articles

img

இதுதொடர்பான மக்கள் கருத்து தீக்கதிர் வாசகர்களுக்காக....

அ.மோகன்ராஜ்

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய  வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றம் முடிவு செய்தபோது, மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அதை அமல்படுத்த மாநில ஆளுநர் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பியது வன்மையான கண்டனத்திற்குரியது. செல்போனில் ஆன்லைன் ரம்மி குறித்து திரும்பத் திரும்ப  விளம்பரங்கள் வருவதால் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மாட்டிக் கொள்கிறார்கள். இருக்கும் அனைத்து பணத்தையும் இழந்த பின்பு தான் தாங் கள் செய்யும் தவறை உணர்கிறார்கள். அதன்பின் அவர்கள் வாழ வழியில்லாமல், தற்கொலை செய்துகொள்ளும் சம்ப வம் தொடர்கிறது. தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி விளை யாட்டுக்கு தடை விதித்தது சரியானது. ஆனால் அதை ஏற்க  மறுக்கும் ஆளுநர் ரவி செயல் வன்மையான கண்டனத்திற் குரியது. உடனடியாக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண்குமார்

ஜனநாயகத்திற்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் ரவி தொடர்ந்து செயல்படுகி றார். மாநில அரசின் நல்ல செயல்பாடு களை கெடுக்கின்ற வகையில், அவரின் நடவடிக்கை இருந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தான் தற்போது தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட ஆன்லைன்  ரம்மியை தடை செய்யும் மசோதாவிற்கு  கையெழுத்து இடாமல் திருப்பி அனுப்பியுள்ளார். யாருக்கும் பயன்படாத ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது, தற்போது தமிழக அரசின் மசோதாவை  திருப்பி அனுப்பியது வன்மையான கண்டனத்திற்குரியது. இதேபோல் தான் நீட் தேர்வு குறித்த மசோதாவிற்கும் இது வரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது மக்களுக்கும், மாணவ - மாணவியர்களுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படாத தமிழக ஆளுநர் ரவி பதவி  விலக வேண்டும். தமிழக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். தமிழகத்திற்கு ஆளுநரின் தன்னிச்சையான செயலால் அவர் தமிழகத்திற்கு தேவையா? என்ற கேள்வி எழுகிறது.

பாரதி

தமிழ்நாடு ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோ தாவை திருப்பி அனுப்பியது கண்டனத்துக்குரியது. ஏற்க னவே நான் வசிக்கும் பள்ளிபாளையம் பகுதியில் ஆன் லைன் ரம்மியால் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாட்டில் 44 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ மாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால், இன்னும் தீவிர விசாரணை மேற்கொண்டால் தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, ஒன்றிய அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்.

கார்த்திக்

தொடர்ந்து எங்கள் பகுதியில் உள்ள பல இளைஞர்கள், ஏன் குறிப்பாக என்னுடைய நண்பர்களே ஆன்லைன் ரம்மி  உள்ளிட்ட பண இழப்பு அபாயம் உள்ள விளையாட்டு களை தொடர்ந்து விளையாடி வருகின்றனர். பலமுறை அவர்களிடம் நான் எடுத்துக் கூறியும், அவர்கள் கண்டு கொள்ளாமல் இதனுடைய அபாயம் புரியாமல் விளையாடி வருகின்றனர். இதுபோன்ற இளைஞர்கள் வாழ்க்கையை சீரழிக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யாமல் ஆளு நர் அவர்கள் ரம்மி தடை மசோதாவை திரும்ப அனுப்புவது வேதனையாக உள்ளது.

