articles

img

மக்கள் தலையில் சுமை ஏற்றாதீர்!

தீபாவளிக்கும் இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது. ஆனால் இதுவரைக்கும் போனஸ் அறிவிப்பு அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்க ளுக்கு செய்யப்படவில்லை. இது கடுமையான வருத் தத்தை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. எனவே, உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும்.  கடந்த காலத்தில் போக்குவரத்து, மின்சாரம், சிவில் சப்ளைஸ் துறையினருக்கு 20 விழுக்காடு போனஸ் கொடுத்தனர். இவர்கள் 10 விழுக்காடு போனஸ் மட்டுமே அறிவித்தனர். அதற்கு கொரோனா உள்ளிட்ட சில நியாயங்கள் கூறினர். ஆனால், இந்த வருடம் 20 விழுக்காடு கொடுக்க வேண்டும். 

நலவாரியம்

நலவாரிய உறுப்பினர்களுக்கு பாண்டிச்சேரியில் ரூ.2000 போனஸ் வழங்கப்படுகிறது. அதேபோல் இங்கும் போனஸ் வழங்க வேண்டும். பொங்கலை யொட்டி வழங்கப்படும் வேட்டி, சேலை என்பதும் மறுக்கப்படுகிறது. நலவாரிய குழுக்களில் கட்டுமா னத்திலும், பனைமரம் ஏறும் வாரியத்திலும் விபத்தில் இறந்தால் ரூ.5 லட்சம் என அதிகப்படுத்தியுள்ளனர். மற்ற நலவாரியத்தில் அதே நிலை ஏற்பட்டால் ஒரு லட்சம் தான் என உள்ளது. அதேபோல திருமணம் மற்றும் கல்வி உதவித்தொகையும் குறைவாகத் தான் வழங்கப்படுகிறது. இதை சமப்படுத்தி வழங்க வேண்டும்.

தொழில்களை காப்பாற்றுக!

ஜவுளித்தொழில், சிறுகுறு, நடுத்தரத் தொழில் கள், பட்டாசு, தீப்பெட்டி போன்ற அனைத்துத் தொழில்களும் கடுமையான நெருக்கடியில் இருக்கின்றன. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும், வருமான இழப்பும் ஏற்படுகிறது. முன்பு வருடம் 365 நாள் வேலை இருந்ததைப் போல எந்த தொழிலிலும் இன்று வேலை இல்லை. தீபாவளி நேரத்திலேயே தொழிலாளர்களுக்கு லோடு இல்லை என்ற நிலை உள்ளது. அரசு இதில் தலையிட்டு தொழில் நசியாமல் இருப்பதற்கான தீவிர நடவடிக்கை களை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசாங்கத்தின் ஏற்றுமதிக் கொள்கை, இறக்குமதி கொள்கை ஆகிய வற்றிற்கு அழுத்தம் கொடுத்து தொழில்களைக் காப்பாற்ற வேண்டும். தமிழக அரசு மின் கட்டண உயர்வு செய்திருப்ப தை கைவிட வேண்டும். ஏனெனில் வாரியத்திற்கு நஷ்டம் என்று சொல்கிறார்கள். ஒன்றிய அரசு அழுத்தம் கொடுப்பதாக சொல்கிறார்கள். மக்களு டைய தாங்கும் திறன் என்ன என்பதை அரசு கவலை யோடு பார்க்க வேண்டும். அதற்கேற்பத்தான் நடவ டிக்கை எடுக்க வேண்டும். 

வரி உயர்வால் கடும் வேதனை

வீட்டு வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது நியாயமான உயர்வே அல்ல. சென்னை போன்ற இடங்களில் 100, 150 சதவீதம் உயர்த்தியிருக்கின்றனர். அதேபோல பிளாட்டுகளுக்கு தண்ணீர் கட்டணம் ஏற்கனவே 6000 ரூபாய் 6 மாதங்களுக்கு செலுத்தி வந்தவர்கள், இன்று ஒரு மாதத்திற்கு ரூ.27 ஆயிரம் செலுத்த வேண்டும் எனும் நிலை ஏற்பட்டுள்ளது. இது கற்பனை செய்ய முடியாத உயர்வாக உள்ளது. இது மக்கள் மத்தியில் கடுமையான வேதனையை, வருத்தத்தை உண்டாக்குகிறது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக நியாய மான முடிவுகளை அரசு எடுக்க வேண்டும்.

