articles

img

மனிதர்கள் அற்ற காடுகள் புலிகளுக்கும் ஆபத்தாக மாறும் ! -பெ.சண்முகம்

சுற்றுச்சூழலை பாதுகாப்பது, வனவிலங்கு களை பாதுகாப்பது என்பதைப் பிரதா னப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஆட்சியா ளர்களும், தன்னார்வலர்களும் வனங்களில் வாழும் மக்களுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகளை யும், கருத்துகளையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது வந்திருப்பது தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கடிதம். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு, 27.5.2024, 19.6.2024 ஆகிய தேதிகளில் பல்வேறு மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறது. முதல் கடிதம், புலிகள் சரணா லயத்தில் உள்ள ‘ஆக்கிரமிப்பாளர்களை’ வெளி யேற்றி மறுகுடியமர்த்துவது குறித்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மாநில அரசுகள் உருவாக்கிட வேண்டும் என்பது. இரண்டாவது கடிதம், குறிப்பிட்ட கால வரையறையை தீர்மானித்து மறுகுடியமர்த்தும் பணியை முடிக்க வேண்டும் என்பது. 

5 சரணாலயங்கள்

இந்திய நாடு முழுவதும் 55 புலிகள் சரணால யங்கள் உள்ளன. தமிழ்நாட்டில், முதுமலை புலிகள் சரணாலயம், ஆனைமலை புலிகள் காப்பகம், களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம், மேக மலை புலிகள் சரணாலயம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் என ஐந்து உள்ளன. இந்த ஐந்து சரணா லயங்களிலும் மொத்தம் 306 புலிகள் இருப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் குறிப் பிட்டுள்ளது. இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்ப கத்தில் 7 புலிகள் மட்டுமே இருக்கின்றன. 

நாடு முழுவதும் புலிகள் சரணாலயங்களின் உட் பகுதியில் வாழ்ந்து வரும் 848 கிராமங்களிலிருந்து ஆதிவாசிகள் மற்றும் வேளாண் சமூகத்தைச் சேர்ந்த 89,808 குடும்பங்களை வெளியேற்ற வேண்டுமென்று கணக்கெடுத்து வைத்துள்ளனர். இதன்படி சுமார் 5 லட்சம் பேர் வெளியேற்றப்படும் ஆபத்து உள்ளது. இதில் 257 கிராமங்களிலிருந்து 25007 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு மறுகுடியமர்த்தும் பணி நிறைவு பெற்றுவிட்டது. மீதமுள்ள 591 கிராமங்களிலிருந்து 64801 குடும்பங்களை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென்பது தான் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வற்புறுத்துவது. 

வன உரிமைச் சட்டத்திற்கு எதிரானது

ஆனால், இது முழுக்க முழுக்க சட்டவிரோதமா னது. வனஉரிமைச்சட்டம் 2006, வனவிலங்கு சர ணாலயங்களில் வாழும் மக்களுக்கும் பொருந்தும். அச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் இங்கு வாழ்பவர்களுக்கும் உறு திப்படுத்தப்பட வேண்டும். ஒருவேளை வனவிலங்கு களும் - மனிதர்களும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால், அம்மக்களின் ஒப்புதலுடன் தான் வெளியேற்ற முடியுமே தவிர, தன்னிச்சையாக அரசு வெளியேற்ற முடியாது. இதே போல், வனஉயிரின பாதுகாப்புச் சட்டம் 1972ல் பிரிவு 38பி, மக்களின் ஒப்புதல் பெற்றுத்தான் வெளியேற்ற முடியும் என்று குறிப்பிடுகிறது. ஆதிவாசிகளுக்கு மட்டுமல்லாமல், காலங்காலமாக வனத்தைச் சார்ந்து வாழும் இதர சமூகத்தினருக்கும் இச்சட்டம் பொருந்தும். எனவே, ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மக்களுக்கு எதிரா னது மட்டுமல்ல; சட்டத்திற்கும் எதிரானது. 

எளிய மக்கள் ஆக்கிரமிப்பாளர்களா?

“ஆக்கிரமிப்பாளர்கள்” என்று முத்திரை குத்தி  இந்த நடவடிக்கையை ஆட்சியாளர்கள் மேற்கொள் கின்றனர். உதாரணத்திற்கு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை எஸ்டேட்டில் 1925 முதல் மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். இந்த எஸ்டேட் களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணா லய பகுதிக்கு உட்பட்டது என்று வனத்துறை தெரி விக்கிறது. சுமார் 100 ஆண்டு காலமாக அங்கு வாழ்ந்து வந்த மக்களை வெளியேற்றியிருப்பது வன உரிமைச் சட்டம் 2006க்கு எதிரான செயல். வெளியேற்றப்பட்ட 500 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கி அவர்களின் குடியிருப்பு உரிமையை அரசு உறுதி செய்திருக்க வேண்டும். 

