tamilnadu

4 வழிச்சாலைக்காக பெரியாறு-வைகை  பாசனக் கால்வாயை இடிக்கத்தடை

மதுரை:
மதுரை, மேலூர் பகுதியைச் சேர்ந்த மாதவன், மாரிமுத்துஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை மேலூர் அருகே உள்ளகீழையூர் கிராமம் வழியாக 12-வது பெரியாறு வைகை கால்வாய்மதகு உள்ளது. இங்குள்ள மதகுகள் வழியாக பத்துக்கு மேற்பட்ட கிளைக் கால்வாய்கள் மூலம் பல ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இப்பகுதியில் தேசிய நெடுஞ் சாலை துறை மூலம் நான்கு வழி சாலை அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப் பட்டு வருகிறது. நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளுக்காக கீழையூர் பகுதியில் அமைந்துள்ள 12-ஆவது பெரியார்வைகை கால்வாய் மதகை இடிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள் ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படும் நிலைஉள்ளது. கீழையூர் 12-வது பெரியாறு வைகை கால்வாய் மதகுகளை இடிப்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இப்பகுதி விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு தண்ணீர் செல்வதற்கான ஏற்பாடு செய்து தர வேண்டும். நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 12-வது பெரியார்வைகை கால்வாய் மதகுகளை இடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தனர்.இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணக்குமார் முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மதகுகளை இடிப்பதற்கு முன்பாக தண்ணீர் செல்வதற்கான மாற்றுஏற்பாடுகள் செய்யவேண்டுமென கூறப்பட்டது.இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி 12-வது பெரியார்வைகை கால்வாயை இடிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.கால்வாய் இடிப்பதற்கு முன்பாக தண்ணீர் செல்வதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் இறுதித் தீர்ப்பை அக்டோபர் 6-ம் தேதி ஒத்திவைத்தார்.

;