articles

புதிய தொழில்நுட்பங்களும் தீவிரமடையும் வேலையின்மையும் - சஞ்சய் ராய்

 தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் வளர்ச்சி, உண்மை வருவாயின் வளர்ச்சி ஆகியவற்றுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கிறது என்பதுதான் இன்றைய உலகின் நிலையாக உள்ளது. எனவே, உருவாக்கப்படுகிற மதிப்புடன் ஒப்பிடும்போது கூலி குறைவதாகவே அமைகிறது. இது கிராக்கி அதிகரிப்பதற்கான வாய்ப்பைக் குறைத்து, வேலைவாய்ப்பையும் குறைக்கிறது.

விலைவாசி உயர்வு - வேலையின்மை

மோடி அரசின் நாசகர கொள்கைகளை 
அம்பலப்படுத்தி செப்டம்பர் 1 - 7
சிபிஐ(எம்) பிரச்சார இயக்கம்
- சிறப்புக் கட்டுரை -

புதிய தொழில்நுட்பங்களின் வரவு உலகம் முழு வதுமே வேலையிழப்பு குறித்த பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இடைநிலையிலுள்ள வழக்கமான பணிகளில் மனிதர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவுகொண்ட எந்திரங்களைப் பயன் படுத்துவது வளர்ந்த நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கி யிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் இணையம், பெருந்தரவு, தொடரேடு (ப்ளாக் செயின்), 5ஜி, முப்பரிமாண அச்சிடல், தானியங்கியியல், தானி யங்கி வானூர்திகள்(ட்ரோன்), மரபணு மாற்றிய மைத்தல், சூரிய மின்சாரத் தொழில்நுட்பங்கள் என்று வரிசையாக அணிவகுக்கிற இவை தொழில்நுட்பப் புரட்சியைத் தொடங்கிவைப்பதாகவே தோன்றுகிறது. உலகின் பல நாடுகளிலும் இத்தொழில்நுட்பங்கள் பல மாறுபட்ட வளர்ச்சிக் கட்டங்களை எட்டியுள்ளன. தொழில்நுட்பங்கள் பொதுவாகவே உற்பத்தி முறை களை மாற்றியமைத்து, அதன்மூலம் விலைகளிலும் தாக்கம் ஏற்படுத்துகின்றன. மனித உழைப்பைக் குறைப்பதே பொதுவாகத் தொழில்நுட்பங்களின் நோக்கம் என்பதால், வேலையிழப்பை ஏற்படுத்துப வையாகவே அவை இருக்கின்றன. அதே நேரத்தில் புதிய எந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றின் உற்பத்தி யும், அதற்குரிய திறன்(ஸ்கில்) பெற்ற மனிதர்களின் தேவையும் ஏற்படவே செய்கிறது. அதனால் வேலை வாய்ப்பின்மீது தொழில்நுட்பம் ஏற்படுத்துகிற தாக்கம் என்பது சிக்கலானதாகவே இருக்கிறது. பொதுவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உற்பத்தியின் பல நிலைகளிலும் தாக்கம் ஏற்படுத்துகின்றன. மிகச்சில பெரும்பணக்காரர்களுடன், எஞ்சியுள்ள அனைவரும் உழைப்பை விற்றே வாழவேண்டும் என்ற நிலையி லுள்ள சமூகங்களில் இது அஞ்சத் தக்கதாகிவிடுகிறது.

உயிரற்ற, உயிருள்ள உழைக்கும் பட்டாளத்திற்கு இடையிலான முரண்

மனித உழைப்பைக் குறைப்பது என்பது வேலை யிழப்பாகி, மிகப்பெரிய பகுதி மக்களின் வருவாய் இழப்பாக மாறிவிடுகிறது. தொழிலாளர்கள் புதிய வற்றைக் கற்றுக்கொள்வதும் அவசியமாவதுடன், மிகப்பெரும்பகுதித் தொழிலாளர்களைத் தேவையற்ற வர்களாகவும் ஆக்கிவிடுகிறது. உயிரற்ற, உயிருள்ள உழைக்கும் பட்டாளத்திற்கிடையேயான முரண்கள் இந்தத் தொழில்நுட்பச் சூறாவளியில் மீண்டும் கவனிக்க வேண்டியதாகியிருக்கின்றன.  தொழிலாளர்களின் வளர்ச்சியைவிட வேகமான வளர்ச்சியை உள்ளார்ந்த நடைமுறையாகக் கொண்டி ருக்கிற முதலாளித்துவம், வேலையின்மையையும், அதன்மூலம் கூலியைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு வேலையில்லாப் பட்டாளத்தையும் எப்போதும் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறது. வேலையின்மை என்பது தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும் ஆயுத மாகப் பயன்படுத்தப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி யால் ஏற்படும் உற்பத்தி வளர்ச்சி என்பது முத லாளித்துவத்தில் திட்டமிட்டதாக இருப்பதில்லை. சராசரி லாபத்தைவிடக் கூடுதலான லாபத்தைச் சம்பா திக்கும் நோக்கில், புதிய தொழில்நுட்பங்களைக் கைக்கொள்வது என்பது இயல்பாகவே நடக்கிறது. அப்படியான புதிய தொழில்நுட்பம் பரவலாகும்போது, அந்தக் கூடுதல் லாபம் மறைந்து அடுத்த புதிய தொழில்நுட்பத்துக்கான தேவையும் வந்துவிடுகிறது. 

