articles

கிரிக்கெட் மைதானம்... மயானம் - கவிஞர் காசாவயல் குமார்

கிரிக்கெட் மைதானம்... மயானம் - கவிஞர் காசாவயல் குமார்

ஆர்சிபி ஆட்டம் அபாரம் ஐசியுவில் ரசிகர்கள் துயரம்.  பெங்களூர்  சின்னசாமி ஸ்டேடியத்தில் ரசிகர்கள் ஆடிய வெறித்தன கிரிக்கெட்...  ரசிக அணியின்  11விக்கெட்டுகளும் ஆல் அவுட்.. மரண ஆட்டம்... சதம் 100 பேர் படு காயம்.. 37 பவுண்ட்ரிகள் ஐசியுவில்... ஆட்ட நாயகர்களைக் காண வந்த கூட்ட நெரிசலில்.. பாவம் பதினொரு குடும்பங்கள் சோக பரிசலில்...  பதினொன்றில்  ஓர் இளம்பெண்.. ஒரு பள்ளி மாணவி.. ஒரு குழந்தை ஒரு பொறியியல் மாணவர்.. மற்றவர்கள் முப்பது வயதுக்குட்பட்ட வாழவேண்டிய வாலிபர்கள்... இழந்தவர்களுக்கு பத்தும் பத்தும் இருபது லட்சம்.. இருப்பது இறுதிவரை  சோகத்தின் சொச்சம்... இருந்தாலும் அடுத்து ஒரு அலப்பறை என்றால் அடித்துப் பிடித்து  ஓடுவோம்.. பரவச நெறியில் ரசனை வெறியில் கூடுவோம்.. நெரிசலில் நெரிபடுவோம்.. மிதிபடுவோம். மூச்சு முட்டும் மாரடைக்கும் மரணம் எட்டும்... சில உதடுகள் உச்சு கொட்டும்.. வரலாற்றுப் பக்கங்களில் மட்டும் எச்சம் . அதுவே எங்கள் வெ(ற்)றியின் உச்சம்..