தலைக்கு மேல் தொங்கும் கத்தி

தேனி மாவட்டம், மேகமலையில் ஜமீன் கால பட்டா வைத்துள்ளவர்கள் உட்பட 81 கிராமங்களிலிருந்து சுமார் 4580 குடும்பங்களை வெளியேற்ற 29.10.2018 அன்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டது.  1948ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டம் கொண்டு வரப் பட்டது. அதற்கு முன்பிருந்தே வாழ்ந்து வரும் விவ சாயிகளை வெளியேற்றுவது அராஜகமன்றி வேறென்ன? இதற்கெதிராக விவசாயிகள் ஒன்று பட்டுப் போராடியதால் நடைமுறைப்படுத்தப்படாமல் மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை 17.6.2022 அன்று நேரில்  சந்தித்து “தீர்ப்பை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப் பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு இதுநாள் வரை மேல்முறையீடு செய்யாமல் இருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். விவசாயிகள் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உயர்நீதிமன்ற உத்தரவு இன்றும் இருக்கிறது. 

பல தலைமுறைகளாக வாழ்ந்து வருபவர்களுக்கு பட்டா வழங்காமல் இருந்ததற்கு யார் பொறுப்பு? அனுபவ நிலங்களுக்கு பட்டா கேட்டும், குடியிருப்பு மனைக்கு பட்டா கேட்டும் மக்கள் கொடுத்த மனுக்கள் மலைபோல் குவிந்திருக்கும். ஆனால், ஆளும் அரசுகள் இம்மனுக்களை உரிய அக்கறையுடன் பரிசீலிக்காததன் விளைவு, இன்று மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடியை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். 

மனிதர்களை  வெளியேற்றி விட்டு சுற்றுலாவா?

“காடு மக்களுக்கு சொந்தம்” என்று வன உரிமைச் சட்டம் கூறுகிறது. ஆனால் புலிப்பாதுகாவலர்களும், யானை பாதுகாவலர்களும் காடு விலங்குகளுக்கு சொந்தம் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் “மனிதர்கள் அற்ற காடுகள்” என்று மாற்றப் போகி றார்களா என்றால் அதுவுமில்லை. சுற்றுலாவை மேம்படுத்த, சுற்றுலா பயணிகளை காடுகளுக்குள் கவர்ந்திழுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசுகள் மேற்கொள்கின்றன. “சூழல் சுற்றுலா” என்ற பெயரில் திட்டம் வகுக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்படுகிறது. “ஆதிவாசிகளே காடுகளை விட்டு வெளியேறுங்கள், சுற்றுலா பயணிகளே காடு களை காண வாருங்கள்” என்பது தான் வனத்துறையின ரின் முழக்கமாக இருக்கிறது. சுற்றுலாவும் தனியாரி டம் விடப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 

கருணையல்ல!

வனத்தை பெரும் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது தான் ஆளும் அரசுகளின் திட்டமாகும். இதற்கேற்ப கடந்த ஆட்சியின் போதே வனப்பாது காப்பு சட்டம் 1980ல் திருத்தங்கள் 2023 மார்ச் 29ஆம் தேதி நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு பிறகு  சட்டம் நிறைவேற்றி ஆகஸ்ட் 4ஆம் தேதி மத்திய அரசிதழிலிலும், “வனப்பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2023” வெளியிடப்பட்டு விட்டது. இத்திருத்தச் சட்டத்தில் வனவளங்கள், வனத்தில் உள்ள கனிம  வளங்களை தனியார் பெருநிறுவனங்கள் சூறையாட வழிவகுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்சியாளர்க ளுக்கு விலங்குகள் மீது கருணையெல்லாம் ஒன்று மில்லை. வனங்களிலிருந்து வருமானம் ஈட்டுவது தான். அதை நேரடியாக சொல்வதற்கு பதிலாக புலிப்பாது காப்பு என்று புரளிவிடுகிறார்கள். வனவளங்களை பாது காப்பது என்பது மக்களை பங்கேற்கச் செய்வதன் மூலம் தான் நிறைவேற்ற முடியுமே தவிர வெளியேற்று வதனால் நடக்காது என்பதை அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

வனங்களை அழிப்பது யார்?

