articles

img

ஆமை வேகத்தில் நடக்கும் உதகை மார்க்கெட் கட்டுமானப்பணி -சேக் அமீன்

சேக் அமீன்  உதகை, டிச.5-  ஆமை வேகத்தில் நடக்கும் உதகை மார்க்கெட் புனரமைப்பு. ஓராண்டுக்குள் கட்டுமானப்பணி முடியும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை கால்  பங்கு பணிகள் கூட நிறையடைய வில்லை என மார்க்கெட் வியாபா ரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

 நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிக ளில் காய்கறிகளை அறுவடை செய்த பின்னர் சிறு, குறு விவசாயி கள் உதகை நகராட்சி மார்க்கெட் டில் உள்ள மண்டிகளுக்கு விற் பனைக்காக கொண்டு வருகின்ற னர். அங்கு மொத்த வியாபாரிகள்  ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர். இங்கு 1500 நிரந் தர கடைகளும் மற்றும் 500 தற்கா லிக கடைகளும் உள்ளன. இந்த சந்தைக்கு தினமும் 3,500 முதல் 4000 வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.  இந்த மார்க்கெட்டில் அடிப் படை வசதிகள் மேம்படுத்தாத தால், மழை பெய்தால் மார்க்கெட் டில் ஆறு போல் வெள்ளம் ஓடுகி றது.

மேலும், வாகன நிறுத்தம் இல்லாதது, சுகாதாரமின்மை என  பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந் தது. குறிப்பாக, கடந்த 2020 ஆம்  ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில்  மார்க்கெட்டில் 80 கடைகள் வரை  சேதம் அடைந்தன. இதைத் தொடர்ந்து மார்க்கெட்டில் அடிப் படை வசதிகளை மேம்படுத்தி புதிய கடைகள் கட்ட நகராட்சி நிர் வாகம் திட்டமிட்டது.

ஆங்கிலேயர் காலத்தில் கட் டப்பட்ட பழமையான கட்டிடங் கள் என்பதால், 3 கட்டங்களாக பிரித்து பழைய கடைகளின் கட்டி டங்களை உடைத்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நகராட்சி நிர் வாகம் தீர்மானித்தது. இதற்காக கலைஞர் மேம்பாட்டு திட்டத் தின் கீழ் ரூ.36 கோடி நிதி ஒதுக்கப் பட்டு உள்ளது. முதற்கட்டமாக 192  கடைகளை இடித்து, புதிய கடை கள் கட்ட ரூ.18 கோடி ஒதுக்கப் பட்டு, கடந்தாண்டு மே மாதம் பணி  உத்தரவு வழங்கப்பட்டது.  இந்த கடை உரிமையாளர்க ளுக்கு தற்காலிக கடைகள் ஒதுக்க  வேண்டும் என வலியுறுத்தி வந்த னர்.  

இந்நிலையில், நீண்ட கால மாக மார்க்கெட் புனரமைப்பு பணி  இழுபறியாக இருந்த வந்த நிலை யில், கட்டுமானப்பணிகள் கடந் தாண்டு மே மாதம் தொடங்கி யது. ஆனால், தற்போதுவரை யில் பெரும் மந்தமாகவே இப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மார்க்கெட் வியா பாரிகள் கூறியதாவது, மாரக்கெட் கட்டுமானப்பணி ஓராண்டுக்குள் கட்டுமானப்பணிகள் நிறைவடை யும் என தெரிவிக்கப்பட்ட நிலை யில், தற்போது முதற்கட்ட பணி கள் பாதியளவு கூட நிறைவடைய வில்லை. கட்டுமானப்பணிகள் மிகவும் மெதுவாக நடந்து வரு கின்றன.

கட்டுமானப்பணி காரண மாக அப்பகுதி தூசு மண்டலமாக  காட்சியக்கிறது. மழை பெய்தால்  சேறும், சகதியுமாக மாறி விடுகி றது.  ஓராண்டுக்குள் கட்டுமானப் பணி நிறைவடையும் என கூறப் பட்ட நிலையில், தற்போது வரை கால்வாசி பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. மார்க்கெட் கடைகள் இடிக்கப்பட்டு இரண் டாண்டுகளாகிறது. தற்காலிக மார்க்கெட் பகுதியில் இட வசதி, தண்ணீர் வசதி, சுகாதாரம் ஏது மில்லாமல் வியாபாரிகள் அவதி யடைந்து வருகிறோம்.  புதிய மார்க்கெட் கட்டுமானப் பணிகள் எப்போது நிறை வடைந்து, எங்கள் கடைகள் ஒதுக்கப்படும் என்பது கேள்விக் குறியாக உள்ளது’ என்றனர்.

இதுகுறித்து, உதகை நக ராட்சி அதிகாரிகள் கூறும் போது,  ‘முதல் கட்டமாக 192 கடைகள் இடிக்கப்பட்டன. இரண்டாம் கட் டமாக 498 கடைகள் இடிக்கப்ப டும். இதன் பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கும் தரைதளத் தில் வாகனங்கள் நிறுத்துமிட மும், மேல் தளத்தில் 293 கடைகள்  கட்டப்படும். வாகனங்கள் நிறுத்து மிடத்தில் 263 இரு சக்கர வாகனங் களும்,  126 இலகு ரக வானகங்க ளும் நிறுத்த முடியும். மேலும், ஏடி எம், கழிப்பிடம், தண்ணீர் வசதி கள் ஏற்படுத்தப்படும். இந்த கட்டு மானப்பணி நிறைவடைந்ததும், மூன்றாம் கட்டப்பணிகள் தொடங் கும். கட்டுமானப் பணிகள் சுமார் ஓராண்டுக்குள் நிறைவடையும்’ என்றனர்.