articles

img

புத்தக வாசிப்பு: வரலாற்றை புரட்டிப் போடும்

ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது ஒவ்வொரு வரியை படிக்கிறபோது அது இதயத்தில் ஏற்படுத்துகிற ரச வாதம், கண்களில் ஏற்படுகிற வெளிச்சத்தில் தெரி யும். ஒரு புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கிறோம் என்று உணரு வோம். இன்னும் கொஞ்சம் அறிவு பெற்றிருக்கிறோம். இன்னும் கொஞ்சம் ஆற்றல் பெற்றிருக்கிறோம். இன்னும் கொஞ்சம் வெளிச்சம் பெற்றிருக்கிறோம். அது  தான் புத்தகம் செய்கிற மாற்றம். புத்தகங்களை வாசித்த வர்கள் வரலாற்றை புரட்டிப் போட்டுள்ளனர் என்று சரித்திரத்தின் ஏடுகளை படித்தவர்களுக்கு தெரியும்.  நாம் மகாத்மா காந்தியடிகளை போற்றி புகழ் கிறோம். அவர் இந்தியாவிற்கு மட்டும் வெளிச்சத்தை காண்பித்தவர் அல்லர். அவரால் வெளிச்சம் பெற்ற வர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவரை முன்மாதிரியாக வைத்து தான் மார்ட்டின் லூதர் கிங்  அமெரிக்காவில் ஆப்பிரிக்க மக்களுக்காக போராடி னார். தன்னுடைய வழிகாட்டி என்று குறிப்பிட்டார்.  இன்று அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க மக்கள்  அனைவருமே மகாத்மா காந்தியடிகளின் பெயரைக் கேட்டால் எங்கள் தலைவருக்கு வழிகாட்டி என்று  சொல்வார்கள். நெல்சன் மண்டேலாவுக்கு வழிகாட்டி யாக இருந்தவரும் காந்தியடிகள் தான். அவருடைய கோட்பாடுகளை உலகமெங்கும் படித்து பாராட்டி தபால் தலை வெளியிட்டு அவருக்கு சிலை வைத்து மகிழ்ந்தவர்கள் எண்ணற்றோர். அந்த மகாத்மா காந்தி யடிகள், மகாத்மாவாக ஆவதற்கு அவர் வாசித்த நூல்கள் தான் காரணம்.  ஜான் ரஷ்கின் எழுதிய கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூலை காந்தி படித்தார். அந்த  நூல் தான் முதல் விதையை அவர் நெஞ்சிலே தூவியது.  இன்று சுற்றுச்சூழலியல் அறிஞர்கள் அனைவருமே ஜான்ரஷ்கின் போன்றோரை, வேர்ட்ஸ் வொர்த் போன்றோரை, கீட்ஸ் போன்றோரை இயற்கையை போற்றுவதற்கான முன்னோடிகள் என்று குறிப்பிடு கின்றனர். உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் இயக்கத்தைப் பற்றி ஒரு புத்தகத்தை வாசித்தேன். அதில் முன்னோடிகளாக மகாத்மா காந்தியடிகளையே குறிப்பிடுகிறார்கள். அவருடைய பொருளாதாரம் இயற்கையை சுரண்டாமல் இருப்பதாக இருந்தது என்று குறிப்பிடுகிறார்கள். 

