழிலா ளர்களின் பிரச்சனைகளைப் பற்றி எதுவும் பேசாத நீங்கள் டெப்போவிற்குள்  தொழிலா ளர் கூட்டம் நடத்தலாமா,” என்று சந்திர னும் மற்ற இளம் தொழிலாளர்களும் எதிர்த்ததைத் தொடர்ந்து அவர்கள் அந்த கூட்டத்தை ரத்து செய்தார்கள். அந்த இரண்டு சம்பவங்களும் இளம் தொழிலா ளர்களிடையே செங்கொடி சங்கத்தின் மீது உணர்வுப்பூர்வமான நம்பிக்கையை ஏற்படுத்தின. சங்கத்தின் பணிமனைக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் சந்திரன். விடுவார்களா? அடுத்த சில நாட்களில் சந்திரன் உள்ளிட்ட இளம் தொ ழிலாளர்களை நிர்வாகம் மத்திய பணி மனைக்கு (பல்லவன் இல்லம்) மாற்றி யது.

எங்கே மாற்றினாலும் சங்கப் பணி நிற்கு மா? மத்திய பணிமனையில் தொழிலாளர் களை அமைப்பாகத் திரட்டியதில் சிறப்பா கப் பங்களித்தவர் செங்கொடி சங்கத்தின் தலைவரான பூ.நாராயணமூர்த்தி. அவ ரோடு இணைந்து முனைப்பாகச் செயல் பட்ட சந்திரனை நிர்வாகம் தியாகராய நகர் பணிமனைக்கு மாற்றியது.

இந்நிலையில் ஏற்கெனவே இருந்த சங்கத்தின் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டது. 1966இல் தாம்பரத்தில் வழக்க றிஞர் சிவாஜி வீட்டில் தொழிலாளர்கள் பேரவை  நடத்தப்பட்டது. ஏழு பேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய சங்கம் உருவானது. அதனைப் பதிவு செய்யக் கையெழுத்திட்ட ஏழு தொழிலாளர்களில் ஒருவரான தோழர் ரங்கபாஷ்யம் தற் போது நம்மோடு வாழ்ந்து வருகிறார்.

சங்கத்தின் தலைவராக எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பொதுச்செயலாளராக  கே.எம். ஹரிபட், துணைத் தலைவராக  வி.பி. சிந்தன், பொருளாளராக  ரைமண்ட்  தேர்வு செய்யப்பட்டனர். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு போனஸ் கோரிக் கையை சிஐடியு முன்வைத்தது. அவர்க ளுக்கு போனஸ் உரிமை இல்லை என்று அரசு கூறியது. அன்றைய தொமுச அரசின் நிலைபாட்டை ஆதரித்தது. சிஐடியு, தொமுச தலைவர்களுக்கிடையே விவாதச் சண்டை நடந்தது. 1970 அக்டோபரில் சிஐடியு அறைகூவலை ஏற்று ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. சிஐடியு சார்ந்த தொழிலாளர்கள் இடமாற்றம் செய்யப் பட்டனர். இறுதியில் கோரிக்கை வென்றது, 1973இல் போனஸ் வழங்கப்பட்டது.

நினைவெல்லாம் போராட்டம்

“1975இல் ஊதிய உயர்வுக் கோரிக் கையை வைத்து, நிர்வாகம் நேரடியாக சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சிஐடியு சார்பில் வலியுறுத்தினோம். அரசு ஏற்கவில்லை. பலகட்ட இயக்கங்களுக்குப் பிறகு வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத் தோம். அமைச்சர் ‘ஜப்பான் திட்டம்’ என்ப தாக ஒன்றை அறிவித்தார். அதை ஏற்பதா கத் தொழிலாளர்களிடம் கையெழுத்தை  வாங்க முயன்றது நிர்வாகம். கையெழுத்தி டாத முன்னணித் தொழிலாளர்கள் வேறு  வேறு மாவட்டங்களுக்குத் தூக்கியடிக்கப் பட்டார்கள். 90க்கு மேற்பட்ட முன்னணித் தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப் பட்டோம். குமரி மாவட்டத்தில் நூற்றுக்க ணக்கானவர்கள் கைது செய்யப்பட்ட தோடு தினக்கூலி தொழிலாளர்களாக இருந்த பலரை நிர்வாகம் வேலை நீக்கம் செய்தது,” என்று மனமெல்லாம் போராட்ட நினைவுகளாகப் பகிர்ந்தார் சந்திரன்.


