articles

மரங்களின் மனுஷி - முனைவர் ஜி.சத்திய பாலன்

ஜூலை 28 உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள். சவால்கள் நிறைந்த  சூழலியல் சவால் களை பற்றிய விவாதம் உலகெங்கும்  நடந்து கொண்டு உள்ள இந்த  காலகட்டத்தில், மரங்கள் மூலம் வனங்களை உருவாக்கிய மனுஷி வாங்கரி மாத்தாய். அவர்  வாழ்வும், நோபல் பரிசு பெற்ற  நிகழ்ச்சியில் அவர்  ஆற்றிய உரையும் இயற்கை பாதுகாப்பு கருத்தியலில் முக்கியமானதாகும். தனது வாழ்நாள்களில் 30 ஆண்டு களில் 3 கோடி மரங்களை நட்டு சாதனை யாக்கியவர். இயற்கையை பாதுகாப்பது பெண்களின் தார்மீக உரிமை என்ற கருத்தி யலை உருவாக்கியவர்.  பெண்களுக்கான பசுமைப் பட்டை (Green belt) இயக்கத்தை தொடங்கியவர். சூழலியல் சார்ந்த போராட் டங்களை முன்னெடுத்து அதில் பெண் களை பங்காற்றச் செய்தவர்.  கென்யாவில் 2002 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெற்று சுற்றுச்சூழல் இணை யமைச்சராக பதவி வகித்தவர்.   2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வாங்கரி மாத்தாய்க்கு வழங்கப்பட்டது.  2004  டிசம்பர் 10ஆம் தேதி   அப்பரிசினை  பெற்ற போது சூழலைப் பாதுகாக்க நாம் என்ன  செய்ய  வேண்டும் என அவர் ஆற்றிய உரை மிகவும் முக்கியத்துவம்  வாய்ந்ததாகவும்  சூழலியல் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த அக்கறையை  மேம்படுத்துவதாக வும் அமைந்துள்ளது.    

அவரது உரையில், நான்  கென்யாவில் இகதி என்னும் ஒரு கிராமத்தில் பிறந்தவள். இன்று நம் முன் உள்ள  கேள்வி மக்கள் ஆட்சிக்கும், சுற்றுச்சூழலுக்கும்  மற்றும் உலக அமைதிக்கும்   உள்ள தொடர்புகள் அதன் விளைவுகள் பற்றியது தான். உலகில் சூழலியலை காப்பாற்றவும் நமது தேவை களை பூர்த்தி செய்யவும்   மரங்கள் நமக்கு அவசியம் ஆகின்றன. சூழலியல் காக்கும் பணியை செய்யும் போதெல்லாம் அதிகமாக மனித உரிமை மீறலை சந்தித்தோம் . கூட்ட மாகக் கூடி மரங்களை நடுவதற்கும் அரசு தடை செய்தது. ஆதலால் அரசின் சட்டங் களை எதிர்க்க முடிவு செய்தோம். அடக்கு முறைக்கு உள்ளானோம். ஆனாலும்  ஊர் ஊராக சென்றோம். எளிய பெண்களை சந்தித்தோம்.

அவர்கள் அறிவார்கள்

ஆப்பிரிக்கா முழுவதிலும், பெண்கள்  நிலத்தை உழுவதற்கும் தங்கள் குடும்பங்க ளுக்கு உணவளிப்பதற்கும் பொறுப்பாளர்க ளாக உள்ளனர். தங்களது இயற்கை வளங்கள் எப்படி சூறையாடப்படுகிறது என்பதை பெண்கள் தான் அறிந்தவர்களாக இருக்கி றார்கள். அதேபோல் சுற்றுச்சூழலின் சீரழிவு மற்றும் வீட்டு உணவுப் பயிர்களை வளர்ப் பதை மாற்றியமைக்கும் வணிக விவசாயத் தின் அறிமுகம் அதன் காரணங்களையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.ஆனால் சர்வ தேச வர்த்தகம் மற்றும் உலகமயமாக்கல் போன்ற காரணிகள் இந்த சிறிய அளவிலான விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பொருட் களின் ஏற்றுமதி விலையை நியாயமற்று நிர்ணயிக்கிறது. நியாயமான வருமானத்தி ற்கு உத்தரவாதம் அளிக்க முடியாத சூழலை யும் உருவாக்கியுள்ளது. சுற்றுச்சூழல் அழிக்கப்படும்போது, கொள்ளையடிக்கப்படும்போதும் அல்லது தவறாக நிர்வகிக்கப்படும்போதும் நம் வாழ்க் கைத் தரத்தையும் எதிர்காலச் சந்ததி யினரின் வாழ்க்கைத் தரத்தையும் கேள்விக் குள்ளாக்குவதாக உள்ளது.         பெண்களால் அடையாளம் காணப்பட்ட சில ஆரம்ப அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய மரம் நடுதல் என்பது இயற்கையான தேர் வாக மாறி உள்ளது. மேலும், தொழில் துறை மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் ஆகியவற்றை விட  பொருளாதார நீதி,  சமபங்கு மற்றும் சுற்றுச்சூழல் ஒருமைப்பாடு ஆகியவை   அதிக மதிப்புடையவை என்பதை நாம் அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும். பசுமைப் பட்டை இயக்கத்தால் எடுத்துக்காட்டப்பட்ட வளர்ச்சிக்கான முழுமையான அணுகுமுறையானது, ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலும் அதற்கு அப்பாலும் இதை  ஏற்றுக்கொண்டு பின்பற்ற லாம்.  இதற்காகவே வாங்கரி மாத்தாய் அறக்கட்டளையை நிறுவினேன்.  நிறைய சாதித்தாலும் இன்னும் செய்ய வேண்டியது அதிகம் என்பதை உணர்கிறேன்.  

