அ மெரிக்க ஆதரவோடு இஸ்ரேல் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தி வருகிற கொடுமையான யுத்தம், உலகத்தில் மனசாட்சி உடைய அனைவரையும் கொதிப்படையச் செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக அமெரிக்கா, இஸ்ரேலை பயன்படுத்தி அரபு நாடுகளை மிரட்டும் அக்கிரமத்தை தொடர்ந்து செய்து வருகிறது. மூன்றாம் உலக நாடுகள் இஸ்ரேலை கண்டித்து வரும் சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவளித்த மோடி, இஸ்ரேல் பிரதமரை இந்தியாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து பாராட்டியவர். இஸ்ரேலை கண்டித்து உலகம் முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவளித்து, உலகத்தின் முன்னால் இந்தியாவை குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது.