articles

img

வலதுசாரிகளின் வெற்றியை தடுத்து நிறுத்திய இடதுசாரிகள்

பிரான்சில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்த லில் அதிதீவிர வலதுசாரிகளுக்கு எதிராக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். தேர்தல் கருத்துக் கணிப்புகள் பலவும் பொய்ப்பிக்கப்பட்டு, வலதுசாரி ‘தேசிய பேரணி’ கட்சி 143 இடங்களை மட்டுமே வென்று, மூன்றாவது இடத்திற்குத் தள்ளப் பட்டிருக்கிறது. புதிதாக அமைக்கப்பட்ட இடதுசாரி கூட்டணியான, புதிய மக்கள் முன்னணி 182 இடங்களுடன் மாபெரும் அணியாக உருவெடுத்து மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால் ஜனாதிபதி மக்ரோன் குழு 163 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது. இவ்வாறு இந்தத் தேர்தலில் தனியே எந்தவொரு கட்சியோ அல்லது முன்னணியோ பெரும்பான்மையைப் பெறவில்லை. பெரும்பான்மை பெறவேண்டுமானால், தேசிய சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 577 இடங்களில் 289 இடங்களைப் வென்றிருக்க வேண்டியது அவசியமாகும். புதிய மக்கள் முன்னணி பெரும்பான்மையைப் பெற இன்னும் 100 இடங்களைப் பெற வேண்டும். ஜூன் மாதத்தில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் ஜனாதிபதி மக்ரோன் கட்சி பின்னடைவைப் பெற்றதால், அவர் இந்தத் தேர்தலுக்கு அறைகூவல் விடுத்திருந்தார்.

மக்களின் மன நிலையை  கணித்து புதிய முன்னணி

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்ற பின்னர், அதிதீவிர வலதுசாரி கள் வளர்ந்துகொண்டிருப்பதைக் கண்டு அச்ச மடைந்த பிரான்ஸ் மக்கள், நாடு முழுவதும்  பெரும் திரளாக பேரணிகளை நடத்தினார்கள். வலதுசாரிக ளின் பிளவுவாத மற்றும் பிற்போக்குக் கொள்கைக ளுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை அவர்கள் மிகவும் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தினார்கள்.   இடதுசாரி சிந்தனை உள்ள பல கட்சிகள் மக்களின் மனநிலையை  மிகச்சரியாகக் கணித்து, புதிய மக்கள் முன்னணி என்னும் கூட்டணியை அமைத்தார்கள். இந்த முன்னணியில் ஜீன் லூக் மெலன் சோன் தலை மையிலான ‘தலைவணங்காபிரான்ஸ்’ கட்சி சோசலிஸ்ட் கட்சி, பசுமைவாதிகள், பிரான்ஸ் கம்யூ னிஸ்ட் கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. தாங்கள் ஆட்சி க்கு வந்தால் என்னென்ன செய்வோம் என 150 அம்சங்க ளைக் கொண்ட தேர்தல் அறிக்கையை அவர்கள் அறி வித்தார்கள். தேர்தல் நடைபெறுவதற்கு ஒருசில நாட்க ளுக்கு முன்புதான் இந்த முன்னணி அமைக்கப்பட்டி ருந்த போதிலும், அதன்பின்னர் மிகவும் வலுவாகச் செயல்பட்டு, வலதுசாரிகளின் கொட்டத்தை ஒடுக்கக் கூடிய அளவிற்கு ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது. 

தீவிர வலதுசாரிகளின்  மீது மக்கள் வெறுப்பு

தேர்தலின் முதல் கட்டத்தில் தீவிர வலதுசாரி கட்சியான மரைன் லே பென்னின் ‘நேசனல் ரேலி’ எனும் கட்சி, 33.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதல் கட்சி யாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து  புதிதாக அமைக்கப்பட்ட இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியான புதிய மக்கள் முன்னணி, 28 விழுக்காடு வாக்குகளையும், ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் குழு 21 விழுக்காடு வாக்குகளையும் பெற்றன. இவ்வாறு இம்மூன்று அணி களில் எதுவும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாத தால், இரண்டாவது சுற்று தேர்தல் நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் 12.5 விழுக்காடு வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்ற கட்சிகளின் வேட்பாளர்கள்தான் இரண்டாவது சுற்று தேர்தலில் இடம் பெறுவார்கள். எனவே இதில் மேலே குறிப்பிட்ட முன்னணிகளிலி ருந்து மூன்று வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும். தீவிர வலதுசாரிகள் மீதான மக்களின் வெறுப்பு அனைத்து எதிர்க் கட்சிகளையும் வலதுசாரி களை வீழ்த்துவதற்கான தந்திரங்களை வகுக்க வைத்தது. அதன்படி, முதல் சுற்றில் மூன்றாவதாக வந்த வேட்பாளர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். புதிய மக்கள் முன்னணியும் உடனடி யாகத் தன்னுடைய வேட்பாளர்களைத் திரும்பப் பெற்றது. எனினும் மக்ரோனின் குழுவில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் இதனைச் செய்திட வில்லை. அவர்களில் பலர் மற்ற இரு அணிகளுடன் சமன் செய்ததால் விலக மறுத்துவிட்டனர்.    இத்தகைய தடைகள் இருந்தபோதிலும், இப்போது வந்துள்ள தேர்தல் முடிவுகள் தீவிர வலதுசாரிகளை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, அவர்கள் ஆட்சிக்கட்டி லில் அமர்வதை மக்கள் தடுத்திருக்கிறார்கள் என்ப தைக் காட்டுகின்றன. தீவிர வலதுசாரிகளின் கொள்கை கள் மீதான மக்களின் வெறுப்பு இப்போது நன்கு வெளிப்பட்டிருக்கிறது.

