articles

img

என். சங்கரய்யா வாழ்த்து

வ ிடுதலைப் போராட்ட வீரர், தோழர் என். சங்கரய்யா  வாழ்த்து தெரிவித்து பேசிய ஆடியோ ஒலிபரப்பப் பட்டது. அதில் அவர் கூறியதாவது: நவம்பர் புரட்சித் தினத்தில் தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன் நினைவு அரங்கம் திறப்பு, தோழர் பி. ராமமூர்த்தி உருவச்சிலை திறப்பு விழா மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்வை தமிழ்நாட்டு மக்கள் மிகவும் மதிப்பார்கள். இந்த விரிவாக்கமானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பயணம் சிறப்பாக நடைபெற, பணிகள் விரிவடைய வழிவகை செய்யும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களான தோழர் பி. ராமமூர்த்தி சிலை, தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன் நினைவு அரங்க பணிகளை செய்து முடித்த தோழர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களை, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகையே உலுக்கிய நவம்பர் புரட்சி தினத்தில், உலகெங்கும் புரட்சி செய்திகள் பரவுகின்றன. இந்தியாவிலும் சோசலிசம் வருவதற்கு, முதல்படியாக மக்கள் ஜனநாயக புரட்சியை எட்டுவதற்கு இந்த நிகழ்வுகள் மிகுந்த உற்சாகமளிக்கும் என்று நம்புகிறேன். இன்குலாப் ஜிந்தாபாத்.