அதிகரிக்கும் இடைவெளி

உற்பத்தி உயர்வு விலையைக் குறைக்கும் என்ப தால், செலவு குறைந்து உண்மை வருவாய் அதி கரிக்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. அப்படி  மிச்சமாகிற பணத்தில் மக்கள் கூடுதலாக அல்லது புதிய பொருட்களை வாங்குவதால் தேவை அதி கரிக்கும், அதன்மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று வாதிடப்பட்டாலும் அது மேலும் பல காரணிகளைச் சார்ந்திருக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள் உற்பத்தி வளர்ச்சியை ஏற்படுத்தி னாலும், அவற்றால் ஏற்படும் லாபம் தொழிலாளர்க ளுக்குப் பகிர்ந்தளிக்கப்படாமல், மிகச்சில முதலாளி களின் லாபமாகவே முடங்கிப்போகும்போது, தொழில் நுட்ப வரவால் வேலையிழப்பவர்களின் அள வுக்குக்கூட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாமல் போய்விடுகிறது. தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் வளர்ச்சி, உண்மை வருவாயின் வளர்ச்சி ஆகிய வற்றுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கிறது என்பதுதான் இன்றைய உலகின் நிலையாக உள்ளது. எனவே, உருவாக்கப்படுகிற மதிப்புடன் ஒப்பிடும்போது கூலி குறைவதாகவே அமைகிறது. இது தேவை அதிகரிப்பதற்கான வாய்ப்பைக் குறைத்து, வேலைவாய்ப்பையும் குறைக்கிறது. இந்த விளைவுகள் எல்லாத்துறைகளிலும் ஒரே  மாதிரி இருப்பதில்லை. உணவு போன்ற அடிப்படைத் தேவைப் பொருட்களின் விலைகள் குறைந்தாலும், ஓரளவுக்குமேல் தேவை உயர வாய்ப்பில்லை. மிகப்பெரிய பகுதி மக்கள் மிகக் குறைந்த வருவா யுடன் இருக்கும்போது, விலை குறைந்தாலும் நுகர்வு உயர்வதில்லை. மக்களின் தேவைகள் நிறைவு பெறுகிற நிலையிலுள்ள துறைகளிலும் விலை சரிவு என்பது கிராக்கியை அதிகரிப்பதில்லை.