மக்கள் கோபத்தின்  2 பெரிய பிரதிபலிப்புகள்

தேசிய சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றிருந்த ஜனாதிபதி மக்ரோன், நவீன தாராள மயக் கொள்கைகள் கட்டளையிட்ட சிக்கன நடவ டிக்கைகளை அமல்படுத்தினார். பணக்காரர்கள் மீது வரி விதிக்க அவரது அரசாங்கம் மறுத்தது. ஆனால்  அதே சமயத்தில் உழைக்கும் மக்கள் மீது சகலவித மான வரிகளையும் திணித்தது. தொழிலாளர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டது. ஓய்வூதிய சீர் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்நடவடிக்கைக ளுக்கு எதிராக தொழிலாளர்களும், விவசாயிகளும் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். மாதக் கணக்கில் நடைபெற்ற தொழிலாளர்களின் போராட் டங்களும், விவசாயிகளின் ‘மஞ்சள் சீருடை’ இயக்க மும் மக்ரோனின் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கோபத்தின் இரண்டு பெரிய பிரதிபலிப்புகளாகும்.   அரசாங்கத்தின் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட இந்த அதிருப்தியை தீவிர வலதுசாரிகள் பயன் படுத்திக் கொண்டனர். அனைத்துப் பிரச்சனைக ளுக்கும் புலம்பெயர்ந்தோரின் வருகையே காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இன வெறி, மத  வெறியை மக்களிடையே புகுத்தி சமூகத்தை பிளவு படுத்தினர். கன்சர்வேடிவ்கள் மற்றும் சோசலிஸ்டுகள் போன்ற அனைத்து பாரம்பரிய ஸ்தாபனக் கட்சிகளின் தோல்வியும், கம்யூனிஸ்ட் கட்சி பலவீனமாக இருந்த தும் மற்றும் பசுமைவாதிகள் போன்ற சுற்றுச்சூழல் குழுக்களின் பலவீனங்களும் சேர்ந்து, தீவிர வலது சாரிகளின் வளர்ச்சிக்கு உதவியது.

பாசிச, நாஜிச கொடூரங்கள் தலை தூக்குவதை விரும்பவில்லை

லே பென் மற்றும் அவருடைய கட்சி ஓய்வூதிய சீர்திருத்தங்களையோ அல்லது ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதையோ எப்போதுமே எதிர்த்திட வில்லை.  ஆளும் வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பெரும் கார்ப்பரேட்டுகளில் பல, வெளிப்படை யாகவே லே பென் மற்றும் அவருடைய கட்சியை ஆதரித்தன. மக்களிடம் எழுந்துள்ள அதிருப்தி உணர்வை இடதுசாரிகள் எவ்விதத்திலும் பயன்படுத்தி விடக் கூடாது என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.   லே பென், நவீன தாராளமயக் கொள்கையைப் பின்பற்றியதுடன் அதன் பிளவுவாத அரசியலும் சேர்ந்து மக்களை வெகுவாகவே பயமுறுத்திவிட்டது. இதுபோன்ற வலதுசாரி அதிதீவிர சக்திகள் ஒருமுறை ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், அவை மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் எதையும் தீர்த்திடாது, மாறாக அவை இருந்துவரும் சமூகக் கட்டமைப்பை சின்னாபின்னப்படுத்தும் விதத்தில் புதிய பிரச்சனைகளை உருவாக்கிடும். பாசிசம் மற்றும் நாசிசத்தின் கொடூரங்களை மக்கள் இன்னமும் மறந்து விடவில்லை. எனவே அவை மீண்டும் ஒருமுறை தலை தூக்குவதை அனுமதித்திட மக்கள் தயாராக இல்லை. புதிய மக்கள் முன்னணி முன்வைத்த பொருளா தார நிகழ்ச்சி நிரல் மக்களின் வரவேற்பைப் பெற்றது. நவீன தாராளமயக் கொள்கைகள், குறிப்பாக ஆட்சியா ளர்கள் கடைப்பிடித்த சிக்கன நடவடிக்கைகள் தலை கீழாக மாற்றப்படும் என்றும், ஓய்வூதிய வயது குறைக்கப்படும் என்றும், ஓய்வூதிய சீர்திருத்தங்கள் ரத்து செய்யப்படும் என்றும், பணக்காரர்கள் மீது வரி விதிக்கப்படும் என்றும் அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

