பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரி மமே ரத்து செய்யப்படக்கூடும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கெ னவே புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை, இருக்கிற வாடிக்கையாளர்களிடமும் நிதி பெறத் தடை என்று பல தடைகளையும் ரிசர்வ் வங்கி விதித்திருக்கிற நிலையில், அந்த நிறுவனத்தைத் தொடங்கியவரும், அதன் மிகப்பெரிய பங்குதாரருமான உத்தரப் பிரதே சத்தைச் சேர்ந்த விஜய் ஷேகர் ஷர்மா, நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து(போர்டு) விலகியிருக்கிறார். ரிசர்வ் வங்கியின் வற்புறுத்தலால்தான் விலகினார் என்று ஊகங்கள் வெளியாகியிருக்கிற நிலையில், பேடி எம் பேமெண்ட்ஸ் வங்கியை நிர்வகிக்க ரிசர்வ் வங்கி தரப்பு நிர்வாகி நியமிக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகி, அதன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனி கேஷனின் பங்கு விலை மேலும் சரிந்திருக்கிறது.
உலகின் மோசமான பங்கு வெளியீடு
ஒரு பங்கு ரூ.2,150 என்ற விலைக்கு விற்று ரூ.18,300 கோடியை ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனம் (பேடிஎம் என்ற பெயரிலேயே) திரட்டியது. பங்கு விற்பனை முடிந்து, பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சந்தைக்கு வந்த முதல் நாளிலேயே மிகமோசமாகச் சரிந்ததுடன், தொடர்ந்து சரிவைச் சந்தித்த அதனை, ‘கடந்த ஒரு தசாப்தத்தில் உலகின் மிகமோசமான பங்கு வெளி யீடு’ என்று உலகளாவிய ஏடுகள் வருணித்தன. இன்று வெளியீட்டு விலையிலிருந்து 80 சதவீதத்திற்கும் அதிக மாகக் குறைந்து, நானூற்றுச் சில்லரை ரூபாயில் அந்தப் பங்கு இருக்கிறது. அந்தப் பங்கில் முதலீடு செய்தவர்களுக்கு கிட்டத்தட்ட ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருந்தாலும், அதைப் பற்றி எந்த ஊடக மும் பேசவில்லை. இதே ஊடகங்கள்தான், பொ துத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்கு கள் விலை சரிந்தபோது, நிறுவனத்தையே இழுத்து மூடப்போவதுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்தின. எல்ஐசியில் விற்கப்பட்டது வெறும் 3.5 சதவீத பங்குகள் என்றாலும், பங்கு விலை சரிவை 100 சதவீத பங்குக ளுக்கும் கணக்கிட்டு மக்களை பயமுறுத்தினார்கள் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
பேமெண்ட்ஸ் வங்கி என்றால் என்ன?
முக்கியத்துவம் அளித்துச் செய்தி வெளியிட வில்லை என்பது மட்டுமல்ல, ஒன்97 கம்யூனிகே ஷன்ஸ் நிறுவனம் பல நிறுவனங்களை நடத்துகிறது, அதில் பேடிஎம் வங்கிக்கு மட்டும்தான் பிரச்சனை என்று ஆறுதல் வேறு சொல்கிறார்கள். உண்மைதான், பேடிஎம், பேடிஎம் மால்(இணையவழி விற்பனையகம்), பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உட்பட 8 நிறுவனங்க ளை இது நடத்துகிறது. ஆனாலும், இதன் மிகப் பெரும்பகுதி வருவாய் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி யைச் சார்ந்துதான் வருகிறது. இங்கு சில செய்திகளைப் புரிந்துகொள்ள வேண்டி யுள்ளது. முதலில் பேமெண்ட்ஸ் வங்கி என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். வங்கிச் சேவைகளை அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்வதற்கு என்று கூறி, 2015இல் பேமெண்ட்ஸ் வங்கிகளும், 2016இல் சிறு நிதி வங்கிகளும்(ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்) அனுமதிக்கப்பட்டன. இவற்றில், சிறுநிதி வங்கிகள் என்பவை சிறு கடன்களை அளிக்கும் நோக்கில் அனுமதிக்கப்பட்டன. ஆனால், பேமெண்ட்ஸ் வங்கிகள் என்பவை, வங்கிச் சேவைகளை அளிப்பதற்காக அனுமதிக்கப் பட்டன. அதாவது, அவை மக்களின் சேமிப்பை வரம்புக் குட்பட்டு (ரூ.2 லட்சம் வரை) திரட்டலாம்; ஆனால், கடன்களோ, கிரெடிட் கார்டுகளோ வழங்க முடியாது. சேமிப்பைத் திரட்டிவிட்டு, கடன் அளிக்காமல் எப்படி வட்டி தர முடியும் என்று அப்போதே வல்லுநர்கள் சுட்டிக் காட்டினார்கள். 41 நிறுவனங்கள் விண்ணப்பி த்து, 11 நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. அதில் ஒன்று இந்திய அஞ்சல் துறை. அது ஏற்கெனவே சேமிப்புக் கணக்குகளை நிர்வகித்து வந்த அமைப்புதான் என்பதால், நியாயமாக அதற்கு முழுமையான வங்கி உரிமம்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எல்ஐசிக்கு மறுக்கப்படுவதைப் போலவே அதற்கும் மறுக்கப்பட்டது. அதனால், அதை புதிய வங்கியாகக் கருதத் தேவையில்லை.
