articles

img

இந்தியாவும் அண்டை நாடுகளும்! மோடி அரசு கற்க வேண்டிய பாடம்!

2021 இல் மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தது, 2022-இல் பாகிஸ்தானில் இம்ரான் கான் பதவி நீக்கம், 2023-இல் இலங்கையில் ராஜபக்சே வெளியேற்றம், பிறகு இந்தி யாவின் மிகவும் நட்புறவான சோலியின் அரசை மாற்றிய மாலத்தீவு தேர்தல், நேபாளத்தில் சர்மா ஒலி அரசாங்கம் பதவி ஏற்பு, தற்பொழுது வங்கதேசத் தில் ஷேக் ஹசீனா திடீர் வெளியேற்றம். இப்படி 2020 ஆம் ஆண்டில் தொடக்கத்திலிருந்து இந்தியா, அதன் அண்டை நாடுகளில் ஒன்றன் பின் ஒன்றாக அதிர்ச்சியை சந்தித்து வருகிறது.

ஹசீனா அரசாங்கத்தின் மீது இந்தியா அபார நம்பிக்கை கொண்டிருந்தது. இப்போது அவருடைய வாரிசுகளை கண்டறியத் துடிக்கிறது. தெற்காசியா வில் ஏற்பட்டுள்ள தீவிர மாற்றங்கள் இந்தியாவில் ஏற் படுத்தும் தாக்கங்கள் என்ன? அதன் விளைவுகளில் இருந்து  எப்படி பாதுகாத்துக் கொள்வது? எத்தகைய படிப்பினைகளை பெறுவது என்பதுதான் இன்று அதற்கு முன் உள்ள முக்கியக் கேள்வி!

வேலியின்  ஒரு பக்கத்தில்  நிற்கும் இந்தியா

அண்டை நாடுகளில் முக்கிய மாற்றங்கள் நிகழும் போது ஒரு நாடு உறங்கக் கூடாது. டாக்காவில் உள்ள  இந்திய தூதரகம் மற்றும் சிட்டகாங், ராஜ ஷாகி, குல்னா மற்றும் செல் ஹெட் ஆகிய நான்கு துணைத்  தூதரக அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள்  ஹசீனா அரசாங்கத்திற்கு எதிரான  மக்கள் கோபத்தின் அடித்தளம் அதிகரித்து வருவதை கவனித்து இந்தி யாவை எச்சரித்து இருக்க வேண்டும். கடந்த சில வாரங்கள் மட்டுமல்ல, கடந்த பல வருடங்களாகவே இந்த திசையில் தூதரகம் செயலாற்றத் தவறி இருக்கி றது. அவாமி லீக் அரசாங்கம் ஒரு எதேச்சதிகார ஒற்றைக் கட்சி ஆட்சியாக மாறுகிறது   என்பதற்கான வெளிப்படையான அறிகுறிகள் இருந்தன. அதனை எதிர்த்தவர்களை சிறையில் அடைப்பது  நாடு கடத்தல் உள்ளிட்ட  நடவடிக்கைகள் மூலம் நாட்டின் குடிமைச் சமூகம் அந்நியப்படுத்தப்பட்டு துன்புறுத் தப்பட்டது வெளிப்படையாகவே உணரப்பட்டது.  நிலைமை மோசமாகி வருவதை இந்தியா ஒப்புக் கொள்ளாதது மட்டுமல்ல; தனது கவலைகளை புலன் உணர்வோடு அணுகி  வங்கதேச அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளவில்லை.