வலதுசாரி சித்தாந்தத்தின் ஆழமான ஊடுருவல் 

சமூகம் எவ்வளவு பிளவுபட்டுள்ளது என்பதை பிரான்ஸ் தேர்தல் காட்டுகிறது. லே பென்னின் ‘தேசியப் பேரணி கட்சி’ பெரும்பான்மையை வெல்ல முடியா விட்டாலும், சட்டமன்றத்தில் அதன் எண்ணிக்கையை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்க அதனால் முடிந்திருக்கிறது. தீவிர வலதுசாரி சித்தாந்தம் சமூகத்தில் எந்த அள விற்கு ஆழமாக ஊடுருவியிருக்கிறது என்பதற்கு இது ஒரு நினைவூட்டலாகும். இத்தகைய பிளவுகள் இப்போது புதிய அரசாங் கத்தை அமைப்பதிலும் செயல்படும். மக்ரோன், திடீ ரென்று தேர்தலை நடத்தி வெற்றிபெற்றுவிடலாம் என நினைத்த அவருடைய சூதாட்டம் தோல்வியடைந்த போதிலும், ஆட்சி அதிகாரத்தில் உள்ள தனது பிடியைக் கைவிடத் தயாராக இல்லை. இடதுசாரிக் கூட்டணி அமைந்ததையும், அதன் வலுவான தேர்தல் செயல்திறனையும் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்றே தெரிகிறது. அவரைப் பொறுத்தவரைக்கும், தீவிர வலதுசாரிகள் அவருக்கு ஒரு பெரிய அச்சு றுத்தல் இல்லை. ஏனெனில் அவரது பல கொள்கை கள் தீவிர வலதுசாரி சித்தாந்தத்தை இயல்பாக்குவ தற்கு வழி வகுத்தன. பிரெஞ்சு ஆளும் வர்க்கங்களும் கூட, இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக, கன்சர்வேடிவ் வலது மற்றும் தீவிர வலதுசாரிகளுக்கு இடையே கூட்டணி ஏற்படுத்து வதையே விரும்புகிறார்கள். இத்தகைய கூட்டணி  நவீன தாராளமயக் கொள்கைகளைத் தொடர்ந்து செயல் படுத்த அவர்களுக்கு வழிவகுத்திடும். 

மக்கள் ஆணையை  அவமதிக்கும் செயல்

புதிய மக்கள் முன்னணியிலும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது எப்படி என்பதில்  இன்னமும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.    மெலன்சோனின் கட்சி அதிக இடங்களைப் பெற்றிருந்தபோதிலும், அவரைத் தலைவராக ஏற்க சோசலிஸ்ட் கட்சியும், பசுமைவாதிகளும் தயாராக இல்லை. மெலன்சோன் தீவிர இடதுசாரி என்றும், முதலாளித்துவ எதிர்ப்பாளர் என்றும் கருதப்படுகிறார். பொருளாதாரக் கொள் கைகளில் சில தீவிர வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகளைப் பயன்படுத்தி, ஒரு மத்திய-இடது சாரி  அரசாங்கத்தை (centre-left government) அமைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இத்தகைய முயற்சிகள் அனைத்தும் மக்கள் ஆணையை அவமதிக்கும் செயலாகும்.  மக்கள் மக்ரோனுக்கும்  லே பென்னுக்கும் எதிராக வாக்களித்துள்ளனர். அவர்கள் தீவிர வலதுசாரி மற்றும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இந்த எதார்த் தத்தை கருத்தில் கொண்டு எந்த அரசாங்கமும் மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். வேறு எந்த நடவடிக்கையும், பேரழிவு தரும். தீவிர வலதுசாரிகளை மேலும் வலுப்படுத்த வழிவகுக்கும். தீவிர வலதுசாரிகளின் அச்சுறுத்தல் முற்றிலுமாக அகற் றப்படவில்லை, அது இப்போது சற்றே நிறுத்தப் பட்டுள்ளது என்பதை மட்டும் மறந்துவிடக் கூடாது.

ஜூலை 10, 2024,
தமிழில் : ச.வீரமணி