articles

கேரள ஆளுநரின் அத்துமீறல் நடவடிக்கைகள்

ஆரிப் முகமது கானின் நடத்தை, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஆளுநர் பதவி வகிக்கும் ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் அனைத்து நடத்தை விதிமுறைகளையும் மீறியுள்ளது. மாநில முதல்வருக்கு எதிராகவும், மாநில அரசாங்கத்திற்கு எதிராகவும் இவர் விடுத்துள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவமானங்கள் கேரள மக்களால் சகித்துக் கொள்ளப்பட முடியாதவைகளாகும்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள், ஒன்றிய அரசாங்கத்தை ஆட்சி செய்யும் கட்சியின் கருவிகளாக மாறி, அதன் அரசியல் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்லும் விதத்திலும், ஒன்றிய அரசாங்கத்தின் திட்டங்களை நிறைவேற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்திற்கு இடையூறுகளை உருவாக்கிக் கொண்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, கேரள ஆளுநர், ஆரிப் முகமது கானின்,  செயல்பாடுகள் சீர்குலைக்கும் விதத்திலும் அரு வருக்கத்தக்க விதத்திலும் அமைந்துள்ளன. மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய எட்டு சட்டமுன்வடிவு கள் மீது ஒப்புதல் அளிக்காமல் அல்லது மாநில சட்டமன்றத் திற்கு மறுபரிசீலனை செய்வதற்காகத் திருப்பி அனுப்பாமல் அவற்றை கிடப்பில் போட்டிருந்தார். இவற்றில் இரண்டு சட்டமுன்வடிவுகளை அவர் இரண் டாண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்தார்.

பஞ்சாப் மாநில அரசாங்கம், பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டமுன்வடிவு களை கிடப்பில் போட்டிருப்பதற்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த வழக்கில், அவ்வாறு கிடப்பில் போடுவற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று உச்சநீதி மன்றம் தெளிவாக இடித்துரைத்திருந்தது.

குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய வஞ்சக நடவடிக்கை
இதேபோன்று கேரள அரசாங்கம் கேரள ஆளு நருக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த வழக்கில், உச்சநீதிமன்றம் கேரள ஆளுநர் மாளிகை செயலாள ருக்கு இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டளை பிறப்பித்தது. இதன்பிறகு கேரள ஆளுநர் ஒரேயொரு சட்டமுன்வடிவுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துவிட்டு, மீதமிருந்த ஏழு சட்டமுன்வடிவுகளை பரிசீலனை செய்வதற்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இது ஒரு வஞ்சகமான நட வடிக்கையாகும். ஏனெனில் அரசமைப்புச் சட்டத்தின் 300ஆவது பிரிவின்கீழ் ஒருசில சட்டமுன்வடிவுகளை மட்டுமே அவ்வாறு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிட முடியும். மாறாக இவ்வாறு அனைத்து சட்டமுன்வடிவு களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருப்பதன் மூலம், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அவற்றின் மீது முடிவுசெய்வதற்கு எவ்விதக் கால வரையறையும் குறிப்பிடப்படாததால், அவை காலவரையறையின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பல்கலை.செனட் நியமனங்களில் ஆளுநரின் அத்துமீறல்கள்
இவ்வாறு சட்டமன்றம், சட்டமியற்றும் அதிகாரங்களைத் தடுத்துவந்த முகமது ஆரிப் கான் இப்போது பல்கலைக் கழகத்தின் செனட்டுகளுக்கு, ஆர்எஸ்எஸ்/பாஜக நபர்களை நியமனம் செய்திடும் வெட்கக்கேடான செயலிலும் இறங்கியுள்ளார். மாநிலப் பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் பல்கலைக் கழகத்தின் செனட்டுக்கு சில நபர்களை நியமனம் செய்திடலாம். கேரளப் பல்கலைக் கழகத்தைப் பொறுத்தவரை, மொத்தம் உள்ள 23 நியமன உறுப்பினர்களில் 17 பேர் வேந்தரால் நியமனம் செய்யப்பட வேண்டும், ஆறு  பேர் மாநில அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட வேண்டும். 

இந்த 17 பேரில், இரண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நான்கு நன்கு படித்திடும் புத்திசாலி மாணவர்கள் (meritorious students), ஆராய்ச்சி நிறுவனங்கள், கலாச்சார அமைப்புகள், ஊடகங்கள் முதலானவற்றின் பிரதிநிதிகள் முதலி யவர்களால் நிரப்பப்பட வேண்டும். வழக்கமாக இதற்கான நியமனங்களுக்கான முன்மொழிவுகள் பல்கலைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்படும். வேந்தர் அவ்வாறு அனுப்பிடும் பட்டியலை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்திடுவார். குறிப்பாக பல்கலைக் கழகத்தால் தகுதியான மாணவர்கள் என்று அடையாளம் காட்டப்படும்  மாணவர்களின் நியமனம் தொடர்பாக இதுதான் நடைபெறும்.

