around-world

img

வட்டிக்கு வட்டி வசூலிப்பதா ? - உச்சநீதிமன்றம் கேள்வி

வங்கிக் கடன்களுக்கு  தளர்வுகளை அறிவித்து விட்டு வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் கடன்களுக்கான வட்டி செலுத்துவதற்கு தளர்வுகளை அறிவித்தனர். ஆனால் தற்போது வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது வங்கிகளில் பொது மக்கள் வாங்கிய பல்வேறு வகையான கடன்களுக்கு இஎம்ஐ வசூலிப்பதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டி மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. கடன் தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளது. அரசு அறிவித்த பொது முடக்கமே வங்கிக் கடனை செலுத்த முடியாத பாதிப்புக்கு காரணம் என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. வட்டிக்கு வட்டி என்பது ரிசர்வ் வங்கியின் முடிவு என்று கூறி மத்திய அரசு தப்பித்துக் கொள்கிறது.

உங்கள் பணியை சரியாக செய்யும் நேரம் இதுவல்ல. பொது மக்களுக்கு தேவையான நிவாரணத்தை வழங்குவதுதான் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.