articles

img

பொது சிவில் சட்டம் குறித்து அரசியல், மதத் தலைவர்களுடன் ஆலோசிக்க மறுப்பது ஏன்?

தோழர் ஏ.நல்லசிவன் நூற்றாண்டு விழாவில் மோடிக்கு ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

அம்பாசமுத்திரம்,ஜூலை 17- மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஹிட்லர் போல் நடப்பார் என்று எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், பொதுச் சிவில் சட்டம் குறித்து  அரசியல் கட்சித் தலைவர்கள், மதத் தலை வர்களுடன் பிரதமர் மோடி ஏன் கலந்தாலோசிக்க மறுக்கிறார்? என்று கேள்வி எழுப்பினார். அம்பாசமுத்திரத்தில் நடை பெற்ற தோழர் ஏ.நல்லசிவன் நூற்றாண்டு நிறைவு பொதுக் கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:- கம்யூனிச சித்தாந்தமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமது குடும்பமும் ஒன் றெனக் கருதியவர் தோழர் ஏ.நல்ல சிவன். உழைப்பாளி மக்களுக் காக வாழ்ந்தவர். நெல்லை மாவட்டத்தில் சிஐடியு அமைப்பை பலம் பொருந்தியதாக மாற்றி யதில் நல்லசிவனுக்கு முக்கியப் பங்குண்டு. இந்த நிகழ்வில் நல்ல சிவனின் மகள்கள், பேரன்கள் உறவினர்கள் கலந்துகொண்டுள் ளது பெருமைக்குரியது என்றார். தோழர் ஏ.நல்லசிவன் நூற்றா ண்டு மலரில் கூறப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்தக்கூடியது.

இந்த நூலை அனைவரும் வாசிக்க வேண்டும். சமூக மாற்றத்திற்கான விடுதலை நிச்சயம் சாத்தியம் என்பதை இந்த நூல் உணர்த்தும் என்றார். இந்திய அரசியல் நிலைமை குறித்துப் பேசிய ஜி.ராமகிருஷ் ணன், “ பிரதமர் மோடி விவசா யிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்குவேன். வருடத்திற்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை கொடுப்பேன். ஒவ்வொ ருவர் வங்கிக் கணக்கிலும் லட்சம் லட்சமாகச் செலுத்து வேன் என்றார்”. இதில் எதுவும் நடக்கவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளுக்குப் பதில் கூற மறுக் கும் பிரதமர், பத்திரிகையா ளர்களைச் சந்திக்க மறுக்கும் பிரதமர் வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செல்லும் போது அங்குப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். அமெரிக்கப் பத்திரி கையாளர் ஒருவர், சிறுபான்மை மக்களிடையே நிலவும் அச்சம், மணிப்பூர் பிரச்சனை குறித்துக் கேள்வியெழுப்பியதோடு மத மோதல், சாதிய மோதல்களால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படாதா எனக் கேட்டதற்குப் பிரதமர் மோடி, தமது ரத்தத்தில் ஜனநாயகம் ஓடிக்கொண்டி ருப்பதாகக் கூறுகிறார். மதப்பிரச்ச னையோ, சாதிப்பிரச்சனையோ இந்தியாவில் இல்லை என்கிறார். நாடு திரும்பியவுடன் பொதுச் சிவில் சட்டத்தை அமல்படுத்து வேன் என்கிறார். பல மொழி, பல இனக்குழுக்கள், பல கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவில் பொதுச் சிவில் சட்டம் தேவையில்லை.  இது குறித்து ஏன் பிரதமர் கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்க ளைக் கலந்தாலோசிக்க மறுக் கிறார். வெளிநாட்டில் பேசுவது ஒன்று; சொந்த நாட்டில் பேசுவது மற்றொன்று என அவர் இரட்டை வேடம் போடுகிறார். 2024-ஆம் ஆண்டுத் தேர்தலில் மோடி தோற்கடிக்கப்படுவது நிச்சயம் என்றார்.