திருநெல்வேலி மாவட்டத்தில் நெய்யப் படும் “செடிபுட்டா” சேலைக்கு புவி சார் குறியீடு அண்மையில் கிடைத்துள்ளது. தவிர கன்னியாகுமரி மாவட்டத்தில் விளை யும் மட்டி வாழைப்பழம், திருவண்ணாமலை மாவட்டத்தில் தயாராகும் நாமக்கட்டி ஆகிய வற்றிற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட் டுள்ளது.
புவிசார் குறியீடு என்ன அதன் தனித்துவ அடையாளத்திற்காக வழங்கப்படுவது. சரி... “செடிபுட்டா” சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுவிட்டதால் அதன் உற்பத்தி அதிகரிக்குமா...? நெசவாளர்கள் வாழ்வு வளம் பெறுமா...?
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகா தேவி தாலுகாவிற்கு உட்பட்ட வீரவநல்லூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாற்பது வருடங்களுக்கு முன்பு “செடிபுட்டா” சேலை கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்டது. அன்றைக்கு இந்தச் சேலையின் விற்பனையக மாக இருந்தது கன்னியாகுமரி மாவட்டம் தான். கன்னியாகுமரி கடலைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் “செடிபுட்டா” சேலையை வாங்கிச் செல்வது வழக்கம்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த புகழ் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. இன்றைக்கு வீரவநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செடிபுட்டா சேலை களை நெய்பவர்கள் சொற்பனவர்களே உள்ளனர். இதற்குக் காரணம் கைத்தறி நெச வில் கை வேலைப்பாடுகளுடன் தயாராவது தான் “செடிபுட்டா” சேலை. ஒரு சேலையில் ஒரு புட்டாவில் இருபது கலர்கள் இடம் பெறும். ஒரு சேலை நெய்வதற்கு இரண்டு முதல் மூன்று நாட்களாகும். கூலியோ சேலை ஒன்றுக்கு ரூ.350 முதல் ரூ.400 வரையே கிடைக்கும்.
இன்றைக்கு “செடிபுட்டா” சேலை உற் பத்தி அருகிவிட்டது. அதற்குப் பதில் “செல்ப் டிசைன்”, “பெரிய புட்டா”, “குச்சி” புட்டா சேலைகள் நெய்யப்படுகின்றன. இந்தச் சேலைகளை தனியார் உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்து மகாராஷ்டிரா, புனே, குஜராத் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
கைத்தறியில் ஒரு பாவில் ஒன்பது சேலை கள் செய்யப்படும். ஒரு பாவின் விலை ரூ.9 ஆயிரம். இன்றைக்கு இதை நெய்பவர் களுக்கு கட்டுபடியாகாத கூலியே வழங்கப் படுகிறது. இவர்கள் பெறும் கூலியில் நூலை கண்டாக மாற்றுவது, பாவு-செலவுக்காக ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை செலவழித் கின்றனர். இவை போக ஒரு பாவில் தொழி லாளிக்கு கிடைப்பது அதிகபட்சம் ரூ.4,500 மட்டுமே.
இன்றைக்கு கைத்தறியில் “பெட்டி (ஜக்காட்பெட்டி) புட்டா” நெய்யப்படுகிறது. இதன் மூலம் தொழிலாளர்கள் “செடிபுட்டா” சேலையை விட சற்றுக் கூடுதலாக கூலி பெறுவார்கள்.
இது குறித்து வீரவநல்லூர் வட்டார நெசவுத்தொழிலாளர் ஐக்கியக் குழுவின் (சிஐடியு) செயலாளர் ஐயப்பன் கூறியதாவது:-
“செடிபுட்டா” சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கியிருப்பது மகிழ்ச்சிதான். ஆனால், இது காலத்தில் செய்த உதவி அல்ல. முப்பது வருடங்களுக்கு முன்பு கிடைத்திருந்தால் இதை நம்பியுள்ள தொழிலாளர்கள் பலன் பெற்றிருப்பர்.
இன்றைக்கு “செடிபுட்டா” நெய்யும் தொழிலாளார்கள் 500 பேர் சிஐடியு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இப்போது செடி புட்டா, பெரியபுட்டா நெய்யும் தொழிலாளர் களுக்கு பாவு ஒன்றிற்கு ரூ.14,000 கூலியாக வழங்கவேண்டும். அப்போதுதான் கட்டுபடி யாகும். அத்துடன் இந்த ரக சேலைகளை தமிழக அரசு பிரபலப்படுத்த வேண்டும். இது குடும்பமாக பார்க்கக் கூடிய வேலை என்பதை யும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் கைத்தறிக்கென்று தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஒதுக்கீடு செய்யும் பணத்தை திட்டமிட்டுச் செலவிடு வதற்கும், கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும். அதற்கென திட்டம் வகுக்கப் படாததால் அரசு ஒதுக்கும் நிதியை அப்படியே திரும்ப அனுப்பும் சூழலும் உள்ளது. புட்டா சேலை களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கொள் முதல் செய்யவில்லை என்பதே யதார்த்தம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை அறிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் வீடு களுக்கான அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் தற்போது அது அசைவில்லாமல் உள்ளது. வீடு கட்டும் திட்டத்தைத் துரிதப்படுத்த வேண்டும் “செடிபுட்டா”-விற்கு புவிசார் குறியீடு வழங்கியது இருக்கட்டும். தொழிலாளர்கள் வாழ்வு வளம்பெற... இன்றைய விலைவாசி உயர்வோடு அவர்கள் போட்டிபோட... அவர் களது குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க பாவிற்கு ரூ.14 ஆயிரம் கூலி வழங்க வேண்டும்.
அது தான் கைத்தறி நெசவாளர் களுக்கு அரசு செய்யும் உதவியாக இருக்கும் என்றார்.