ஒரு மாதத்திற்குப் பிறகு விடுதலை யான தொழிலாளர்களை சிறைவாயிலில் வி.பி.சிந்தன், அ.சவுந்தரராசன் இரு வரும் வரவேற்றார்கள். (அன்று இரவு இந்தி ராகாந்தி அரசு அவசரநிலை ஆட்சியை அறி வித்தது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிக ளின் தலைவர்கள் கைது செய்யப் பட்டார்கள்.)

ஜப்பான் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாத, சிஐடியு–வில் முனைப்பாகச் செயல்பட்ட வர்களை நிர்வாகம் விரைவுப் பேருந்து துறைக்கு மாற்றியது. சங்கத்தை அழித்து விடலாம் என்று எண்ணி முன்னணி ஊழி யர்களை நிர்வாகம் பந்தாடியது. ஆனால்,  எல்லா மாவட்டங்களிலும் தொழிலா ளர்கள் சிஐடியு–வை பலப்படுத்தினார்கள். இத்தகைய எல்லாப் போராட்டங்களிலும் சந்திரன் சுழன்று சுழன்று செயல்பட்டார்.

1977இல் எம்.ஜி.ஆர். தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஜப்பான்  திட்டத்தை நிராகரிக்கவும் சங்கங்களோடு நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு அளிக்கவும்  சிஐடியு வலியுறுத்தி யது. அது ஏற்கப்படாததால் வேலைநிறுத்த அறைகூவல் விடுக்கப்பட்டது. சுமார் 10,000 தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். தொடர்ச்சியான பலகட்டப் போரா ட்டங்களுக்குப் பிறகு அரசு பேச்சுவார்த்தை க்கு வந்தது. 1978இல் முதல்முறையாக ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போதிருந்து 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் பேச்சுவார்த்தை மூலம் செய்யப்பட்டு வருகிறது.

“ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது 2002இல் அரசுப் போக்குவரத்துத் தடங்களைத் தனியார்மயமாக்க முயன்றார். மாநிலம் முழுவதும் சிஐடியு நடத்திய தொடர் போராட்டத்தால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது,” என்று அந்தப் போராட்டத்திலும் குறிப்பிடத்தக்க பங்காற்றிய சந்திரன் தெரிவித்தார்.

சங்கம் எடுக்கிற முடிவு எதுவாக இருந்தாலும் அதை செயல்படுத்துவதில் வெற்றிகரமாக்குவதில் முன்னுதார ணமாக நேரம் காலம் பாராமல் முழுமை யாக தன்னை ஈடுபடுத்தி உழைப்பது இவருடைய தனிச்சிறப்பான குணம்.

கட்சிப் பணி

“மத்திய பணிமனையில் வேலை  செய்தபோது தோழர் பூ.நாராயண மூர்த்திதான் என்னைக் கட்சி உறுப்பி னராக்கினார்,” என்றார் சந்திரன். சங்கத்தி லும், கட்சியிலும் முனைப்புடன் செயல் பட்டதால் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னராகத் தேர்வு செய்யப்பட்டார். தென் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பின ராகப் பல ஆண்டுகள் செயல்பட்டார். 2008இல் நாகர்கோவிலில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மாநிலக்குழு உறுப்பி னராகத் தேர்வு செய்யப்பட்டு 3 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார்.

