கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் விரிவான முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் நிலமற்ற, வீடற்ற அனைத்து பட்டியல் சாதி மக்களுக்கும் நிலம் மற்றும் வீடு வழங்குவது இந்த அரசாங்கத்தின் அறிவிக்கப்பட்ட இலக்குகளில் ஒன்றாகும். இதனுடன், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரின் வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய கேரளாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் நடவடிக்கை எடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 9.15 சதவிகிதமாக உள்ள பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கு ஆண்டுத் திட்டத்தில் 9.81சதவிகிதம் மற்றும் 1.45 சதவிகிதம் மட்டுமே உள்ள பழங்குடியினருக்கு ஆண்டுத் திட்டத்தில் 2.83 சதவிகிதம் அரசு ஒதுக்கியுள்ளது. 2023-24 நிதியாண்டில், பட்டியல் சாதியினரின் மேம்பாட்டுக்காக ரூ.3278.68 கோடியும், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ரூ.937.41 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளின் முக்கிய திட்டங்கள் : அதிகாரமளித்தல் சங்கம்
புதிய உலகத்தரத்தில் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகாரமளித்தல் சங்கம் ஏற்படுத்துகிறது. இதன் மூலம், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் சமூக பொருளாதார முன்னேற்றம் அடைய தொழில் முனைவோராக மாற்றப்படுகிறார்கள். இதற்காக கேரள எம்பவர்மென்ட் சொசைட்டி இந்த அரசால் தொடங்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகளின் ஆதரவுடன் பொதுச் சந்தை நிறுவனங்களுக்குப் போட்டியாக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் எஸ்.சி பெண்கள் மற்றும் இளைஞர் குழுக்களுக்கு நேரடியாகப் பங்கேற்பதற்கும், அதன் மூலம் சிறந்த வருவாயும் தன்னம்பிக்கையும் பெறுவதற்கும் ‘எம்பவர்மென்ட் சொசைட்டி’ வாய்ப்பளிக்கும்.
திறன் மேம்பாட்டு பயிற்சி (TRACE)
TRACE – (Training for Career Excellence) என்பது அரசு அமைப்பில் வேலைப் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றுக்கு கவுரவ ஊதியத்துடன் 2 ஆண்டுகளுக்கு பல்வேறு துறைகளின் கீழ் படித்தவர்களை நியமிக்க இந்த அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும். இதன் ஒரு பகுதியாக, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையின் பல்வேறு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அங்கீகாரம் பெற்ற பொறியாளர்களாக 500 பேரும், சமூகப் பணியாளர்களாக எம்எஸ்என் தகுதி பெற்ற 14 பேரும், மேலாண்மை பயிற்சியாளர்களாக 380 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அட்வகேட் ஜெனரல், அரசு பிளீடர், மூத்த வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், சிறப்பு நீதிமன்றங்கள், சட்ட சேவைகள் சங்கம் மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை ஆகியவற்றில் அவர்கள் வேலை பெறுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜ்வாலா திட்டம் (JWALA-நீதி, நலன் மற்றும் சட்ட உதவி) இந்த அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்குத் திறன்கள் மற்றும் சட்டப் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு உறுதி செய்யப்பட்டுள்ளது. 67 பட்டியல் சாதியினர் மற்றும் 25 பழங்குடியினர் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. செவிலியர், பாராமெடிக்கல், நிர்வாகவியல் பயிற்சிகள், பள்ளி-கல்லூரி ஆசிரியர் தகுதிகள் மற்றும் அந்தந்த துறைகளில் ஐ.டி.ஐ., டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு கேஎஸ்இபி மற்றும் கேஎஸ்ஆர்டிசி இல் வேலை. கல்வித் தகுதி உள்ளவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறை அலுவலகங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். TRACE திட்டத்தின் ஒரு பகுதியாக, புதுமையான துறைகளில் வேலை தேடுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவிற்குள்ளும் வெளியிலும் புதிய தொழில் வாய்ப்புகள் மூலம் நிலையான வருவாய் ஈட்டுவதை சாத்தியப்படுத்த மாநில அரசு பெரிய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 500 பட்டியல் பழங்குடியினரை பீட் வன அதிகாரிகளாக நியமித்து மாநில அரசு வரலாறு படைத்துள்ளது. கேரளா பி.எஸ்.சி. மூலம் சிறப்பு ஆட்சேர்ப்பாக நியமிக்கப்பட்டனர் அதே மாதிரியில், 100 பட்டியல் பழங்குடியினர் கலால் காவலர்களாக நியமிக்கும் பணியும் நடந்து வருகிறது.