காந்தி, டால்ஸ்டாய் எழுதிய ‘கடவுளின் அர சாங்கம் உன்னிடம் இருக்கிறது’ என்ற புத்தகத்தை வாசித்தார். அது தான் வன்முறையற்ற போராட்டங்  களை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை அவ ருக்கு ஏற்படுத்தியது. அவர் அதோடு நிற்கவில்லை. ஹென்றி தோரோ எழுதிய ‘ஒத்துழையாமை’ என்ற கட்டுரையை படித்தார். அது தான் ‘ஒத்துழையாமை இயக்கம்’ என்ற ஒன்றின் மூலம் ஆள்பவர்களின் மன சாட்சியை பிடித்து உலுக்க முடியும் என்கிற எண்ணத்தை  ஏற்படுத்தியது. அவர்களுடைய எண்ணங்களை யெல்லாம் நாம் உலுக்குவதற்கு மட்டுமல்ல; அதன்  மூலம் அரசாங்கத்தையே உலுக்குவதற்கும் முடியும்  என்பதை ‘ஒத்துழையாமை’ என்ற அந்த கட்டுரையை படித்து தெரிந்துகொண்டார். இப்படி மகாத்மா காந்தி யடிகள் வாசித்த பல புத்தகங்கள் தான் அவரை மகத்தான மனிதராக ஆக்கியது. அவருடைய மனத்திலே பல மாற்றங்களை ஏற்படுத்தியது.  காரல் மார்க்ஸ் ஹெகலைப் பற்றி படித்தார். அபேத  வாதத்தை கற்றுக்கொண்டார். பிரௌதான் எழுதிய ‘வறுமையின் தத்துவம்’ என்ற நூலை படித்து விட்டு ‘தத்துவத்தின் வறுமை’ என்று பதிலுரையை எழுதி னார். ஏங்கெல்ஸ் எண்ணற்ற நூல்களை படித்தார். குடும்பம், அரசு தனிச் சொத்து என்கிற நூலை எழுதி னார்.  அம்பேத்கர் பல நூல்களை படித்தார். பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜான் டுவியினுடைய நூல்களை படித்து  தன்னுடைய சித்தாந்தத்தை, கோட்பாட்டை வரையறை செய்து கொண்டார். இப்படி எண்ணற்றோர் வாசித்த தால் வளம் பெற்றார்கள். இந்த பூமியையே வளமான  ஒன்றாக மாற்றினார்கள். அவர்கள் வாசிக்காமல் இருந்திருந்தால் ஒரு சித்தாந்தத்தை - ஒரு கோட்பாட்டை,  அவர்களால் ஒரு போதும் ஏற்படுத்திக் கொண்டி ருக்கிற முடியாது.  சாதாரணமாக ஒரு கையாடலுக்காக சிறைக்குச் சென்ற ஓ.ஹென்றி என்பவர் தான் பல கதைகளை எழுதிய பெரிய எழுத்தாளரானார். 

