articles

சங்கரய்யா வாழ்க்கை இளைய தலைமுறைக்கு என்றென்றும் உத்வேகமூட்டும்

தோழர் என். சங்கரய்யாவின் புரட்சிகர மான வாழ்க்கை இளைஞர்களுக்கு என்றென்றும் உத்வேகமூட்டும் என்று சீத்தா ராம் யெச்சூரி புகழஞ்சலி செலுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என். சங்கரய்யா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், அவர்  குறித்த செய்திகளை, கட்சியின் பொதுச்செய லாளர் சீத்தாராம் யெச்சூரி பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

தோழர் சங்கரய்யா, ஒரு புரட்சிகர வாழ்க்கையை வாழ்ந்து, இன்று நம்மை  விட்டுச் சென்றுள்ளார். நான் உள்பட வெவ்வேறு தலைமுறைகளை கவர்ந்திழுக்கக் கூடிய தலைவராக வாழ்ந்தவர் அவர். பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்ற துவங்கியது முதல் முடிக்கும் வரை அவரது பேச்சில் அனல் பறக்கும். அவரது உரை ஒரு  இடிமுழக்கம் போல் இருக்கும். இளை ஞர்கள் பலர் அவரது உரையால் ஈர்க்கப்பட்ட வர்கள். இந்தியாவில் புரட்சிகர மாற்றம் வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக அயராது உழைத்தவர்களில் தோழர் என். சங்கரய்யா வும் ஒருவர். 

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி 8 ஆண்டு சிறைக்குச் சென்றார். நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் அவர் சிறையில் சிலகாலம் இருந்தார். மார்க்சிஸம் - லெனினிசத்தின் புரட்சிகர கொள்கைகளை தவறாமல் கடைப் பிடித்தவர், அதிலிருந்து அவர் நெறிபிறழ வில்லை, யாராவது அதில் இருந்து விலகிச் செல்கையில், அதை எதிர்த்து கடுமையாக போராடியவர் சங்கரய்யா. எனவேதான் சங்கரய்யா தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவர் மட்டுமல்ல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்  இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்த 32 பேரில் ஒருவர். அவருடைய வாழ்க்கை ஒரு போராட்ட வாழ்க்கை. அவர் பல ஆண்டுகாலம் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இருப்பி னும் அவர் மக்களுக்கான போராட்டங்களுக்கு தொடர்ந்து தலைமையேற்றார். அதன் தொடர்ச்சியாக சட்டமன்ற தேர்தலிலும் போட்டி யிட்டு 3 முறை வெற்றிபெற்றார். அவர் சிறந்த சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்லாமல் வெகுஜன இயக்கங்களின் தலைசிறந்த தலைவராகவும் திகழ்ந்தார். அதைவிட முக்கிய மாக அவர் புரட்சிகர கட்சியை கட்டுவதற்காக செயல்பட்ட விதம், புரிந்த தியாகம் ஆகிய வற்றால் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பல ஆண்டுகாலம் பணி யாற்றினார். அவர் தற்போது நம்மோடு இல்லை. 

அறிவியலின்படி ஒருவரின் மறைவுக்குப் பின்னர் வாழ்க்கை இல்லை, அவர் இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இயற்கை அனுமதிக்கவில்லை. இருந்தாலும் அவரது 102 ஆண்டுகால வாழ்க்கை முழுமையான வாழ்க்கையாகும். அவரது வாழ்கையை நாம் கொண்டாடுவது என்பது இளைய தலைமுறையினரை உத்வேகமூட்ட உதவும்.

இன்று நம்மோடு அவர் இல்லை என்றாலும் இந்தியச் சமூகத்தை சோசலிச சமூகமாக மாற்றியமைக்கவும் மக்களின் நலன்களுக்காகவும் அவர் மேற்கொண்ட பணிகளை அவர் விட்டுச்சென்ற கடமை களை தொடர்ந்து மேற்கொள்ள நாம் உறுதி யேற்போம். தற்போதுள்ள துயரமான இந்தி யாவை மாற்றி ஒரு மக்கள் நலன் சார்ந்த ஒளிமயமான இந்தியாவை உருவாக்க அவர் கண்ட கனவை நனவாக்கத் தொடர்ந்து போராடுவோம்.