articles

img

சமூக விரோதச் செயல்கள் அதிகரிப்பது ஏன்?

நிரந்தர வேலைவாய்ப்பு கனவாக மாறி  வருகிறது. இதனால் இளை ஞர்கள் சமூக விரோத செயல்களில்  ஈடுபடுவது அதிகரிக்கிறது. எனவே, வேலைக்  காக காத்திருக்கும் அனைவருக்கும் சமூக பாதுகாப்புடன் கூடிய புதிய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஆட்சியாளர்களின் கொள்கை மாற வேண்டும்; நிதி ஒதுக்க வேண்டும். வேலையில் இருப்பவர்களை துரத்தும் வகையிலேயே மோடி தலைமையிலான ஆட்சி செயல்படுகிறது. சமவேலைக்கு சம  ஊதியம் மறுக்கப்படுகிறது. சுரண்டல் அதி கரித்துள்ளது. கிராமப்புற வறுமை ஒழிப் பில் மிகப்பெரும் பங்களிப்பு செய்த நூறு  நாள் வேலை திட்டத்திற்கான நிதியை ஒன்றிய  அரசு குறைத்துள்ளது. தற்போது 21 நாள் மட்டுமே வேலை வழங்குவதை மேலும் குறைக்க உள்ளது. இத்திட்டத்தை சட்டப்படி 100 நாள் வேலை, சட்டப்படியான கூலியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நில உச்சவரம்புச் சட்டத்தின் வாயிலாக 20 லட்சம் ஏக்கர் நிலம் மக்களுக்கு கிடைத்தி ருக்க வேண்டும். ஆனால், 2.10 லட்சம் ஏக்கர்  உபரி நிலம் என்று அறிவித்து, 1.90 லட்சம்  ஏக்கர் நிலம் மட்டுமே விநியோகம் செய்யப்  பட்டது. இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்  படி, 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தலா 2 ஏக்கர்  வீதம் 25 லட்சம் நிலமற்ற விவசாய தொழிலா ளர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார். 2 லட்சம் ஏக்கர் மட்டுமே  விநியோகம் செய்யப்பட்டது. நின்றுபோன நிலவிநியோகம் மீண்டும் நடக்க வேண்டும். மாநாட்டிற்கு தலைமை தாங்கி ‘மெஸ்’ மாநில ஒருங்கிணைப்பாளர் பெ.சண்முகம் பேசியதிலிருந்து...

மாநாட்டிற்கு தலைமை தாங்கி ‘மெஸ்’ மாநில ஒருங்கிணைப்பாளர் பெ.சண்முகம் பேசியதிலிருந்து...