articles

img

மதச்சார்பற்ற ஜனநாயக சிந்தனை வளர்த்திடும் கலங்கரை விளக்கம்! பினராயி விஜயன் - பினராயி விஜயன்

கேரளம், அமைதி மற்றும் மத நல்லி ணக்கத்துடன் வளர்ச்சிப்பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்ப தைத் திரும்பவும் கூற வேண்டிய தேவை இல்லை. மோதல்களையும் வெறுப்பையும் விதைத்து வரும் ஓர் உலகில், கேரளா மட்டும் இன்றையதினம் ஒரு மதச் சார்பற்ற ஜனநாயக சிந்தனைகளை உயர்த்திப் பிடித்திடும் கலங்கரை விளக்காகத் தனித்துவத்துடன் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

கேரளம் உதயமான இன்றையதினம் (நவம்பர் 1), நாம் கடந்து வந்த பாதையையும், இன்னும் கடக்க வேண்டிய முன்னேற்றத்தை நோக்கிய பாதையையும் ஆய்வு செய்திடுவோம். இதற்கு ஒரு முக்கிய கார ணம் உண்டு.

இந்தியாவின் கூட்டு வரலாற்றில், கேரளம் மட்டும் ஒரு மாற்றுப் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முன்மாதிரியுடன் (model) முன்னேறிக்கொண்டி ருக்கிறது. இதேபோன்றதொரு மதச்சார்பற்ற ஜன நாயக அமைப்பையே நாடு முழுதும் உருவாக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.

கடந்த காலங்களில் பிற்போக்கு சக்திகள் கேரளா வில் முதலீடு செய்திடவோ, வளங்களைத் திரட்டுவ தற்கோ ஆர்வம் எதுவும் காட்டிடவில்லை. எனினும் கேரளம் குறித்துக் கூறிவந்த அனைத்துக் கட்டுக்கதை களையும் தகர்த்தெறிந்து, வளங்களைத் திரட்டுவதி லும், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தி யைப் பெருக்குவதிலும் தன் ஆற்றலைத் தொடர்ந்து முன்னேற்றிக்கொண்டு வந்திருக்கிறது.

முட்டுக்கட்டைகள் போடும் ஒன்றிய பாஜக அரசு

எனினும், கேரளம் முன்னேற்றத்திற்காக எடுத்து வைத்திடும் ஒவ்வோர் அடியின்போதும், ஏராளமான  முட்டுக்கட்டைகள். குறிப்பாக ஒன்றிய அரசாங்கத்திட மிருந்து நிதி பரிமாற்றங்கள் செய்வதில் தொடங்கி, மாநில அரசின் கடன் வாங்கும் வரம்பை வெட்டிச் சுருக்குவது வரை அதன் நிதிநிலைமைகளை நெரிப்ப தற்கான நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வந்தது.

இவற்றின் விளைவாக கேரள மாநிலம் தற்போது கடும் நிதி நெருக்கடியில் இருந்துவருகிறது. ஒவ்வோ ராண்டும் அளிக்கப்படும் கடன் வரம்பு கிட்டத்தட்ட 8 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்கப்படவில்லை, ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை அளிக்கப்படாமல் நிறுத்தப்பட்டு விட்டது. இதன் விளைவாக சுமார் 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை மானியத்தொகை (revenue deficit grant), சென்ற ஆண்டைக்காட்டி லும் சுமார் 8,400 கோடி ரூபாய் அளவிற்கு குறைக்கப் பட்டிருக்கிறது. நிதி ஆணையத்தின்மூலம் வர வேண்டிய தொகையும் குறைக்கப்பட்டிருக்கிறது. 10ஆவது நிதி ஆணையத்தில் 3.875 விழுக்காட்டுத் தொகை அளிக்கப்பட்டதோடு ஒப்பிடும்போது இப் போது 15ஆவது நிதி ஆணையத்தில் 1.92 விழுக்காடு அளவிற்குத்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வாய்ப்புகளாகும் சவால்கள்

எங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு சவாலும் ஒரு வாய்ப்பாகும். இவ்வாறு நாங்கள் எங்கள் சொந்த  வருவாயைப் பெருக்குவதிலும், செலவினங்களைப் பகுத்தறிவுபடுத்துதல் மூலமும் நிதி ஒருங்கிணைப் பில் கவனம் செலுத்தியுள்ளோம்.

மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை வரம்பை, 2022-23 ஆம் ஆண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP)யில் 3 விழுக்காட்டிற்கும் கீழே வரையறுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறோம். அதேபோன்று வருவாய் பற்றாக்குறையையும் மொத்த மாநில உள்நாட்டு உற் பத்தியில் 0.9 விழுக்காடு அளவிற்குக் கொண்டு வந்தி ருப்பதிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். சமுதாயத்தில் உதவி தேவைப்படும் அடித்தட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எங்கள் உறுதிப்பாட்டில் எத்த கைய ஊசலாட்டமுமின்றி இதனை நாங்கள் செய்தி ருக்கிறோம்.

அதே சமயத்தில் 2021-22ஆம் ஆண்டின்போது வரி வருவாய் சுமார் 22.4 விழுக்காடு அளவிற்கும், 2022-23 ஆம் ஆண்டின்போது சுமார் 23.4 விழுக்காடு அள விற்கும் நம்மால் உயர்த்த முடிந்திருக்கிறது. மாநி லத்தின் சொந்த வரி வருவாயை உயர்த்தியுள்ள வளர்ச்சி விகிதத்தில் கேரளம், அனைத்து மாநிலங்க ளின் மத்தியில் மூன்றாவது உயர் இடத்தைப் பெற்றி ருக்கிறது. நம்மைவிட உயர் வளர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ள மற்ற இரு மாநிலங்கள் என்பவை மகா ராஷ்டிரா (25.6 விழுக்காடு) மற்றும் குஜராத் (28.4 விழுக் காடு) ஆகும். இவை மிகவும் வலுவான உற்பத்தி  தலத்தைப் பெற்றிருப்பதுதான் (strong manufactur ing base), கேரளாவையிட இவை விஞ்சியிருப்ப தற்குக் காரணமாகும்.

கேரளம், ஜிஎஸ்டி மூலம் சராசரியாக மாத வருவாய் இப்போது மூவாயிரம் ரூபாயாக இருப்பதிலிருந்து ஜிஎஸ்டி வருவாய் கூர்மையாக அதிகரித்திருப்பதை யும் பார்க்கலாம். இது 2017-18இல் ஜிஎஸ்டி அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டில் சுமார் 1,700 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது அது கிட்டத்தட்ட 76 விழுக்காடு  அளவிற்கு அதிகரித்திருப்பதைக் காண முடியும்.

அறிவார்ந்த சமூகமாய்...

கேரளாவின் பலம், அது ஓர் அறிவார்ந்த சமூக மாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது என்பதி லேயே அடங்கியிருக்கிறது. மாநிலத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மிகவும் விரிவான அளவில் கிடைக்கக்கூடிய விதத்தில் விளையாட்டுகள் மற்றும் டிஜிட்டல் கல்விக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியிருப்பதன் மூலமாக மாநிலத்தை ஓர் உயர் எழுத்தறிவு விகிதம் உள்ள மாநிலமாக மாற்றியிருக்கி றோம், அனைவருக்கும் தொடக்கக் கல்வியை அளித்திருக்கிறோம், மனித வளக் குறியீடுகளை உயர் நிலைக்குக் கொண்டுசென்றிருக்கிறோம். இவற்றின் காரணமாக மாநிலத்தில் மதச்சார்பின்மை விழுமி யங்களைப் பேணிப் பாதுகாத்திடவும், வரலாற்றை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்வதற்கும் உறுதி பூண்டிருக்கிறோம்.

இன்றைய தினம் கேரளம், புதிய தொழில்நுட் பங்களைப் போதிப்பதிலும், கற்றுக்கொள்வதிலும், ஆய்வு செய்வதிலும் அவற்றைப் பல்வேறு துறைகளி லும் பிரயோகிப்பதிலும் சாதனைகள் படைத்து, ஒரு முழுமையான டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட அறிவார்ந்த பொருளாதார மாநிலமாக முன்னேறிக் கொண்டி ருக்கிறது.

