articles

img

மோடி : பிரதமரா? எதிர்க்கட்சித் தலைவரா?

12-08-2023 தேதியிட்ட ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளேட்டில் வெளியாகியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களது நேர்காணலின் பகுதிகள்:

மக்களவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தின்போது பேசிய பிரதமர் அவர்கள் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சந்தர்ப்பவாத, அகங்காரக் கூட்டணி என்று  விமர்சித்துள்ளார். நடப்பு கூட்டத்தொடரில் பல மசோதாக்கள் போதிய விவாதமின்றி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நிறை வேற்றப்பட்டிருக்கின்றன. பிற பாஜக அமைச்சர் களும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பொறுப்பில்லாத கூட்டணி என விமர்சித்துள் ளனர். இது குறித்த உங்கள் கருத்து?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்க்கட்சி களால் கொண்டு வரப்பட்டது. மூன்று நாட்களாக பாஜக அரசு மீதும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அது எதற்குப் பதில் சொல்லவில்லை பிரதமர். மாறாக, தேர்தல் மேடைகளில் பேசுவதைப் போல காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிக் கொண்டு இருந்தார். 2014 தேர்தலுக்கு முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சி மீது என்ன குற்றச்சாட்டு வைத்தாரோ, அதே குற்றச்சாட்டை 9 ஆண்டுகளுக்குப் பிறகும் வைத்துக் கொண்டு இருந்தார். பாஜக அமைச்சர்கள் சிலரே கொட்டாவி விட்ட காட்சிகளை நேரலையில் பார்க்க முடிந்தது. பிரதமர் உரையை யாராவது எடுத்து முழுமை யாகப் படித்தால், இது காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்து ‘எதிர்க்கட்சித் தலைவர்’ மோடி பேசுவதைப் போல இருக்கும். பாஜக ஆட்சியை ஒரு வாக்கில் கவிழ்த்த கட்சி அதிமுக. அந்தக் கட்சிக்கு எதிராகத் தான் 2009,  2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்கு கேட்டார்  மோடி. இப்போது அதிமுகவை அருகில் வைத்திருப்ப தை விட சந்தர்ப்பவாதம் இருக்க முடியுமா?

தமிழ்நாடு ஆளுநருக்கும் உங்களுக்குமான மோதல் அவர் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிக் கடிதம் எழுதியதில் தீவிரமடைந்தது. அவரைத் திரும்பப் பெற வைக்க நீங்கள் குடி யரசுத் தலைவருக்கே கடிதம் எழுதினீர்கள். சட்ட ஆலோசனை பெற வேண்டி,  தனது கடிதத்தை ஆளுநர் நிறுத்தி வைத்துள் ளார் என்றபோதிலும், தமிழ்நாடு அரசாங்கத் தில் அவர் எத்தகைய பாத்திரத்தை ஏற்றுள்ளார்?

மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த  போது, ‘குஜராத் ஆளுநர் மாளிகை என்பது காங்கிரஸ்  கட்சி அலுவலகம்’ என்று குற்றம் சாட்டினார். இன்றைய  ஆளுநர் மாளிகைகள், பாஜக அலுவலகங்களாக மாற்றப்பட்டு இருக்கின்றன. ‘எனக்கு அதிகாரம் இல்லை’ என்று சொல்லிக் கொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிகாரத்தை மீறிச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். ‘எனக்கு வேலையே இல்லை’ என்று சொல்லிக் கொள்ளும் ஆளுநர் ரவி, வேண்டாத வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியின்போது ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவரை அமைச்சரவையில் சேர்த்து கொண்டீர்கள். அது ஏன்? தற்போது உச்ச நீதிமன்றமே அவரைக் கைது செய்ததிலும், அமலாக்கத்துறை விசாரிப்பதிலும் தவறில்லை என்று கூறியுள்ளது. பிறகு ஏன் அமைச்சராகத் தொடர அனுமதிக்கிறீர்கள்?