பணிமனை வாயிற்கூட்டங்களிலும், பேரவைகளிலும்  தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் பேசுவார். காரணம், தொழிலாளர்களின் மொழியை இவர்  அறிந்திருந்ததே. ஏழாம் வகுப்பு வரையி லேயே படித்தவரான சந்திரன் அதி காரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் நுணுக்கமான பிரச்சனைகளை விளக்கு வதில் வல்லவராகத் திகழ்ந்தார். அவசர நிலை ஆட்சிக் காலத்தில் தலைமறைவா கச் செயல்பட்ட தலைவர்களுக்கு உதவு கிற பொறுப்பை நிறைவேற்றினார்.

மற்றொரு சுவையான தகவலையும் அவர் தெரிவித்தார். “தோழர் பி.ஆர்.பர மேஸ்வரன் ஆலோசனைப்படி, கட்சியின் மத்தியக் குழு அலுவலகத்திற்காக ஒரு புதிய அம்பாசிடர் கார் வாங்கப்பட்டது. அதை ‘இந்து’ என். ராம், அவருடன் நான் இருவருமாக மாற்றி மாற்றி ஓட்டிச் சென்று நான்கு நாட்களில் தில்லியில் கொண்டுபோய்ச் சேர்த்தோம்.”

“மேற்குவங்க மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருந்த தோழர் ஜோதி பாசு சென்னைக்கு வந்திருந்தபோது அவ ருக்கும் நான்தான் கார் ஓட்டினேன். அதைப் பெருமையாக நினைக்கிறேன்,” என்றும் கூறினார்.

1980இல் தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலை வராக வி.பி.சிந்தன், பொதுச்செயலாளராக அ.சவுந்தரராசன் ஆகியோரோடு துணை நிர்வாகியாக சந்திரன் தேர்வு செய்யப் பட்டார்.

முழு நேரப் பணி

சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினராக, மாநில நிர்வாகியாக பல ஆண்டுகள் செயல்பட்ட சந்திரன், மாநிலத் தலைமை கேட்டுக்கொண்டதை ஏற்று, பணி ஓய்வு க்கு நான்கு ஆண்டுகள் இருந்த நிலையில் 1996இல் விருப்ப ஓய்வு பெற்று முழுநேரமா கக் கட்சிப் பணியிலும், சங்கப் பணியிலும் ஈடுபட்டார். தற்போது போக்குவரத்து ஓய்வூ தியர் சங்கத்தின் துணைத் தலைவராக வழிகாட்டி வருகிறார். கட்சியின் மத்திய சென்னை மாவட்ட மையக் கிளை  உறுப்பினராக உள்ளார்.

சந்திரனுடைய இணையர் இயக்கப் பணிகளில் ஒரு பின்பலமாக இருந்து வருகிறார். மூன்று மகன்களில் ஒருவர் இறந்துவிட்டார்.  போக்குவரத்துத் தொழிலாளியான ஒரு மகன் கட்சி உறுப்பி னர். இன்னொரு மகன் சுயதொழிலில் ஈடுபட்டிருக்கிறார்.

எளிய குடும்பத்தில் பிறந்து, போக்கு வரத்துத் தொழிலாளியாகி, தொழிற்சங்க உறுப்பினராகி, போராட்டங்களில் பங்கேற்று, தலைமை தாங்கி, கைது, சிறை, வழக்கு போன்ற பழிவாங்கல் நடவ டிக்கைகளைப்  புறந்தள்ளி, தொழிலா ளர்களின் உரிமைகளை நிலைநாட்டக் களம் கண்டு, தொழிலாளர்களிடையே அர சியல் பணி செய்து, கட்சியைக் கட்டுவ திலும் முன்னணிப் பாத்திரம் வகித்து,  இன்று தனது 82ஆவது வயதிலும் ஓய்வூதி யர் சங்கத்தில் ஓய்வின்றிப் பங்களித்துக் கொண்டு, கட்சி உறுப்பினராகவும் இயங்கி வருபவரான தோழர் சந்திரன் 58 ஆண்டு களுக்கு மேலாகத் தொடர்கிற இயக்கப் பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.

ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)