சிறைச்சாலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் தஸ்தாவஸ்கிக்கு ஏற்படுகிறது. தூக்குக் கயிற்றின் நுனியில் நின்று கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் விடுதலை செய்தி வருகிறது.  அவர் இருந்தது சைபீரியாவின் தனிமைச் சிறை.  அந்த தனிமையிலே இருக்கிற போது, அவர் தான் என்ன  எழுத வேண்டும் என்பதை மனத்திலே ஒத்திகை பார்த்து  அவற்றை எழுதி முடித்துவிட்டார். சிறையிலிருந்து வெளிவந்தபின் நாவல்களாக எழுதித்தள்ளுகிறார். அவர் சொல்லச் சொல்ல தட்டச்சு செய்தார்கள். அதற்கு  காரணம் ஒரு சிறைச்சாலை என்பது ஒருவருக்கு கல்விச்  சாலையாகவும் இருக்க முடியும். அந்த சிறைச் சாலை யில் எழுதிய நூல்கள் தான் இன்றைக்கும் மகத்தான நூல்களாக வலம் வருகின்றன.  நெல்சன் மண்டேலா சிறைச்சாலையில் இருக்கும் போது தான் அவர் ஒரு திடமான மனிதராக மாறினார்.  27 ஆண்டுகள் சிறையிலே இருந்த ஒரு மனிதன் 4 மணி  நேரம் காய்கறித் தோட்டங்களில் தனது ஆற்றலை  செலவு செய்து உடலை உறுதியாக வைத்துக்கொண் டார். உடலின் வலிமை முக்கியம். வாழ்க்கையை வாசிக்கிற எவனுக்குமே குறிப்புகள் தேவையில்லை, குறிக்கோள் மட்டும் தான் தேவை.  நூறு ஆண்டுகள் வரலாற்றை நூறு பக்கங்களில் வாசிப்பதற்கு எவ்வளவு பேறு பெற்றிருக்க வேண்டும்.  ஒரு அற்புதமான ஒரு கவிதையை கவிஞன் எழுது வதற்கு ஓராண்டாகலாம். 10 ஆண்டு கள் ஆகலாம். அதை பத்தே நிமிடங்க ளில் நாம் படித்து முடித்துவிடுகிறோம். அதன் சாரத்தை உறிஞ்சி விடுகிறோம். எப்படி ஒரு மண் சலித்து சலித்து ஒரு  தானியத்தை படைத்துக் கொடுக்கி றதோ அதைப் போல, எப்படி ஒரு பசு  புல்லைத் தின்று தின்று பாலைத் தரு கிறதோ அதைப் போல நாம் அந்த எழுத்தாளன் சலித்து சலித்து தந்த அரு மையான அறிவை நுகர்கிறோம்.  அது தான் வாசிப்பதற்கான முதல் காரணம். நல்ல இலக்கியத்தை வாசித்த வன் வழியில் செல்லும் ஒரு மனி தனை கருணையோடு பார்க்கிறான். தடுமாறிக் கொண்டிருக்கிற ஒருவ னுக்கு கைகொடுத்து உதவுகிறான். விபத்தில் பாதிக்கப்பட்டவனை ஓடிச் சென்று காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான். அவன் ஒரு தொழு நோயாளியைக் கண்டால், ‘அம்மா நான் இருக்கிறேன்’ என்ற  ஜெயகாந்தனின் சிறுகதை நினைவுக்கு  வருகிறது. அடுத்த நிமிடம் அவன் மீது இரக்கப்படுகிறான். தன்னுடைய சக பயணி என்று அவனை நினைக்கிறான். இது தான் இலக்கியம் செய்கிற மாற்  றம். இது தான் நூல் செய்கிற மாற்றம்.  நீங்கள் அறிவியலைப் படிக்கிற போது, இந்த உலகத்தைப் பார்க்கிற பார்வையே மாறிப் போகிறது. இந்த  உலகத்தை சாதாரணமாக பார்ப்ப தற்கும், அறிவியலை படித்துவிட்டு பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் வேறு. ஸ்கார்ச் எர்த் டெக்னிக் என்ற ஒன்றை பிரஞ்சுப்படை ரஷ்யாவிற்குள் புகுந்த போது ரஷ்யர்கள் பயன்படுத்தி னார்கள். நெப்போலியன் படைகள் தோல்வியடைந்ததற்கு அது காரணம்.  எதிரிகளே இல்லை என்று முன்னேறிச் சென்றார்கள். ரஷ்யர்கள் வீடு களை காலி செய்து பின்னேறிக் கொண்டிருந்தார்கள். பயிர்களை யெல்லாம் அழித்துவிட்டார்கள். உணவு கிடைக்கவில்லை. குதிரைகள் மாண்  டன. படைவீரர்கள் மாண்டார்கள். நெப்போலியனின் படை தோல்வி யடைந்தது அவன் வீட்டுக்கு திரும்பி னான். காரணம் அறிவியல் படித்தத னால் ரஷ்யர்கள் பயன்படுத்திய யுக்தி.  ஷேக்ஸ்பியர் 3 மணி நேரம் தான்  தூங்குவார். விடிய விடிய எழுதுவா ராம். நகராமல் எழுதிய ஐசக் ஆஷிமா  போன்றவர்கள் உண்டு. 3 நாட்கள் தூங்காமல் ஒரே இடத்தில் அமர்ந்து  உலக அரசியலமைப்புச் சட்டங்களை யெல்லாம் படித்து கரைத்து குடித்து கியூபாவின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர் சேகு வேரா. அப்படிப்பட்ட வைராக்கியமான மனிதர்கள் படித்ததைப் போல இடை விடாமல் வாசிப்பது நல்லது.  படிக்கப் படிக்க நீங்கள் பார்க்கிற மனிதர்கள் காந்தமாக உங்க ளோடு ஒட்டிக்கொள்வார்கள். வாசி யுங்கள், நீங்கள் வாழ்ந்ததற்கான அடையாளத்தை விட்டுச்செல்லுங்கள். வாசியுங்கள், மக்களை நேசியுங்கள். இந்த உலகத்தில் அன்பை விதைப் போம். அகிம்சையை விதைப்போம். மனித நேயத்தை வளர்ப்போம். மானு டத்தை மீட்டெடுப்போம். திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் வெ.இறையன்பு பேசியதிலிருந்து -தொகுப்பு இலமு, திண்டுக்கல்.