கோட்டை விட்ட  வெளியுறவுத் துறை

இந்தியாவின் வெளியுறவுத்துறை உயர் அதி காரிகள் எதிர்க்கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுவதில் கோட்டை விட்டனர்.  வங்கதேச தேசிய வாத கட்சி (பிஎன்பி) தலைவர்களின் வருகைக்கு அனு மதி மறுப்பது, ஹசீனா அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தில் பிஎன்பி கட்சிக்காக  வாதாட வந்த ஒரு பிரிட்டன் வழக்க றிஞரை நாடு கடத்தியது - இவை யாவும் வேலியின் ஒரு பக்கத்தில் நிற்பது என்ற இந்திய அரசின் நிலைப் பாட்டை சுட்டிக்காட்டுபவை.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகங்கள் மீதான கொடிய தாக்குதலில் அதன் தலைவர்கள் ஈடு பட்ட போதும் தலிபானுடன் உறவை வலிமைப் படுத்தும் இந்தியாவின் முடிவு, இந்திய விரோத நிலைப் பாட்டை அடிக்கடி கடைப்பிடிக்கும் இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன - வின்  தலைவர்களுக்கு அன்பான வரவேற்பு, நேபாள வரைபடங்களில்  அந்நாட்டு அரசு மேற்கொண்ட நகர்வுக்கு இந்தியா கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்த போதும் கே.பி சர்மா ஒலி தலைமையிலான அரசை சமாளிக்க வேண்டி இருந்தது என-  இதெல்லாம் ஒர் அம்சத்தை சுட்டிக் காட்டுகிறது; அண்டை நாடுகளில் உள்ள அனைத்து அரசியல் செயல்பாட்டாளர்களிடம் உறவாடுவதே சிறந்த நடைமுறைவாதம் என்பதே அது.

மோடி விழுங்கிய கசப்பு மாத்திரை

மாலத்தீவில் அப்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் சோலிக்கு இந்தியா முழு ஆதரவை அளித்தது; தேர்தலில் அலைகள் திசை மாறியதும் முகமது முய்சுவை இந்தியாவின் எதிர்ப்பு தலை வராக காட்டியதும் இந்தியாவிற்கு பலன் அளித்தது.  இதற்காக  மோடி அரசு ஒரு கசப்பான மாத்திரையை விழுங்க வேண்டி இருந்தது என்பது வேறு கதை.  இந்த பின்னணியில்தான் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமீப பயணத்தின் போது முய்சு அரசாங்கத்துடன் ஒரு நெருக்கமான உறவுக்கு தன் விருப்பத்தை தெரிவித்து விட்டு வந்தார். இந்தியா, தான் என்ற பெரியண்ணன் மனநிலையை கைவிட்டு அண்டை நாடுகளுடன் உறவை விரிவு படுத்தினால் இந்த கடினமான சூழ்நிலைகள் என்னும் கசப்பு மாத்திரைகளைத் தவிர்த்து இருக்கலாம். ஒரு கட்சி ஆட்சி ஸ்திரத் தன்மை என்பதை கைவிட்டு நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பன்முகத் தன்மை நிறைந்த அரசியல் பார்வைகளை மோடி அரசு வகுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு முக்கியப் படிப்பினை ஆகும்.

நற்பெயரை இழந்த மோடி அரசு

மோடி அரசின் வகுப்புவாத கண்ணோட்டம் வேறு பல படிப்பினைகளையும் அதற்கு தந்துள்ளது.

இந்தியா தனது நண்பர்களை ஒருபோதும் மறக்கக் கூடாது. ஷேக் ஹசீனா விஷயத்தில் மோடி அரசுக்கு அது  புரிந்து இருக்க வேண்டும். தலிபான்களிடம் காபூல் வீழ்ந்த பிறகு தப்பிச்சென்ற  நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களுக்கு விசா மறுத்ததால் புதுதில்லி நம்பகமான பங்காளி என்ற நற்பெயரை இழந்து நிற்கிறது. கடந்த காலத்தில் ஆப்கானிஸ்தானில் அர சாங்கத்தின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் பலர் இந்தியத் தூதர்களை பாதுகாப்பதற்காக தனிப்பட்ட முறையில் தங்கள் உயிரைக்கூட பணயம் வைத்தனர். அப்படி இருக்கையில் அவர்களை உள்ளே வரவிடா மல் எல்லைகளை மூடும் இந்தியாவின் முடிவு  ஒரு கசப்பான உணர்வை நீண்ட நாட்களுக்கு விட்டுச் சென்றுள்ளது. கொள்கைகள் முக்கியமானதாக இருக்கலாம்; ஆனால் அது திட்டவட்டமான சூழ்நிலை களில் சரிவரவில்லை என்றால் நடைமுறைப் பார்வை யில் சில முடிவுகளை  எடுக்கத்தான் வேண்டும்.