தேவையற்ற ஆணிகள்தான்
எஞ்சிய 10 நிறுவனங்களில் 3 செயல்பட முடியாமல் உரிமத்தைத் திருப்பியளித்துவிட்டன. மேலும் இரண்டு நிறுவனங்கள் சிறிது காலம் செயல்பட்ட பின், தொடர்ந்து செயல்பட முடியாமல் மூடப்பட்டு விட்டன. மீதமுள்ள 5இல் ஒன்றுதான் இந்த பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி. ஒரு பொருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றால், அதிகரிக்க வேண்டியது சரக்கைத்தானே தவிர, கடைகளை அல்ல. ஏற்கெ னவே பாதுகாப்பாக இயங்கி வருகிற, மிகப் பெரிய பொதுத்துறை வங்கிகளிலேயே உட்கட்டமைப்பு, ஊழியர்கள் ஆகியவற்றை அதிகரித்து அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவைகள் அளித்துவிட முடியும் எனும்போது, இவை தேவையற்ற ஆணிகள்தான் என்பதை அனுபவம் உணர்த்தியிருக்கிறது. ஆனால், நோக்கம் பாதுகாப்பான சேவையாக இருந்தால்தானே அதைச் செய்ய வேண்டும்?
பிரதமரின் ஆதரவு
அது இல்லை என்பதைத்தான், பேடிஎம் வங்கி யில் மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடு கள், விதிக்கப்பட்ட அபராதங்கள், தடைகள் ஆகிய அனைத்திற்குப்பின்னும் அது செயல்பட அனுமதிக்கப் பட்டதும், அதன் விளம்பரத்தில் பிரதமர் மோடியே இடம்பெற்றதும் உணர்த்துகின்றன. 2018இலேயே முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, புதிய வாடிக்கை யாளர்கள் சேர்க்கப்படுவதைத் தடை செய்த ரிசர்வ் வங்கி, 2019இல் அந்தத் தடையை நீக்கியது. தொடர்ந்த முறைகேடுகளால் 2021இல் ரூ.1 கோடி அபராதம் விதித் தது. ஆனாலும், 2023இல் நமோ பாரத் ரயில்களில் பயணிப்பதற்கான அட்டையை வழங்கும் உரிமையை பேடிஎம் வங்கிக்கு அளித்து, அதனை பிரதமரே தொடங்கி வைக்கவும் செய்தார்.
மெகா ஊழல்
பிரதமரே ஆதரிக்கிறார் என்றால், அந்நிறுவனம் செய்த தவறுகள் சிறியதாக இருந்திருக்கும் என்றுகூடத் தோன்றலாம். ஆனால், ஒரே வருமானவரிக் கணக்கு (பான்) எண் குறிப்பிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் இருந்தது உட்பட ஏராளமான தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மோடி திட்டங்களின் பய னாளிகள் 7.5 லட்சம் பேர் ஒரே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை நினைவுகூர்ந் தால், இதுவும் அதைப்போன்ற ஊழலே என்பது புரியும். அது மட்டுமின்றி, பல லட்சம் கணக்குகள் உரிய ஆவ ணங்கள் இன்றியே பயன்பாட்டில் இருந்திருக்கின் றன என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருக் கிறது. கேஒய்சி எண்ணும் வாடிக்கையாளர் ஆவ ணங்கள், கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவ டிக்கைகளைத் தடுப்பதற்காகவே உலகம் முழுவ தும் கொண்டுவரப்பட்டன என்பதிலிருந்து, இந்தக் கணக்குகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டு இருக்கக் கூடும் என்பதும், இத்தனை முறைகேடுகளுக்குப் பின்னும் இவ்வளவு காலம் பேடிஎம் வங்கி செயல்பட அனுமதிக்கப்பட்டதற்கே இத்தகைய உள்நோக்கம்தான் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்பதும் புரியும்.