எனவே, புதிய தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப்படும் துறையைப் பொறுத்து விளைவுகளும் மாறுபடுகின்றன. தொழிலாளர்களின் கூலி அதிகமாக இருக்கிற துறைகளில் தொழிலாளர்களைக் குறைக்கும் தொழில்நுட்பங்கள் உற்பத்திச் செலவைக் குறைக்க உதவலாம். ஆனால், ஏற்கெனவே கூலி குறைவாக இருக்கிற துறைகளில், உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கு பதிலாக, உழைப்பின்மீதான முத லாளியின் கட்டுப்பாட்டை அதிகரிக்கவே புதிய  தொழில் நுட்பங்கள் உதவுகின்றன. புதிய  தொழில்நுட்பங்களை கைக்கொள்வதற்காகச் செய்யப்பட்ட செலவுகளை விட அதிகமாக லாபம் அதிகரிக்கும் என்றால் மட்டுமே முதலாளிகள் புதிய   தொழில்நுட்பங்களை நடைமுறைப் படுத்துகிறார்கள். எனவே, புதிய தொழில்நுட்பங் களின் பரவல் வேகம் மட்டுமின்றி, அவற்றால் உரு வாகும் லாபத்தின் பரவலும் வேலைவாய்ப்பின்மீதான அதன் தாக்கத்தை நிர்ணயிக்கின்றது.  தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிகள், அவை நடைமுறைப்படுத்தப்படுகிற சமூகப் பின்னணியில், வேலைவாய்ப்பு வளர்ச்சியை உருவாக்குவது சிரமமே. ஏற்றத்தாழ்வுகளை மிகப்பெரிய அளவில் அதி கரித்திருக்கிற புதிய தாராளமயச் சூழலில், புதிய தொழில்நுட்பங்களால் உருவாகும் கூடுதல் வருவாய் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே. ஜிடிபியில் தொழிலாளர்களின் பங்கு உலக அளவில் சரிந்திருப்பதும் அதையேதான் உணர்த்துகிறது.  இருபதாம் நூற்றாண்டில் அதிகரித்துக் கொண்டே இருந்த ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்ய வேண்டிய நெருக்கடி முதலாளித்துவத்துக்கு ஏற்பட்டது. அதற்காக மேற்கொள்ளப்பட்ட சமூகப் பாதுகாப்பு நடவடிக்கை கள், சுமார் 4 பத்தாண்டுகளுக்கு ஓரளவுக்குப் பகிர்ந்த ளித்தலை உறுதிப்படுத்தின. தாராளமயம் இதனை முடிவுக்குக் கொண்டுவந்தது. அடுத்ததாக, தற்போ தைய தொழில்நுட்ப முன்னேற்றங்களில் பணியாற்றத் தேவைப்படுகிற திறன் என்பது அனுபவத்தில் உண்டாகக்கூடியதல்ல. தொழிற்புரட்சிக் காலத்தில், தொழிற்சாலைகளுக்கு வந்த விவசாயத் தொழிலாளர்க ளுக்கு மிகச்சிறிய பயிற்சி அளித்ததுமே, அவர்கள் வேலையின் போக்கில் கற்றுக்கொள்ள முடிந்தது.

கல்வி, பயிற்சி வணிகமயச் சூழலில் திறனடைய முடியா நிலை...

தொழில்நுட்ப எல்லைகள் மிக வேகமாக விரிவ டைவதால், புதிய தொழில்நுட்பங்களில் பணியாற்றுவ தற்கு அவற்றுக்குரிய கல்வி தேவைப்படுகிறது. உதாரணமாக உழுவதையும், விதைப்பதையும் முந்தைய தலைமுறையிடமிருந்து கற்றதைப்போல, இன்றைய தகவல் தொழில்நுட்ப, செயற்கை நுண்ண றிவுப் பணிகளுக்கான திறன்களை எளிதில் அடைய முடியாது. கல்வியும், பயிற்சியும் வணிகமயமாக்கப் படுகிற சூழலில், மிகப்பெரும்பகுதியினர் இந்தத் திறன்களை அடைய முடியாத நிலையும் ஏற்படுகிறது.  இறுதியாக, தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, மனித உழைப்பின் தேவையைக் குறைப்பதன்மூலம், மனிதனின் ஓய்வு நேரத்தை அதிகரிக்க வேண்டும். தற்போதைய உற்பத்தி உறவுகளின்படி, உற்பத்திக் கருவிகளின் உடைமையாளர்களே இந்த விடுபடும் நேரத்தின்மீது ஆதிக்கம் செலுத்த முடியும். அத னால், தொழில்நுட்பங்களால் விடுபடும் நேரம் என்பது வேலையிழப்பாகவே மாறும். ஓய்வு நேரம் அதிகரிப்பதற்கு பதிலாக, வாழ்க்கையளிக்கிற வேலை யிலிருந்தே மனிதர்கள் வெளியேற்றப்படுவார்கள். புதிய தொழில்நுட்பங்களுக்குச் செய்யப்பட்ட செலவுக ளை, கூடுதல் லாபமாக விரைவில் சம்பாதிக்கவே முதலாளிகள் முயற்சிப்பார்கள் என்பதால், பணியில் தொடர்பவர்களும் அதிக நேரம் கடுமையாக உழைக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாவார்கள். ஆகவே, தற்போதைய முதலாளித்துவ அமைப்பில் நிலவுகிற உற்பத்தி உறவுகளின் பின்னணியில், புதிய தொழில்நுட்பங்கள் என்பவை, அதை உருவாக்குகிற மனிதர்களுக்கு எதிரானவையாகவே அமையும்.

தமிழில்: அ.அறிவுக்கடல், (பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 27.8.23)