வங்கதேசத்துடன்  நல்லுறவு தேவை!

தெற்காசியாவில் அரசியல் அதிகாரத்தை இழக்கும் சிலர் சில காலம் கழித்து மீண்டும் திரும்புவர். ஷேக் ஹசீனா மற்றொரு பாதுகாப்பான இடத்தை கண்டுபிடிக்கும் வரை இந்தியாவில் தங்க அனுமதித்தது தவறில்லை. ஒருவேளை இதில் இந்தியா பின்வாங்கியிருந்தால் துரோகம் இழைத்த தாகக் கூட கருதப்படலாம். ஆனால் அதே நேரத்தில் எதிர்காலத்தையும் உரிய முறையில் அளவீடு செய்ய வேண்டும். ஹசீனா தொடர்ந்து இங்கே தங்கியி ருப்பது புதிய வங்கதேச அரசாங்கத்துடன் உறவு களை சிக்கலாக்கும். குற்றச்சாட்டுகளின் பெயரால் ஹசீனாவை  நாடு கடத்தச் சொல்லி கேட்டால், அவர் இங்கே தங்கியிருக்கும்போது என்ன செய்ய முடியும்? மேலும், அவர்  தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் அதற்கான ஒருங்கிணைப்பை இந்தியாவிடம் எதிர்பார்த்தாலும் அது எத்தகைய தாக்கங்களை இரு தரப்பு  உறவில் ஏற்படுத்தும்?

மோடி அரசாங்கம் விரைவில்  கற்க வேண்டிய மூன்றாவது பாடம்!

மேலும், அண்டை நாடுகளுடன் உறவுகளை வகுப்புவாதக் கண்ணோட்டத்தில் பிளவுபடுத்தி பார்ப்பது மாபெரும் தவறு. மதப் பெரும்பான்மையினர் வாழும் பல நாடுகளை தெற்காசியா கொண்டுள்ளது. இந்துக்கள், முஸ்லிம், பௌத்தர்கள் என பல்வேறு  நாடுகளில் மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கை யில் வாழ்கிறார்கள். நல்லுறவு என்பது மதக் கண் ணோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என  இந்திய அரசு கருதுவதும் தவறாகும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் தீய விளைவுகள்

அப்படிப்பார்த்தாலும்கூட, இந்துக்கள் பெரும் பான்மையாக உள்ள நேபாளம் இந்தியாவுடன் ஒரு கடினமான உறவு நிலையில். ஆனால் அதே நேரத்தில் பௌத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள பூடான், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாலத் தீவுகள் இந்தியாவுடன் மிகச்சிறந்த நட்புறவை பேணு கின்றன. முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளான ஆப்கன், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் எனும் இந்திய அரசின் நடவடிக்கைகள் அண்டை நாடுகளுடன் இரு தரப்பு உறவில் பெரும் பின்னடவை ஏற்படுத்தின. அது குறிப்பிடும் நாடுகளில் மட்டுமல்லாமல் வேறு பல நாடுகளிலும் இந்தியாவின் அத்துமீறலாகவே அதை கருதினார்கள். 

ஹசீனா நீக்கப்பட்டதை அடுத்து வங்கதேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த தன்னுடைய கவலையை மோடி அரசாங்கம் வெளியிட்டது. ஆனால் அதை மிகவும் விவேகத்துடன் அவர் வெளியிட்டிருக்க வேண்டும். இந்திய உள்துறை அமைச்சகத்தில் ஐந்து பேர் கொண்ட குழு  நியமனம் என்பது பொருத்தமானதல்ல. மோடி அரசு, அரசாங்கம் தனது எல்லைகளுக்குள் சிறுபான்மை யினரை பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளது என்பதை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் காட்டினால் பின் இந்தியாவின் கவலைகளும் பிற நாடு களால் சரியாக எடுத்துக் கொள்ளப்படும்.