எனினும், ஆளுநர் இந்த வழக்கமான ஜனநாயக நடைமுறைகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டுள்ளார். பல்கலைக் கழகத்தால் முன்மொழியப் பட்ட பெயர்களை நிராகரித்திருப்பதுடன், அவரே இரண்டு இடங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களுக்கும் சங் பரிவாரத்தைச் சேர்ந்த நபர்களை  செனட்டுகளுக்கு நியமனம் செய்துள்ளார். இவ்வாறு ஆளுநர் நியமனம் செய்துள்ள நபர்கள், ஆர்எஸ்எஸ் அத்யாபகா பரிஷத் அமைப்பின் நிர்வாகி களாக இருந்திடும் ஆசிரியர்களாவார்கள். இதேபோன்றே இதழாளர்கள், விளையாட்டு வீரர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் கலாச்சார விவகாரப் பிரிவுகளிலும்கூட ஆர்எஸ்எஸ்/பாஜக ஆண்கள், பெண்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவை எல்லாவற்றிலும் மிகவும் மோசமான அம்சம்  என்னவென்றால், மானுடவியல், அறிவியல், கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் தகுதி பெற்ற நபர்களாகத் தேர்வு செய்யப்பட்டிருந்த மாணவர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு அந்த இடங்களில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களைச் சேர்த்திருப்பதாகும்.

ஏபிவிபியின் நியமனத்துக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் தடை விதிப்பு
இதேபோன்றே கோழிக்கோடு செனட்டிற்கும் நியமன உறுப்பினர்கள் நிரப்பப்பட்டார்கள். இங்கேயும்கூட, பிரசித்தபெற்ற ஆர்எஸ்எஸ்/பாஜக பேர்வழிகள் நியமனம் செய்யப்பட்டார்கள். இவ்வாறு கேரளாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை காவிமயப்படுத்திடும் முயற்சி வெட்கங்கெட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டது. இதனை இந்திய மாணவர் சங்கமும், இடது ஜனநாயக முன்னணியின் கீழ் இயங்கும் அனைத்து இளைஞர் அமைப்புகளும், ஆசிரியர் அமைப்புகளும் வலுவாக எதிர்கொண் டன. இந்திய மாணவர் சங்கம் கல்லூரிகளிலும், பல்கலைக் கழக வளாகங்களிலும் வலுவான எதிர்ப்பு  இயக்கத்தை நடத்தியது. ஏற்கனவே, உயர்நீதிமன்றம் செனட்டுகளுக்கு ஏபிவிபி-யைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குத் தடை விதித்திருக்கிறது.

மாணவர்களின் போராட்டத்தால் கோபமடைந்த ஆளுநர் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு  மோதலை உருவாக்க முயன்றார். அவர் கோழிக்கோடு  பல்கலைக் கழகத்தில் ஆர்எஸ்எஸ்-ஐச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்வுக்கு விஜயம் செய்வதாக அறிவித்தார். நகரத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தங்குவதற்குப் பதிலாக,  பல்கலைக் கழக வளாகத்திலிருந்த விருந்தினர் இல்லத்தில் தங்குவதற்குத் தீர்மானித்தார். அங்கே கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க அனுப்பப்பட்ட கிரிமினல்கள் என்று வசைபாடத் தொடங்கினார்.

அனைத்து விதிகளையும் மீறும் ஆளுநர் ஆரிப் முகமதுகான்
விருந்தினர் இல்லத்தில் பாஜக தலைவர்களுடன் நடந்த கூட்டத்திற்குப்பின்னர் அவர் ராஜ் பவன் மூலமாக ஒரு பத்திரிகைச் செய்தி வெளியிட்டார். அதில், “மாநிலத்தில் அரசமைப்புச்சட்ட எந்திரத்தின் சரிவு ஆரம்பாகியிருக்கிறது”  என்று கூறியிருந்தார்.  ஒருசில நாட்களுக்கு முன்புதான் இவர், மாநிலத்தில் நிதி அவசரநிலையைப் (financial emergency) பிரகடனம் செய்வது பற்றி பேசியிருந்தார்.

ஆளுநரால் உயர்கல்வி காவிமயமாக்கப்படு வதற்கெதிராக இந்திய மாணவர் சங்கமும், இதர ஜனநாயக அமைப்புகளும் போராட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் மாணவர் அமைப்பின் நிலைப்பாடு கடுமையாகக் கண்டிக்கத்தக்க தாக இருக்கிறது. ஆளுநர், ஆர்எஸ்எஸ் நபர்களை நியமனம் செய்வது தொடர்பாக ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து கேரள மாணவர் சங்கமோ (Kerala Students Union) மற்றும் காங்கிரஸ் கட்சியோ ஓர் அறிக்கை கூட வெளியிடவில்லை. அவர்களுடைய குருட்டுத்தனமான மார்க்சிஸ்ட் எதிர்ப்பு நிலைப்பாடானது, மாநிலத்தில் உயர் கல்வி  நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் நபர்கள் ஊடுருவிக்  கொண்டிருக்கும் அச்சுறுத்தலைக் கண்டு கொள்ளாமல் செய்கிறது.

ஆரிப் முகமது கானின் நடத்தை, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஆளுநர் பதவி வகிக்கும் ஒருவரிட மிருந்து எதிர்பார்க்கப்படும் அனைத்து நடத்தை விதி முறைகளையும் மீறியுள்ளது. மாநில முதல்வருக்கு எதிராகவும், மாநில அரசாங்கத்திற்கு எதிராகவும் இவர் விடுத்துள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவமா னங்கள் கேரள மக்களால் சகித்துக்கொள்ளப்பட முடியாதவைகளாகும். மாநிலத்தில் தன் செல்வாக்கை முன்னெடுத்துச் செல்ல, கேரள ஆளுநரின் வக்கிர மான நடவடிக்கைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என பாஜக நினைத்தால், துரதிர்ஷ்டவசமாக பாஜக தவறு செய்கிறது.

டிசம்பர் 20, 2023,
தமிழில்: ச.வீரமணி