articles

ஆளுநர்களின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்

மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல்  அளிப்பதற்காக வந்துள்ள சட்டமுன்வடிவுகள் மீது ஆளுநர்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய நியாயமான காலவரையறை என்ன என்பதை தீர்மானித்து, கறாரான தீர்ப்பினை அளிப்பது உச்சநீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது.

கூட்டாட்சி தத்துவத்தையும், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களையும், அரித்துவீழ்த்திடும் வழிகளில் ஒன்று, ஆளுநர்கள் சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளின்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது முடக்கி வைப்பதாகும்.

எவ்வளவு விரைவாக  முடியுமோ அவ்வளவு...

அரசமைப்புச்சட்டத்தின்கீழ், சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்டமுன்வடிவுகள், சட்ட மாவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் 200ஆவது பிரிவின்படி, ஆளுநர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு அது நிதிச் சட்டமுன்வடிவாக இல்லாதபட்சத்தில், ஒப்புதல் அளிக்க முடியும், அல்லது அந்தச் சட்டமுன்வடிவானது பொருத்தமற்ற தாக  இருப்பதாகவோ அல்லது  நீதித்துறை மறுஆய்வு அதிகாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருப்பதாகவோ கருதினால், அதன்மீது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைக்கலாம்.

ஒருவேளை, ஆளுநர் சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் அளித்திடாமல் நிறுத்திவைத்திட வேண்டும் என்று கருதினால், அவர் அந்தச் சட்டமுன்வடிவை “எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரை வாக”  நிறுத்தி வைத்திருப்பதற்கான காரணத்துடன், மேற்படி சட்டமுன்வடிவை மறுபரிசீலனை செய்வ தற்கோ, அல்லது அந்தச் சட்டமுன்வடிவில் குறிப்பிட்ட பிரிவு  எதையும் மாற்ற வேண்டும் என்று பரிந்து ரைத்தோ, சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பிட வேண்டும்.

சட்டமன்ற முடிவுக்கு வழிவிட வேண்டும்

சட்டமன்றம் அவ்வாறு அனுப்பப்பட்ட சட்டமுன் வடிவை மறுபரிசீலனை செய்து, மீண்டும் நிறை வேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தால், அதன் பின் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியாது. இதன் பொருள், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தலைவராக இருப்பவர், (அதாவது ஆளுநர்), மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் எடுத்த முடிவிற்கு ஒதுங்கிக்கொண்டு வழிவிட வேண்டும் என்பதாகும்.

முடக்கி வைத்திருப்பது  ஒரு வடிவம்

மோடி அரசாங்கத்தின்கீழ், மாநிலங்களின் உரிமை கள் மீதான ஒட்டுமொத்தமான தாக்குதல், மாநிலங்க ளில் உள்ள ஆளுநர்கள் எதிர்க்கட்சிகளால் ஆளப் படும் மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகள் மீது முடிவெதுவும் எடுக்காது முடக்கிவைத்திருப்பதும் ஒரு வடிவமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கேரளாவில் ஆளுநர், ஆரிஃப் முகமது கான், சட்டமன்றம் நிறைவேற்றிய எட்டு சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வில்லை. இவற்றில் மூன்று, இரண்டு ஆண்டுக ளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கின்றன. தமிழ்நாட்டில், ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய 12 சட்டமுன்வடிவுக ளுக்கும் மேல் ஒப்புதல் அளித்திட மறுக்கிறார்.  பஞ்சாப்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எவ்வித முடிவும் எடுக்காது ஏழு சட்டமுன்வடிவுகளை முடக்கி யுள்ளார். இவ்வாறு இந்த ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்காது இருந்திடும் சட்டமுன்வடிவுகள் என்பவை பொது சுகாதாரம், துணை வேந்தர்கள், உயர் கல்வி, லோகாயுக்தா மற்றும் கூட்டுறவு சங்கங்கள்  போன்றவற்றில் நியமனம் செய்வது தொடர்பான நடைமுறை குறித்தவைகளாகும்.

இஷ்டம் போல் செயல்பட அதிகாரமில்லை

ஆளுநரின் செயலற்ற தன்மை சம்பந்தமாக பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி யது. இதனைத்தொடர்ந்து கேரளம் மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்களும் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றன. கேரள அரசாங்கம், தன்னுடைய சிறப்பு அனுமதி மனுவில்  கூறியிருப்பதாவது: “ஆளுநரின் நடத்தை, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகப்பூர்வமாக ஆட்சி நடப்பது உட்பட, நம்முடைய அரசமைப்புச்சட்டத்தின் மிகவும் அடித்தளங்களையே தோற்கடித்து, அழித்திடக்கூடிய விதத்தில், அச்சுறுத்துகிறது. மாநில மக்களின் உரிமைகளைப் பறிப்பதுடன், இந்தச் சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்படுவதன் மூலம் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை  எடுக்கவிடாமல் தடுப்பதற்கும் இட்டுச்செல்கிறது.”

மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றிய சட்டமுன் வடிவுகளை நிறுத்தி வைக்கக்கூடிய விதத்தில் ஆளுநருக்கு ரத்து அதிகாரம் எதையுமோ அல்லது தான்தோன்றித்தனமாகவும் தன்னிஷ்டம்போலவும் செயல்படும் அதிகாரம் எதையுமோ அரசமைப்புச் சட்டம் அளித்திடவில்லை.

தெலுங்கானா வழக்கில் உச்சநீதிமன்றம் கட்டளை

எனினும், அரசமைப்புச் சட்டத்தின் 200ஆவது பிரிவு, ஆளுநர்கள் இவ்வாறு முடிவெதுவும் எடுக்கா மல் எவ்வளவு காலம் நிறுத்திவைக்கலாம் என்பது குறித்து தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை.  “எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக” என்பதைத் தவிர வேறு காலக்கெடு எது வும் நிர்ணயித்திடவில்லை. இதை வைத்துக் கொண்டே ஆளுநர்கள் சட்டமுன்வடிவுகளை கால வரையறையின்றி அடாவடித்தனமாக முடக்குகி றார்கள். முன்னதாக, இந்த ஆண்டின் துவக்கத்தில், தெலுங்கானா மாநில அரசாங்கம், ஆளுநரால் பத்து சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. ஏப்ரல் 23 அன்று தலைமை நீதிபதி சந்திரசூட்,நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோரடங்கிய அமர்வாயம் ஆளுநரால் அந்த சட்டமுன்வடிவுகள் “எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக”  திருப்பி  அனுப்பப்பட வேண்டும் என்றும்,  சட்டமன்றங்களை காலவரையறையின்றி காத்திருக்க வைத்து, நிறுத்தி வைக்கக்கூடாது என்றும் கட்டளை பிறப்பித்திருந்தது.

பஞ்சாப் அரசு வழக்கில்...

எனினும், உச்சநீதிமன்றத்தின் இந்தக் கட்டளை கேரளா, தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆளுநர்களிடம் எவ்விதமான விளைவையும் ஏற்படுத்தியதுபோல் தெரியவில்லை. நவம்பர் 6 அன்று, தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வா யம், பஞ்சாப் மாநில அரசாங்கத்தின் மனுவை  விசாரிக்கும்போது, ஆளுநர்கள் உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்த பின்பே செயல்படுவது என்று இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறது. ‘மாநில ஆளுநர்கள் தாங்கள் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை மறந்துவிடக் கூடாது’ என்றும் தலைமை நீதிபதி அந்தத் தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டிருக்கிறார். நவம்பர் 10 அன்று பஞ்சாப் மனுவுடன், கேரளம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசாங்கங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களையும் விசாரித்திட தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

200ஆவது பிரிவுக்கு எதிரானது 

ஆளுநர்கள், மாநில சட்டமன்றங்களில் நிறை வேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக் காமல் மறுப்பது என்பது அரசமைப்புச்சட்டத்தின் 200ஆவது பிரிவின் படி வெளிப்படையாகவே எதிரானதாகும். ஆளுநர்கள், தங்களிடம் ஒப்புத லுக்காக வந்துள்ள சட்டமுன்வடிவுகளை காலவரை யறையின்றி முடக்குவதற்கு அரசமைப்புச் சட்டம் அனுமதி அளித்திடவில்லை. அரசமைப்புச் சட்டத்தில் உள்ள “எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக”  என்கிற சொற்றொடர், தேவையற்ற கால தாமதம் கூடாது என்ற பொருளைத்தான் குறிக்கிறது. உண்மையில், கெய்ஷான் மேகா சந்திரா சிங் வழக்கில் நீதியரசர் ரோஹிங்டன் நாரிமன், 2020இல் அளித்த தீர்ப்பில், ‘நியாயமான நேரம்’  என்பதன் பொருள் மூன்று மாதங்கள் என்று கூறியிருந்தார்.

உச்சநீதிமன்றம் இதுவரை அளித்துள்ள கட்டளை களின்படி, ஆளுநர்கள் என்பவர்கள் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் அதிகாரங்களை அபகரிக்க முடியாது. அதேபோன்று அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தன் விருப்பத்திற்கேற்ப தான்தோன்றித் தனமாகச் செயல்படும் அதிகாரங்களும் கிடையாது. 

மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் அளிப்பதற்காக வந்துள்ள சட்டமுன்வடிவுகள் மீது ஆளுநர்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய நியாய மான காலவரையறை என்ன என்பதை தீர்மானித்து, கறாரான தீர்ப்பினை அளிப்பது உச்சநீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது.

மோடி ஆட்சியின் கீழ், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களை மதிக்காமல் ஆளுநர்கள் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். நவம்பர் 8, 2023,  தமிழில்: ச.வீரமணி