சொந்தக் காலில் நில்லுங்கள்

அடுத்து கற்க வேண்டிய பாடம், தெற்காசிய துணைக்கண்டத்தில் இந்தியா மீண்டும் தனக்குரிய இடத்தை நிலை நிறுத்த வேண்டும். ஒரு உலகளா விய சக்தியால் அல்லது இன்னொருவரால் அதனை தடுக்க முடியாது. இந்த பிராந்தியத்தில் சீனாவின் ஊடுருவல்களை எதிர் கொள்ள வேண்டும்;  அதே  நேரத்தில் அமெரிக்காவின் அரசியல் விளையாட்டு நடக்கும் மைதானமாக அதை  மாற்ற அனுமதிக்க வும் கூடாது. 

ஆசியக் கண்டத்திற்கு வெளியே உள்ள பிற நாடுக ளின் குறுக்கீடு இல்லாமல் அண்டை நாடுகளுடன் உறவு கொள்வதற்கான வழிமுறைகளை இந்திய கண்ட றிய வேண்டும். தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக் கான வழிமுறைகளை இந்தியா புதுப்பித்துக் கொள்ள  வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் உறவுகளில் ஒரு தேக்க நிலை உருவானதால் பின்,  சார்க் (SAARC) அமைப்பின் புறக்கணிப்புக்கு வழி வகுத்தது. தற்போது வங்கதேசத்துடன் உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில் வங்காள விரிகுடாவில் பல்துறை தொழில் நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிராந்திய முன்முயற்சியையும் (BIMSTEC)  இந்திய அரசு கைவிடுமா? அப்படி கைவிட்டால் அதன் தாக் கங்கள் குறித்தும் புதுதில்லி பரிசீலிக்க வேண்டும்.

நவீன தாராளமயமாக்கலை   மறு பரிசீலனை செய்யுங்கள்!

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியா மட்டுமல்ல, அனைத்து தெற்காசிய ஆட்சியாளர்களும் கடந்த சில ஆண்டுகளாக அவரவர் நாடுகளில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகளில் இருந்தும், தேர்தல் முடிவுகளில் இருந்தும் கற்க வேண்டிய பொதுவான படிப்பினை என்ன?

நவீன தாராள மயக் கொள்கையினால்  ஏற்பட்ட வேலையின்மை மற்றும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிக்கு எதிரான மக்களின் கோபம் அவர்களைத்  தெருவில் இறங்கிப் போராட வைத்துள்ளது என்பதுதான்.

ஜனநாயகம் செழித்தோங்கவில்லை என்றால் பொருளாதார முன்னேற்றங்கள் அர்த்தம் இழக்கும். இதற்கு எதிரான மக்களின் சீற்றத்திற்கு  நீண்ட காலத்திற்கு அணை போட முடியாது. நவீன ஜனநாயக நாடுகளுக்கும் இது கூடுதலாகவே பொருந்தும்.

ஒரு வருடத்திற்கு பயிரிட விரும்பினால் சோளத்தை  விதையுங்கள். என்றென்றும் அதை பயிரிட விரும்பி னால் ஜனநாயகம் மலர்ந்திட வழி விடுங்கள். வேரூன்றி அது செழித்தோங்க  செயலாற்றுங்கள். இந்தியாவிற்கு மட்டுமல்ல அண்டை நாடுகளுடன் அது கொண்டுள்ள உறவுகளை வளர்த்துக் கொள்ள இது மட்டுமே தலை சிறந்த வழியாகும். மோடி அரசு கற்க வேண்டிய அதி முக்கிய அரசியல் பாடமும் இதுதான்.

தி இந்து 14/8/24, 
தமிழில் : கடலூர் சுகுமாரன்