articles

img

பிரிக்ஸ் விரிவாக்கமும் ஏகாதிபத்திய ஏமாற்றமும் - க.ஆனந்தன்

பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாடு  தென்ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க், நகரில் நடைபெற்றது. பொதுவாக இந்த அமைப்பை ‘பூகோள தெற்கு (குளோபல் சௌத்)’ என்ற பதத்தால் குறிப்பிடுவர்.  மேற்கத்திய ஊடகங்களில் கடந்த ஒரு வார காலமாக முக்கியச் செய்தியாக இடம்பிடித்த புவி அரசியல் நிகழ்வாக “பிரிக்ஸ்” உச்சிமாநாடு பார்க்கப்படுகிறது. இது குறித்து எழுதிய மேற்கத்திய ஊடகங்கள் இது வளர்ந்த நாடுகளின் அமைப்பான ஜி-7 அமைப்பிற்கு போட்டி அமைப்பு என்றும், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிரான அமைப்பு என்றும் எழுதி வந்தன. காரணம் அமெரிக்க அரசின்  நிலைப்பாடு அது.  ஆனால், பிரிக்ஸ் அமைப்பு ஆரம்பம் முதலே எந்த ஒரு கூட்டணிக்கும் எந்த ஒரு நாட்டிற்கும் எதிரான ஒரு அமைப்பு அல்ல, நேட்டோ போன்ற இராணுவ கூட்டும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. 

இந்த முறை பிரிக்ஸ் மாநாடு வழக்க மான நிகழ்ச்சி நிரல் தவிர, பிரிக்ஸ் விரி வாக்கம் பற்றி தனது 3 நாள் உச்சி மாநாட்டில் விவாதிக்க இருந்ததே அமெரிக்க தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் பதற்றத்திற்குக் காரணம்.  “நியூயார்க் டைம்ஸ்”  பத்திரிகை (ஆகஸ்ட் 22) லின்சி கியூட்டல் எழுதிய “பிரிக்ஸ் கூட்டம், சர்வதேச ஆர்வத்தை இத்தனை ஆண்டு களில் இல்லாத அளவிற்கு கவர்ந்துள்ளது (BRICS meeting attracts Global interest Not seen in Years)” என்று தலைப்பிட்ட கட்டுரையை வெளியிட்டு நிலைமையை வெளிப்படுத்தியிருந்தது.  “தி கார்டியன்“ பத்திரிகை தனது ஆப்பிரிக்க சிறப்பு நிருபரின் கட்டுரையைப் பிரசுரித்துள்ளது. அதில் இந்த மாநாடு  சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் புவி அரசியல் நோக்கங்களுக்காக, அமெரிக்க மேலாண்மைக்கு எதிராக, அமெரிக்க டால ரின் மேலாண்மைக்கு எதிராக, அமெரிக்கா  தலைமையிலான வளர்ந்த நாடுகளுக்கு எதி ராக மாற்றப்படுவதாகவும், அதற்கு எதிராக இந்தியா வலுவான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எழுதியுள்ளது. பிற பல  ஏடுகளின் கட்டுரைகளைப் போல இந்த  கட்டுரையும் “பிரிக்ஸ் அமைப்பு விரிவாக்கத்தை  இந்தியா கட்டாயம் தடுக்கும்” என நம்பிக்கை தெரிவித்திருந்தது. 

உச்சி மாநாடு நடந்து முடிவுகள் அறி விக்கப்படும் முன்பு ராய்ட்டர் செய்தி நிறு வனம் தனது தளத்தில் ஒரு கட்டுரையை  ஆகஸ்ட் 24 மாலை வெளியிட்டது. காரியன் டூ பிளஸ்சிஸ், கிஷன் கௌசிக் ஆகியோர் எழுதிய அக்கட்டுரையில், பிரிக்ஸ் விரிவாக்கம் குறித்து அந்த அமைப்பில் கடைசி நேரத்தில் மிக நீண்ட விவாதம் நடை பெற்றதாகவும்; விரிவாக்கத்திற்கு இந்தியா  கடும் தடை எழுப்பியதாகவும்; இறுதியில் “சர்வதேச பொருளாதார தடையில்லாத நாடுகள் மட்டுமே அங்கம் வகிக்கலாம்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாகவும்; ஆகவே விரிவாக்கம் என்பது இம்முறை இருக்காது என்றும்; அதன் மூலம் புவிகோள  தெற்கிற்கு உலக நடப்புகளில் மிக அதிக பங்களிப்பு-முக்கியத்துவம் கொடுக்கும் பிரிக்ஸ் அமைப்பின் நீண்டகாலக் கனவு  தகர்ந்தது என்றும் கருத்து தெரிவித்திருந்தது.  பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போதே, அமெரிக்க நிர்வாகம், இந்தியாவிடம் பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கத்திற்கு எதிராக இருக்குமாறும், டாலருக்கு மாற்று நாணய யோசனைகளுக்கு எதிராக இருக்குமாறு ‘அறிவுறுத்தப்பட்டதாக’ பல ஊடகங்கள் பேசிவந்தன. சமூக ஊட கங்களில் இந்தியா பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி க்கு எதிராக இருப்பதாகவும் செய்திகள் வெளி யாகின. 

இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு முன்பு தென் ஆப்பிரிக்க மக்களிடம் பேசிய அந்த குடியரசின் ஜனாதிபதி சிரில் ரம போசா, “நாங்கள் எந்த ஒரு சர்வதேச சக்தியுடனும் போட்டியிடவில்லை( not be drawn in contest with global powers)” என்று அறிவித்தார்.  மேலும், ஏதாவது ஒரு உலக சக்தியுடன் கூட்டணி அமைப்பதில்லை என்ற எங்களது நிலைப்பாட்டின் அர்த்தம், நாங்கள் எங்கள் கொள்கைகள் மற்றும் நாட்டு நலன் போன்றவற்றிலும் நடுநிலை வகிப்போம் என்பதல்ல” என்றும் தெளிவுபடுத்தினார். இந்த மாநாட்டில் பேசிய இந்திய பிரதமர் மோடி, “நாங்கள் விரிவாக்கத்திற்கு ஆதர வானவர்கள் (We are proponents of expansion) என்று மிகத் தெளிவாக அறிவித்ததற்குப் பிறகும் ராய்ட்டர் அந்த கட்டுரையை வெளியிட்டிருந்தது.  ஜி-7 அமைப்பு, ஐரோப்பிய நாடாளு மன்றம், நேட்டோ போன்ற நவீன காலனி யாதிக்க அமைப்புகளில் ஜனநாயகம் கிடையாது; அங்கு அமெரிக்க நலன்களை நிறைவேற்றுவதே பிரதானம். தங்கள் நாட்டு நலன்களை அமெரிக்க நாட்டு நலன்களுக்காக விட்டு கொடுப்பதற்கு எதிராக ஜெர்மனியிலும், பிரான்சிலும், கிரீசிலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் கடும் விமர்சனங்கள், கண்டனங்கள் முழங்கப்பட்டு வருகின்றன. அந்த அமைப்புகளில் அமெரிக்காவிற்கு மட்டும் வீட்டோ அதிகாரம் (ரத்து அதிகாரம்) உண்டு. இதர நாடுகள் அமெரிக்கா செல்வதை ஏற்றுக் கொள்ள மட்டுமே முடியும். 

மாறாக, பிரிக்ஸ் அமைப்பு என்பது முடிவைத் திணிக்கும் அமைப்பல்ல என்பதையும், ஜனநாயக அமைப்பு என்பதையும், எல்லா முடிவுகளும் அனைத்து உறுப்பினர்களின் சம்மதத்தின் படியே (consensus) என்றும்  ராய்ட்டர் அந்த கட்டுரையிலேயே தெளிவாக எடுத்து வைத்துள்ளது. பிரிக்ஸில் அனைத்து உறுப்பினர் களுக்கும் வீட்டோ அதிகாரம் உண்டு. ஆகவே முடிவுகளைத் திணிக்க முடியாது. இந்த நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாடு, 6 புதிய உறுப்பினர்களை தங்கள் அணியில் சேர்த்துள்ளதாக தென்ஆப்பிரிக்க குடியரசுத் தலைவர் (பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்) சிரில் ரம போசா அறிவித்தார்.  அர்ஜெண்டினா, ஈரான், எத்தியோப்பியா, எகிப்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு  அமீரகம் ஆகிய நாடுகள் புதிய உறுப்பினர் களாக இணைக்கப்பட்டுள்ளன. இதில் ஈரான் இணைவதற்கு இந்தியா கடுமையாக எதிர்க்கும் என்ற அமெரிக்க எதிர்பார்ப்பும் தகர்ந்துவிட்டது. 

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஈரான்- சவூதி அரேபியா, எகிப்து-எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கிடையே பகையை  அமெரிக்கா - பிரிட்டன் தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் குறையாமல்  பார்த்துக் கொண்டன.  தற்போது பிரிக்ஸ் அமைப்பு அந்த நாடு களை, தங்களின் பழைய விரோதங்களை மறந்து  தங்கள் நாட்டு வளர்ச்சிக்கு முன்னுரி மை கொடுக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. பதற்றம் இருந்தால்தான் அமெரிக்கா, ஏகாதிபத்தியம், அமெரிக்கா வின் இராணுவ-தொழிற்கூட்டணி செழித்து சிறக்கும். பிரிக்ஸ் அதற்கு எதிராக வளர்ந்து கொண்டிருக்கிறது.