சுந்தரம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டில், அடிமையான இளை ஞர்களை பாதையில் இருந்து விலகி நிறைய குற்றங்கள் செய்வதற்கான சூழலை உருவாக்குகிறது. பணத்தை இழந் தவர்கள் சொந்த வீட்டில் கூட திருடுகிற நிலை ஏற்பட்டுள் ளது. இதன் அடுத்து தீவிரவாத இயக்கத்திற்கு கூட செல்லும் அபாயம் உள்ளது. இவ்வளவு மோசமான ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என அரசு அனுப்பி னால், அதனை ஆளுநர் திருப்பி அனுப்புவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

மாரிமுத்து

இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால், தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் நடுத்தர தெருவிற்கு வந்துள்ளன. பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நான்கு மாதமாக ஆளுநர் இந்த மசோதாவை பதுக்கி வைத்துவிட்டு, திருப்பி அனுப்புகிறார். அரசு அவசர சட்டம் போடுவதே இளைஞர்கள் தற்கொலை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் ஆளுநர் கிடப்பில் போடுவது, திருப்பி அனுப்புவது என்றால் என்ன  சொல்வதென்றே தெரியவில்லை. இந்த மசோதாவை முழு மையாக படித்துப்பார்த்தாரா? என்ற கேள்வி எழுகிறது.

வெங்கடேசன்

ஆன்லைன் வினையாட்டில் இப்போது குழந்தைகள் கூட விளையாடுகிற நிலை வந்துள்ளது. 12 வயது, 15 வயது சிறுவர்கள் விளையாட்டிற்கு அடிமையாகியிருக்கிறார் கள். அதிகாரப்பூர்வமாக தெரிந்தே இதுவரை 44 பேர் தமிழ் நாட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஆளு நர் திருப்பி அனுப்பியதை மீண்டும் வாங்கி அதனை சட்ட மாக்கப்பட வேண்டும். இனி ஒரு உயிர் கூட இந்த விளை யாட்டால் பறிபோய்விடக்கூடாது. இல்லையென்றால் ஆளுநர் மீது பொதுமக்கள் மிகப்பெரிய எதிர்ப்பை வெளிப் படுத்துவர்கள். கண்டிப்பாக ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும்.

விஜய் 

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி என்கிற சீட்டு விளை யாட்டு, பல்வேறு உயிர்களை காவு வாங்கிக்கொண்டி ருக்கிறது. பல குடும்பங்கள் சீரழிந்து கிடக்கிறது. ஆளு நர் மசோதாவை திருப்பி அனுப்பியதை ஏற்க முடியாது. தமி ழக அரசு கொண்டு வந்த தடை மசோதாவிற்கு உடனடி யாக கையெழுத்திட வேண்டும்.

தமிழ்நாடு ஆளுநர் தன் னுடைய பாஜக கொள்கை களை செயல்படுத்தி வரு கிறார். தமிழ்நாடு மக்களை தொடந்து அவமதித்து வரு கிறார். தமிழ்நாட்டு மக் களின் வரிப்பணத்தில் வசிக்கும் ஆளுநர் ரவி தமிழ் நாடு மக்களுக்கு எதிராக செயல்படுவது வேதனைக்குரி யது. ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் சட்டத்தை திருப்பி அனுப்பும் செயல் தமிழ்நாட்டை மகாபார தம், ராமாயணம் என பின்னுக்கு தள்ளப்பார்க்கிறார்கள்.

வி.விக்னேஷ்

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆன் லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து வருகின்றனர். உழைக்க துடிக் கும் இளைஞர்களை சோம்பேறியாக் குகிறது. இளைஞர்களின் வாழ்க் கையை சீரழிக்கும் உயிரை குடிக்கும் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க தடை யாக இருக்கும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண் டும். தமிழ்நாடு மக்களின் நலனில் அக்கறை இல்லாத ஆளு நர் ஆர்.என்.ரவி.

லட்சுமணன்

ஆளுநருக்கு அனுப்பப்பட்ட ஆன் லைன் ரம்மி தடை மசோதாவை, ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இது தமிழ்நாட்டு இளைஞர்களை வஞ்சிக் கும் செயலாகும். இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் ஆன்லைன் ரம்மி  தடை மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும்.