நாம் ஏற்கனவே, தரமான உயர்கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை மக்களுக்கு அளிப்பதற்காக, உலகில் உள்ள பல நாடுகளுடனும், மாநகரங்களு டனும் நிறுவனங்களுடனும் பிணைப்புகளை ஏற் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

மூடநம்பிக்கைகள் தகர்ப்பு மூலதன மேம்பாடு

இவ்வாறாக இன்றைய தினம் கேரளம் மாற்றிய மைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நம் வலுவை வலுப்படுத்திக்கொள்வதில், குறிப்பாக கல்வி, சுகாதா ரப் பாதுகாப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை வெற்றிகரமாக நடத்துவதில், நம்மிடமிருந்த சிற்சில சமூக மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்துவிட்டு, அனைத்துத்தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதில் மகத்தான முறையில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

எடுத்துக்காட்டாக, அடுத்த ஐந்தாண்டுகளில், தனியார் தகவல் தொழில்நுட்பப் பூங்காங்களை (private IT parks) நிறுவுவதன் மூலம், நான்கு தகவல் தொழில்நுட்பப் பகுதிகளை (IT corridors) அமைத்திட வும், சிறிய நகரங்களிலும்கூட தகவல் தொழில்நுட்ப நிறு வனங்களைத் துவங்கிடவும்,  அரசாங்கத்தின் சார்பில் ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கிறோம்.

பேச்சுரிமைப் பூஞ்சோலை

கேரளம் இப்போது ஒவ்வொரு சவாலையும் ஒரு பொறுப்பாக பார்க்கிறது. இதில் பிரதானமான பொறுப்பு என்பது, மாநிலத்தை அனைத்து மக்க ளுக்கும் பேச்சுரிமையை அளித்திடும் ஒரு பூஞ்சோலை யாக மாற்றுவது என்பதாகும். கேரளத்தில் உள்ள  ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை வெளிப் படுத்தவும், தாங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழவும், மத ரீதியாகவோ அல்லது அரசியல்ரீதி யாகவோ ஒடுக்குமுறை கட்டளைகள் எதுவுமின்றி தாங்கள் விரும்பும் பொருள்களை உற்பத்தி செய்தி டவும், சேவைகளை அளித்திடவும் ஏதுவான ஒரு மாநிலமாக மாற்றியிருக்கிறோம்.

கேரளம், மதவெறி பிளவுவாத சிந்தனைகளை அனுமதித்திடாது. இதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை கேரள அரசாங்கம் முளையிலேயே கிள்ளி எறிந்திடுவதில் உன்னிப்பாக இருந்துவருகிறது. நாட்டின் பல பகுதிகளில் மதவெறியர்களால் வீடு களை இழந்தும், கல்வியை இழந்தும் நிர்க்கதியாய் நின்றிடும் மாணவர்களை கேரளம் இருகரம் கூப்பி வர வேற்கிறது. அம்மாணவர்கள் கேரளாவில் உள்ள கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் வந்து தங்கி, தங்கள் கல்வியைத் தொடர அழைப்பு விடுத்தி ருக்கிறோம்.   

அனைவரையும் வரவேற்கும்...

கேரளாவின் நல்லம்சங்கள் பலவற்றைக் கொண்டாட வேண்டிய தருணம் இது. கேரளாவை அறிந்து கொள்ள விரும்பும் அனைவரையும் நவம்பர் முதல்வாரத்தில் திருவனந்தபுரத்திற்கு வருக வருக என்று வரவேற்கிறோம். ஒரு வார காலத்திற்கு அங்கே நடைபெறவுள்ள ‘கேரளீயம்’ நிகழ்ச்சிகளின் ஒரு பகுதி யாக அவர்கள் இருந்திட  வேண்டும் என்று விரும்புகி றோம். கேரளத்தில் வர்த்தகம் செய்ய விரும்புவோர், முதலீடு செய்ய விரும்புவோர், ஓய்வுகாலத்தைக் கழிக்க விரும்புவோர், அறிவியல், கலாச்சார, ஆக்கப் பூர்வ முயற்சிகளை மேற்கொள்ள விரும்புவோர் எவராக இருந்தாலும் கேரளத்திற்கு வருக வருக என வரவேற்கிறோம். அனைத்துப் பகுதி மக்களிடமும் புதிய தொடர்புகளை, ஒத்துழைப்பை மற்றும் ஒருங்கிணைப்பை உருவாக்கிட வசதி செய்து தந்திட இதை ஒரு வருடாந்திர நிகழ்வாக மாற்றுவதென்பதே எங்கள் திட்டமாகும். நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, 1.11.2023,  தமிழில் : ச.வீரமணி