பாஜக தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க இது போன்ற விசாரணை அமைப்புகளை வைத்துள் ளது. இது பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு அல்ல.  இதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து உதாரணங்களைச் சொல்ல முடியும். பாஜகவின் அரசியல் எதிரிகளின் வீடுகளுக்குள் மட்டுமே இந்த அமைப்புகள் போகும். அப்படி விசாரிக்கப் பட்ட நபர்கள், பாஜகவில் ஐக்கியம் ஆனால், அவர்கள்  புனிதமாகி விடுவார்கள். வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம். இத்தகைய வாஷிங் மிஷினாகத்தான் இவை இருக்கின்றன. எனவேதான் இவர்களது கைது களைக் ‘குற்ற விசாரணைகள்’ என நாங்கள் பார்க்க வில்லை. ‘அரசியல் விசாரணைகள்’ ஆகத் தான் பார்க்கிறேன். அரசியல் வழக்கில் கைதானவர்களுக்கு தரப்படும் சலுகையே செந்தில்பாலாஜிக்கும் தரப்பட்டுள்ளது.

கூட்டாட்சி வடிவத்தையும், கூட்டுறவுக் கூட்டாட்சியியலையும் ஒன்றிய அரசு சிதைக்கிறது என சி.பி.ஐ., அமலாக்கத்துறை நட வடிக்கைகளை வைத்து நீங்கள் கூறுவது ஏன்? எதிர்க்கட்சிகளின் கூட்டணி இதைத் தடுத்து நிறுத்துமா? எதிர்க்கட்சிகள் எல்லாம் இணையும்போது எவை முக்கியமானவையாகக் கருதப்படும்?

பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகள் ஒரே அணியாக ஆகிவிடக் கூடாது என்பதில் பாஜக உறுதி யாக இருக்கிறது. அனைவரும் பிரிந்து நின்றால்தான் பாஜகவுக்கு லாபம். எனவேதான் அனைவரையும் ஒன்று சேர்க்காமல் இருக்கவே இது போன்ற (சி.பி.ஐ, ஈ.டி) ரெய்டுகள் செய்யப்படுகின்றன. அச்சுறுத்துவது, பயமுறுத்துவதுதான் இந்த ரெய்டுகளின் நோக்க மாகும்.

நரேந்திர மோடியைத் தங்கள் பிரதமர் வேட்பாள ராக பா.ஜ.க முன்னிறுத்தியது கடந்த தேர்தல் களில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களுடைய பிரதமர் முகம் யார் எனக் கூறித் தேர்தலை எதிர்கொள்ளுமா?

நரேந்திர மோடி என்ற பிம்பம் இன்று தகர்ந்து விட்டது. எனவே, அவர் முகத்தை மட்டும் காட்டி  பாஜகவால் வெற்றி பெற முடியாது. அதனால்தான் 39  கட்சிகளைக் கூட்டி வைத்து அவர் போஸ் கொடுத் தார். ஏன், அவர் தன் இமேஜை நம்பவில்லை? காங்கிர ஸையும் ராகுலையும் தி.மு.க.வையும் மற்ற எதிர்க்கட்சி களையும் மோடி விமர்சித்துப் பேசுவது இதனால்தான்.

பொது சிவில் சட்டம் பற்றிய உங்கள்  பார்வை என்ன? தமிழ்நாட்டில் பாஜக வுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவும் இதனை  எதிர்த்துள்ளது. கிரிமினல் சட்டம் நாடெங்கும் ஏற்கனவே பொதுவாக உள்ள நிலையில் பிறவற்றிலும் பொது சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் என்ன சிக்கல்?