தவளைகளின் முட்டை

எனது சிறுவயது அனுபவத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன், நான் என் அம்மா வுக்கு தண்ணீர் எடுக்க எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள ஓடைக்குச் சென்றேன்.  ஓடையில் இருந்து நேராக தண்ணீர் குடிப் பேன். செடிகளின் இலைகளுக்கு இடையில் விளையாடி, தவளைகளின் முட்டைகளை மணிகள் என்று நம்பி அவற்றை எடுக்க  முயற்சித்தேன்.  ஆனால் ஒவ்வொரு முறை யும் நான் என் சிறிய விரல்களை அவற்றின் கீழ் வைக்கும்போது அவை உடைந்து விடும்.  பின்னர், நான் ஆயிரக்கணக்கான குஞ்சுகளை பார்த்தேன்: கருப்பாகவும்  சுறு சுறுப்பான மற்றும் பழுப்பு நிற பூமியின் பின்னணியில் தெளிவான நீரில் அது  சுழலும். என் பெற்றோரிடமிருந்து நான் பெற்ற உலகம் அது.இன்று, 50 ஆண்டுக ளுக்கும் மேலாக, ஓடை வறண்டு விட்டது, பெண்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் நடந்து செல்கிறார்கள், குழந்தைகள் இழந்ததை ஒருபோதும் அறிய மாட்டார் கள். தவளைக் குஞ்சுகளின் வீட்டை மீட்டெ டுப்பது மற்றும் நம் குழந்தைகளுக்கு அழகு மற்றும் ஆச்சரியம் நிறைந்த உலகத்தை மீண்டும் வழங்குவது என்பது ஒரு சவாலான விஷயம். ஆனால் அதை நோக்கிய சமூக நகர்வுகளை நாம் முன்னெடுக்க வேண்டும். மேற்கண்டவாறு தனது உரையை முடத்தார்.                                                    

சிட்டுக்குருவியின்  சீரிய செயல்

தனது பசுமைப் பட்டை இயக்கம் துவக்கி ஆப்பிரிக்கப் பெண்கள்  மரம் நடுவதை  தூண்டுவதற்கும் அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் ஆப்பிரிக்க நாடோடிகளின் “வானம்பாடி சிட்டுக்குருவி” கதையை சொல்லுவார்.  அடர்ந்த வனத்தில்  காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. பற்றிய தீயில் நிறைய விலங்கு கள் இறந்தன. சில விலங்குகள்  புகைமண்ட லத்திலிருந்து தப்பி  வெளியேறின. புகை மண்டலத்திற்கு இடையே ஒரு சருகு  ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்வதும் வருவதுமாக இருந்தது. சற்று உற்று நோக்கிய பிறகே  தெரிந்தது அது ஒரு சிட்டுக்குருவி என்று. அந்தக் குருவி அருகில் இருந்த குளத்திலிருந்து தன் சிறிய அலகினில் நீரை எடுத்துச் சென்று தீயின் மீது தெளித்தவாறு இருந்தது. தீயில் கருகும் அபாயம் இருந்தும் அந்த சிட்டுக்குருவி தன் கடமையை  செய்துகொண்டிருந்தது. அந்த  ஆப்பிரிக்க நாடோடி சிட்டுக்குருவி தான் எனது எண்ணங்களின் தூண்டுதல் என்பார் வாங்கரி மாத்தாய். அவர்  மரங்களின் மனுஷி. தன் வாழ்க்கையில் சாதித்து காட்டியவை அனைத்தும் சூழலியல் அத்தியாயத்தில் மாபெரும் முன்னெடுப்பு ஆகும்.

கட்டுரையாளர் : மருந்தியல் உதவிப் பேராசிரியர்