விளம்பரங்களில் மோடி இடம் பெறுகிற அளவுக்கு, விஜய ஷேகர் ஷர்மா மோடிக்கு ‘வேண்டப்பட்டவர்’ என்று பலமுறை ‘சுட்டிக்காட்டப்பட்ட’ பின்னும், ரிசர்வ் வங்கி, இத்தகைய நடவடிக்கையை எடுக்கிறது என்றால் ஒன்று - செய்யப்பட்டிருக்கிற முறைகேடுகள் அவ்வளவு பெரியவையாக இருந்திருக்க வேண்டும், அல்லது, இந்நிறுவனத்தின் மூலம் செய்யத் திட்ட மிடப்பட்டிருந்த ‘பணச் சலவை’ போன்ற, மறைமுகத் திட்டங்கள் நிறைவு பெற்றிருக்கக்கூடும்.
கற்பனைக்கு எட்டாத வளர்ச்சி- எப்படி?
அப்படி சந்தேகிப்பது சரிதான் என்னுமளவுக்கு, மோடி ஆட்சிக்கு வந்த பின்தான் பேடிஎம் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்தது. 2000இல் தொடங் கப்பட்ட ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் 10 ஆண்டுகளுக்கு என்ன செய்தது என்றுகூடப் பதிவாகாத அளவுக்கு பெயரளவுக்கான நிறுவனமாகவே இருந்துள்ளது. 2010இல் பேடிஎம் தொடங்கப்பட்டாலும்கூட மிகப் பெரிய வளர்ச்சியெல்லாம் இல்லை. ஆனால், 2014க்குப் பிந்தைய வளர்ச்சி என்பது கற்பனைக்கு எட்டாத அள வுக்கு உள்ளது. குறிப்பாக 2014இல் பேடிஎம் வாலட்டை இந்திய ரயில்வே அங்கீகரித்தது, 2016இல் பணமதிப்பு நீக்கத்திற்குப்பின் டிஜிட்டல் பரி வர்த்தனைகளுக்கு ஆதரவான பேடிம்-மின் விளம்பரத்தில் பிரதமர் மோடி இடம் பெற்றது, ஃபாஸ்ட் டேக் சேவைகளில் பேடிஎம்-க்கு முக்கிய இடம் அளித்தது, நமோ ரயில்களின் பயண அட்டை வழங்க பேடிஎம்-மை தேர்ந்தெடுத்து, மோடியே தொடங்கி வைத்தது என்று மோடி அரசின் செல்லப் பிள்ளையாக, ஊட்டச் சத்து அளித்து வளர்க்கப்பட்டது பேடிஎம். சரி யாகச் சொன்னால், அரசால் பரிந்துரைக்கப்படுகிற நிறுவனம் என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.
ஊழலின் புதிய வடிவம்
அதையெல்லாம் கடந்து, மீண்டும் மீண்டும் விதி மீறல் செய்து தடை, அபராதம் என்று விதிக்கப்பட்டா லும், ஷெட்யூல்ட் வங்கி தகுதி அளிக்கப்பட்டது போன் றவை கவனிக்கத்தக்கவை. அரசின் இப்படியான உத விகளின் பயனாகவே, இன்று 2 கோடிக்கும் அதிக மாக ஃபாஸ்ட் டேக் கணக்குகள் பேடிஎம்-மிடம் உள் ளன. இவற்றுக்கான வைப்புத் தொகையாக ஒரு ஃபாஸ்ட் டேக்குக்கு ரூ.500 வரை செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு வட்டிகூட அளிக்கத் தேவையில்லை என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு அட்டை வழங்கவும் ரூ.100 கட்டணம் வேறு வசூலிக்கப்பட்டது. இன்று அனைவரை யும் புதிய அட்டை வாங்கிக்கொள்ள ரிசர்வ் வங்கி அறி வுறுத்தியுள்ளது. அந்த 2 கோடிப் பேரும் மீண்டும் ரூ.100 கட்டணம் செலுத்துவார்கள் என்பது, ஊழலின் புதிய வடிவமாகவே தோன்றுகிறது.
இப்போது எப்படி வெளிவந்தது?
இந்த முறைகேடுகளின்மீது நடவடிக்கை எடுக்க பலமுறை ரிசர்வ் வங்கி முயற்சித்தும், ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போட்டதாகவும், அதனாலேயே பல நட வடிக்கைகள் பின்பு கைவிடப்பட்டதாகவும் நிதித்துறை யைச் சேர்ந்த விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். இப் போதேகூட, நிதியமைச்சகம் தலையிட்டுத் தடுக்க முயற்சித்து, இதற்கு மேல் முடியாது என்று ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டதாகவே கூறப்படுகிறது. ஆட்சிக் காலம் முடிகிறது என்பதும் துணிச்சலுக்குக் காரண மாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், பேடிஎம் மைப் பாதுகாக்க இந்த அரசு எடுத்த முயற்சிகள் என்பது, அதன்மூலம் நடைபெற்ற ஊழல்களை மறைக்கவே. எனவே, பேடிஎம் என்பது ஒரு தனிப்பட்ட தனியார் நிறுவனத் தின் வீழ்ச்சி அல்ல, மிகப்பெரிய ஊழலின் முடிவே!