குற்றவியல் சட்டத்தையும், பொது சிவில் சட்டத்தையும் ஒன்றாக நீங்கள் பார்ப்பதே தவறு. குற்ற வியல் சட்டம் என்பது குற்றம் தொடர்பானது. ஒரு குற்றம்  செய்தால் அதற்கான தண்டனை அனைவருக்கும் பொதுவானதே. அதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால் பொது சிவில் சட்டம் என்பது பண்பாட்டு, கலாச்சாரம், பழக்க வழக்கங்களில் கை வைக்கிறது. இந்தியாவில் பல்வேறு பண்பாடு, கலாச்சார, பழக்க வழக்கங்களை பின்பற்றும் மக்கள் வாழ்கிறார்கள். எனவே இங்கு பொது சிவில் சட்டம் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு பழங் குடி சமூகங்கள், சிறுபான்மையினருக்குத் தனிச் சலுகைகள் வழங்கி இருக்கிறது. அவர்கள் பொது சிவில் சட்டம் என்று கூறப்படுவதை எதிர்க்கிறார்கள். காசி ஹில்ஸ் என்ற தன்னாட்சி பெற்ற மாவட்ட  கவுன்சில் இதனை எதிர்த்துள்ளது. காசி சமூகத்தின்  பழக்க வழக்கங்கள் பாதிக்கப்படும் என்கிறார்கள்  இவர்கள். அரசியலமைப்பின் ஆறாவது அட்ட வணையில் சிறப்பு சலுகை பெற்றிருக்கும் சமூகம் இது.  எனவே, பொது சிவில் சட்டமானது, இந்தியாவின் பொது அமைதியையும் இணக்கத்தையும் சீர்குலைத்துவிடும் சட்டம் ஆகும்.

ஆகஸ்ட் 10 அன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பிரதமர் அவர்கள், மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்த துடன், நாடு அவர் பக்கம் இருப்ப தாகவும் பேசியுள்ளார். அவரது இந்த உறுதியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள். மணிப்பூரில் தொடரும் வன்முறைக்குத் தீர்வுகாண நீங்கள் சொல்லும் வழி என்ன?

பாஜகவின் பிளவுவாத வெறுப்பரசியல் தான் மணிப்பூர் பற்றி எரிவதற்குக் காரணம். இரண்டு பிரி வினருக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி அவர்களை ஆயுதம் ஏந்த வைத்தது பாஜகவின் மதவாத அரசியல்  ஆகும். இன்று அவர்கள் அடக்க முடியாத அளவுக்கு கைமீறிப் போய்விட்டது. மணிப்பூரில் இப்படி நடக்கும் என்பது அந்த மாநிலத்தை ஆளும்  பாஜக அரசுக்கும்  தெரியும். ஒன்றிய பாஜக அரசுக்கும் தெரியும். ஆனால்  இவ்வளவு பெரிதாக நடக்கும் என்று அவர்கள் கணிக்க வில்லை. வன்முறை இருபக்கமும் கூர்மையான ஆயுதம். ‘பூதத்தை உருவாக்கினால், அந்த பூதம் உரு வாக்கியவனையே தாக்கும்’ என்பார்கள். அதுதான் மணிப்பூரில் நடக்கிறது. மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டுமானால் முதலில் அந்த மாநிலத்தை ஆளும் பாஜக அரசு மீது  நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அனைத்துப் பிரி வினருக்கும் பொதுவானவர்கள் தான் நாங்கள் என்பதை ஒன்றிய அரசு நிரூபிக்க வேண்டும். பாதிக்கப் பட்ட மக்களைப் போய் பிரதமர் பார்க்க வேண்டும். அங்கே ஊர் ஊராக மக்களைச் சந்திக்க வேண்டும். சாதாரணமாக அங்கு அமைதி திரும்பி விடாது. இத்தனை நாட்களாக எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயல்களைச் செய்துவிட்டு, அவ்வளவு சீக்கிரம் அதனை அணைத்து விட முடியாது.

பாஜக தமிழ்நாட்டின் மீது கவனம் செலுத்துவதைப் பிரதமரின் சமீபத்திய பேச்சுகளில் நன்கு காண முடிகிறது. மாநில அரசியலில் அதிமுகவுக்குப் பதிலாக பாஜக உங்களது முதன்மை எதிர்க்கட்சியாக வர வாய்ப்புண்டா? இல்லை என்றால், ஏன்?

நல்ல நகைச்சுவையான செய்தி இது. பிரதமரிடம் எவ்வளவு பொய் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது  தெரிகிறது. பிரதமருக்குத் தமிழ்நாட்டைப் பற்றியும் தெரியவில்லை. தமிழக பாஜகவைப் பற்றியும் தெரியவில்லை என நினைக்கிறேன்.