மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து நுகர்வோர் இடத்திற்கு எடுத்து செல்லும் போது கணிசமான அளவு வீணாகின்றது. ஆகவே விஞ்ஞானிகள் மின்சாரத்தை இழப்பு இல்லாமல் கடத்தும் பொருளைக் கண்டறிய பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு ஜூலை 21 அன்று தென்கொரிய இயற்பியலாளர்கள் குழு ஒன்று அப்படிப்பட்ட பொருளை உருவாக்கி யுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இது சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் மிகை கடத்தியதாக (சூப்பர் கண்டக்டர்) செயல்படுகிறதாம். இப்படிப்பட்ட மின்கடத்தியானது கனரக ஆலைகள், ஆய்வு கருவிகள், மருத்துவ சோதனை கருவிகள், நிறமானி, அணு உலை கட்டுமானம் போன்ற துறைகளிலும் பயன்படும். மிகைகடத்தல் தொடர்பான ஆய்வு ஒரு நூற்றாண்டாக நடைபெற்று வருகிறது. பொருட்களை அதிக அழுத்தத்தில் மிக குறைந்த வெப்ப நிலைக்கு குளிர்வித்தல் மற்றும் நுட்பமான அளவில் ஒரு பொருள் உண்மையிலேயே மிகை கடத்தியதாக மாறியுள்ளதா என்றறியும் தொழில்நுட்பங்களுடன் இணைந்தே இது வளர்ந்துள்ளது. இரண்டு துறைகளும் மிக அதிக நுட்பமானதும் மிக மிக குறைவான பிழைகளுமே அனுமதிக்க கூடியன.