articles

ஜானகி அம்மாவும் மத்தளமும் கணேஷ்

    ஆசிரியர் உள்ளே நுழைந்தவுடன், மாணவர்கள் “ஜோஹார் சார்” என்றார்கள்.  ஒரு மாணவர் மட்டும் பைக்குள் கையை விட்டு தேடிக் கொண்டே இருந்தார்.

  “என்ன ஆச்சு..?” “சார்.. உங்ககிட்ட ஒண்ணு கேக்கனும்னு எழுதி வெச்சுருந்தேன். காணல.” “பரவாயில்ல... எவ்வளவு நினைவு இருக்கோ, அதைக் கேக்கலாமே.” “அன்னிக்கு இவங்கள யாரு முதலமைச்சராக்குனது யாருன்னு சொல்லிக் குடுக்குறப்ப முதல் பெண் முதலமைச்சர் ஜானகினு சொன்னீங்க...

     ஜானகினு கூகுள்ல தேடுறப்ப ஜானகி அம்மாள்னு வந்துச்சு... ஆனா வேற யாரோ... அதான் எழுதி வெச்சுருந்தேன்..” “எழுதி வெக்குறது முக்கியம். அதவிட முக்கியம், அதப் பத்திரமா வெச்சுக்குறது..” “ரொம்ப பத்திரமா எங்கயோ வெச்சுட்டான் போலருக்கு, சார்...” என்றவுடன் சிரிப்பலைகள்.

    ஆசிரியரும் சிரித்தவாறே, “நல்லவேளையா இந்த ஜானகிய பிரிட்டன்காரங்களும் பத்திரமா வெச்சுருக்காங்க” “யாரு சார் அவங்க” “அவங்களா.. Cytogeniticistனு சொல்வாங்க... Cytogeneticsனா, குரோமோசோம்களைப் பற்றியும், உயிரணுக்களின் நடத்தைகளைப் பற்றியும் படிப்பது...”  “அப்படினா இவங்க நம்ம நடத்தையப் பத்தி படிச்சாங்களா சார்..”

    “இல்ல.. நமக்கு முந்தி உருவான தாவரங்களப் பத்தி படிச்சாங்க..” “ஆமால்ல... தாவரங்களுக்கும் உயிர் இருக்குனு ஜே.சி.போஸ் சொன்னாரே..” “அவர் சொன்னது பெரிய விஷயம்தான்...

    ஆனா அவருக்கு இல்லாத ஒரு பெரிய நெருக்கடி ஜானகி அம்மாவுக்கு இருந்தது..”  “அது என்ன சார்...அவங்க பொண்ணுங்குறதுனாலயா..”

    “அது மட்டுமல்ல... அவங்க பொறந்த சாதியும் காரணமா இருந்துச்சு..” “விஞ்ஞானிங்ககூட அப்புடிப் பாத்தாங்களா..” “ஆமா...

     ரெண்டு பக்கமும் ஜானகி அம்மாவுக்கு இடிதான்..”  “தமிழ்நாட்டுக்காரங்களா, சார்..” “இப்போ கேரளால இருக்குற தலச்சேரில பிறந்த வங்க.. அப்பாவுக்கு வசதி மட்டுமில்ல.. முற்போக்கு எண்ணமும் இருந்ததுனால, படிக்க வெச்சாரு...

      சும்மா பள்ளிக்கூடம், கல்லூரினு நிக்கல.. அமெரிக்காவுல உள்ள மிச்சிகன்ல ஆய்வுப்படிப்பு படிச்சு முனைவர் பட்டம் வாங்குனாங்க..”

      “அங்கலாம் அவங்களுக்கு பிரச்சனை எதுவும் வரலயா, சார்...” “வந்துச்சு... பொண்ணுங்குறதுனால வந்துச்சு.. இத்தனைக்கும் தாவரவியல்ல உலகத்துலயே முத முதல்ல முனைவர் பட்டம் வாங்குனவங்களே அவங்க தான்.. ஒரு பொண்ணு நம்ம இடத்துக்குள்ள வர்றாங்க ளேன்னு ஆண்கள் நினைச்சாங்க..”

    “இந்தியாவுல மத்தளம் நிலைமைதான சார்..” “பரவாயில்லையே... எங்க தலைமுறையே மறந்த போனதுதான் இந்த ‘மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி’ங்குறது..”

    “எங்க தாத்தா சொல்வாரு சார்..” “இந்தியாவுல பிற்படுத்தப்பட்ட சாதில இருந்து வர்றத உயர்சாதி மனநிலைல இருந்தவங்க விரும்பல..”

     “அதையும் மீறி சாதிச்சுட்டாங்களே சார்..” “ஆமா... விடுதலை கிடைச்சபிறகு, இந்தியாவுல வந்து ஆய்வு செய்ய பிரதமர் நேரு கூப்புட்டாரு...

     தன்னோட ஆய்வுகள இங்கயும் செஞ்சாரு... நம்ம நாட்டு தாவர வகைகளைப் பாதுகாக்குறதுக்கான ஆய்வுகள்ல இறங்குனாங்க..

    கோயம்புத்தூருல இருக்கும் கரும்பு பரிசோதனை நிலையத்துல அவரோட ஆய்வுகள் ரொம்ப முக்கியமா இருந்துச்சு...

    பப்புவா நியூ கினியாங்குற நாட்டுல கிடைக்குற கரும்புதான் இனிப்பு அதிகம்... அது மாதிரியான ஒரு கரும்பு வகைய இந்திய மண்ணுல உரு வாக்குன பெருமை நம்ம ஜானகி அம்மாவுக்கு உண்டு..”

    “இவ்வளவு செஞ்சும் அவரு பொண்ணு. பிற்படுத்தப் பட்ட சாதிங்குறதுனாலதான் பெரிசா தெரியலையா, சார்..” “ஆமா...

    ஆனா எதுவுமே தடையில்லனு அவங்க உடைச்சுக் காட்டியிருக்காங்க..” “வெளிநாடுகள்ல அவரப் பத்தி என்ன நினைக்குறாங்க, சார்..”

     “போன வருஷம், தோட்டக்கலையின் நாயகிகள்னு 11 பேர் கொண்ட ஒரு பட்டியல வெளியிட்டாங்க... அதுல ஜானகி அம்மாள் பேரும் இருக்கு..” தொடர்ந்தார் ஆசிரியர்,

    “இங்கிலாந்தின் பல பகுதி களில், குறிப்பாக சர்ரே மாநிலத்தில், மணக்கும் பூக்கள் உருவாகும் செடிகள் இருக்கு... அதுல பல செடிகள் இந்திய மண்ணில் உருவானது..

     தன்னோட ஆய்வுக்காக இங்கிலாந்துக்கு ஜானகி அம்மாள் கொண்டு போனாங்க... அதுல ஒரு பூவுக்கு இவங்க பேரையே வெச்சுருக்காங்க..” “சார்.. சார்..

    எழுதி வெச்சுருந்தது கிடைச்சுருச்சு... அதுல இன்னொரு ஜானகி அம்மாவும் இருந்தாங்க...கே.பி. ஜானகியம்மானு போட்டுருந்துச்சு..” “அவங்க விடுதலைப் போராட்ட வீராங்கனையாச்சே... கூகுள் அவங்களயும் தந்துச்சா..” என்றவாறே பாடக் குறிப்பைக் கையில் எடுத்துக் கொண்டு நகர்ந்தார்.