மின்வாரிய தனியார்மயத்தின் தொடக்கம்

பல தொழிற்சாலைகள் தனியார்மயப்படுத்த வேண்டும் என்னும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடு கிறது. போக்குவரத்து போன்ற துறைகளில் தனியார் பேருந்துகளை குத்தகைக்கு எடுத்து இயக்கு வோம் என்று டெண்டர் விடப்படுகிறது. இது மிகமிக  ஆபத்தான போக்கு. இதனை கைவிட வேண்டும். அதேபோல மின்வாரியத்தில் துணை மின் நிலை யங்களின் பராமரிப்பை தனியாருக்கு கொடுத்து விடு வோம் என்கின்றனர். அங்கெல்லாம் மின்வாரிய ஊழி யர்கள் இருந்து பராமரிக்கின்றனர். அவர்களை வெளியேற்றி விட்டு அல்லது வேறு இடத்திற்கு அனுப்பி விட்டு அந்த இடத்தில் தனியாருக்கு விடுவோம் என்பது மின்வாரியத்தை தனியார் மயப்படுத்துவதற்கான தொடக்கம். இது கடுமையான விளைவுகளை உண்டாக்கும். கான்ட்ராக்ட் முறை, கேசுவல் முறை,  குறிப்பிட்ட கால வேலை என்று தொழிலாளர்களை நிரந்தரமற்றவர்களாக ஆக்குவதற்கான பெரும் முயற்சியை முதலாளிகள் எடுக்கிறார்கள். அரசும் அதற்கு துணை நிற்கிறது. தன்னுடைய நிறுவனங்க ளில் அரசும் அதைப் பின்பற்றுவது வேதனையாக உள்ளது. டேன் டீ மூடப்பட்டுள்ளது. இது தனியார் மயப்படுத்துவதற்கான ஏற்பாடு தான். பழைய ஓய்வூதியம் என்பது போன்ற, ஐசிடிஎஸ், ஆஷா, மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டப்பணியாளர்களின் நியாயமான கோரிக்கைக ளை அரசு ஏற்க மறுத்து வருகிறது. இதெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லியிருப்பதுதான். திட்டப்பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவோம். அரசு ஊழியர்களுக்கு அல்லது பொ துத்துறை ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கு வோம் என தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளனர். அவை இன்றும் அமலாகாமல் இருக்கிறது. இது போன்ற விசயங்களில் அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்.

யமஹா வேலை நிறுத்தம்

யமஹாவில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. தொழிற்சங்கத்தை அனுமதிக்க முடியாது என்று முதலாளிகள் சொல்கின்றனர். தொழிலாளர் துறை  முழுக்க முழுக்க நிர்வாகத்திற்கு ஆதரவாக உள்ளது.  பெரும்பான்மை தொழிலாளிகள் ஏற்கிற தொழிற்சங்கத்தை நிராகரித்து விட்டு நிர்வாகத்திற்கு அனுசரணையாக இருக்கிற சில கருங்காலிகளை வைத்துக் கொண்டு சங்கம், ஒப்பந்தம் என்று செய்தால் தொழிலமைதி முழுக்க சீரழிந்து போகும். ஏற்கனவே அந்த காலத்தில் (1968) சிம்சன் உள்ளிட்ட பெரும் போராட்டங்கள் நடந்ததற்கெல்லாம் தொழிற் சங்கத்திற்குள் போட்டி சங்கத்தை உண்டாக்கியது தான் காரணம். அதேபோன்ற நிலையை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது மோசமான விளைவுக ளை ஏற்படுத்தும். இன்று யமஹாவில் அந்த தொழி லாளிகள் பெரும்பான்மையைக் பார்ப்பதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்து எனக் கேட்கின்றனர். அதில் என்ன கஷ்டம் இருக்கிறது? நிர்வாகம் அதை செய்ய  மறுக்கிறது. ஆகவே வேலை நிறுத்தம் நடைபெறு கிறது. இதில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.       போர்டு கம்பெனி மூடப்பட்டுள்ளது. தொழிலாளர்க ளுக்கு வழங்கப்படும் நட்ட ஈட்டில் திருப்தி இல்லை என போராட்டம் நடத்துகின்றனர். அதில் தடுப்பு என்கிற பெயரில் கைது செய்யப்படுவதாகக் கூறப்படு கிறது. இது தொழிற்சங்கத்தை ஒடுக்குகிற நடவடிக்கை ஆகும். இவற்றை அரசு பின்பற்றக்கூடாது என்பது எங்களுடைய வேண்டுகோள். புதிய மூலதனம் வருகிறது என்பதற்காக நமது தொழிலாளர்களின் நலனை விட்டுக் கொடுக்க வேண்டும் என அரசு எதிர்பார்ப்பது ஏற்கத்தக்கதல்ல.

காலிப் பணியிடங்கள்

அரசு துறைகளில் ஏராளமான காலிப் பணி யிடங்கள் இருக்கின்றன. தேர்தல் வாக்குறுதியில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் அறிவித்தார். ஆனால் எங்கேயும் புதிதாக ஆள் எடுக்கப்படவில்லை. மிகவும் தவிர்க்க முடியாத சில இடங்களில் மட்டும்தான் சில ஆட்களை அரசு பணிக ளுக்கு எடுத்துள்ளனர். லட்சம் பேர் எடுக்க வேண்டிய இடத்தில் சில ஆயிரம் பேரை எடுத்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், விரிவுரையாளர்கள் ஏராளமாகத் தேவைப்படுகின்றனர். அதற்கு நிரந்த ரப்பணியில் எடுக்காமல் நிரந்தரமற்ற முறையில் கவுரவ விரிவுரையாளர், கணினி ஆசிரியர், பகுதி நேர ஆசிரியர் என்கிற முறையில் தான் எடுக்கின்ற னர். இது ஏற்க முடியாதது.  போக்குவரத்தில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. அதனால் வண்டிகள் ஓடவில்லை. குறிப்பாக விரைவு போக்குவரத்து கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. அந்த இடங்களில் காண்ட்ராக்ட் உள்ளிட்ட முறைகளில் தொழிலாளர்களை சேர்ப்ப தாக அறிவித்து வருகின்றனர். வழக்கம் போல நிரந்த ரப் பணியாளர்களை எடுப்பது என்பதை அங்கு செய்ய மறுக்கின்றனர். மின்வாரியத்திலும் இதேநிலை தான். கட்டாயமாகத் தேவை என்கிற இடத்தில் நிரந்தர மற்ற தொழிலாளர்களை நியமிப்பது என தனியார் முதலாளிகள் செய்வதைப் போல தான் அரசும் யோசிக்கிறது. அரசு தன் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் அளித்த பேட்டியிலிருந்து...