“பொதுவாக நாகரிக வளர்ச்சியும், தொழிற்துறை வளர்ச்சியும் வனங்களை அழிப்பதில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றன. வனங்களை பாதுகாப்ப திலும், அவற்றை உற்பத்தி செய்வதிலும் எடுத்த நட வடிக்கைகள் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவான வையே” என்று கார்ல் மார்க்ஸ் எழுதினார். சுமார் 160 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆளும் வர்க்கம் இயற்கை விஷயத்தில் இதே அணுகுமுறையில் தான் செயல்பட்டு வருகிறது. 

மக்கள் நீண்டகாலம் போராடிப் பெற்ற வன உரிமைச்சட்டம் 2006ஐ அமல்படுத்துவதில் ஒன்றிய - மாநில அரசுகள் போதுமான அக்கறை எடுத்துக் கொள்ளாமல் இருக்கின்றன. மாறாக, இச்சட்டத்தை பலவீனமடையச் செய்யும் வகையில் பல உத்தர வுகளை பிறப்பித்து வருகின்றன. வனத்தைச் சார்ந்து வாழ்ந்து வரும் மக்களை வெளியேற்றுவது நீரில்  வாழும் மீன்களை கரையில் தூக்கிப் போடுவது போன்றது தான். வாழ்வாதாரம் பறிக்கப்படுவதாலும், சூழல் மாறுபாடு காரணமாகவும் மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக மரணத்தை நோக்கித் தள்ளப்படுவார்கள். வனம், மக்களுக்கும் சொந்தம் என்ற உணர்வுப்பூர்வமான முடிவுக்கு ஆட்சியா ளர்கள் வரவேண்டும். 

வெளியேற்றுவது தீர்வல்ல

வனவிலங்கு-மனித மோதலில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்பது உண்மை தான். புலிகளால் தாக்கப்பட்டு இறந்த மனித உயிரிழப்புகள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சர், 2024 ஜுலை 25இல் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் “நாடு முழுவதும் 2019-20ல் 49 பேர், 2020-21ல் 59 பேர், 2021-22ல் 110 பேர், 2022-23ல் 82 பேர். இதே  காலத்தில் 628 புலிகள் இறந்துள்ளன. வன விலங்கு-மனித மோதல் என்பதை ஒரு விபத்தாக கருத வேண்டுமே தவிர, அதற்காக மக்களை முற்றி லும் வெளியேற்றுவது என்பது ஏற்க முடியாத ஒன்று. ஆண்டுதோறும் இதைவிட பல மடங்கு சாலை  விபத்துகளால் மரணம் ஏற்படுகிறது. அதனால் வாகன போக்குவரத்தே கூடாது என்று சொல்ல முடியுமா? அல்லது மனிதர்கள் யாரும் சாலைகளில் நடமாடக் கூடாது என்று உத்தரவிட முடியுமா? உயிர் வாழ்வது முக்கியமானது. அதை மீறி உயிரிழப்புகள் ஏற்படுகிற போது, உரிய இழப்பீடு வழங்குவதும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதும் தான் தீர்வே தவிர வெளியேற்றுவது அல்ல.

உத்தரவைத் திரும்பப் பெறுக!

எனவே, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தனது உத்தரவை திரும்பப் பெற வேண்டும். ஒன்றிய அரசின் நிர்பந்தத்துக்கு பணிந்து போகாமல் மக்களின்  குடியுரிமையையும், வாழ்வாதாரத்தையும் பாது காக்கும் வகையில் அவர்களுக்கு பட்டா வழங்கி நிரந்தர மான தீர்வை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ப தில் இருவேறு கருத்து இருக்க முடியாது. அதே போல்,  காடுகளில் வாழ்ந்து வரும் மக்களை வெளியேற்றுவ தையும் எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. ஒன்றிய - மாநில அரசுகள் இந்தப் பிரச்சனையை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். 

ஏற்கனவே, யானை வழித்தடங்கள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்திலிருந்து குறிப்பிட்ட தேதிக்குள் மக்கள் வெளியேற வனத் துறை தனித்தனியாக நோட்டீஸ் வழங்கி பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு மக்களுக்கும், வனத்துறைக்கும் இடையிலான இந்த அனைத்து பிரச்சனைகளிலும் அவசர உணர்வுடன் தலையிட்டு தீர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும். 

கட்டுரையாளர் : மாநிலத் தலைவர், 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்