டாக்கா, நவ. 7- வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பண வீக்கத் திற்கு ஏற்ப தொழிலாளர்களின் ஊதியத்தை 3 மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஆடைத்தொழிலாளர்கள் நடத்திய பெரும் போராட்டத்தைத் தொடர்ந்து 56.25 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
40 லட்சத்திற்கும் அதிகமான ஆடைத் தொழி லாளர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியத்தை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிராகரித்த அரசு 56.25 சத விகிதமாக மட்டும் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஆடை உற்பத்தி தொழி லாளர்களுக்கு புதிய குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 9,405.95 (12,500 டாக்கா) ஆக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அர சாங்கத்தால் நியமிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியக் குழுவின் செயலாளர் ரைஷா அஃப்ரோஸ் தெரிவித்துள்ளார். எனினும் தொழிற்சங்கங்கள் இந்த அறிவிப்பை முழு மையாக ஏற்றுக் கொள்ளவில்லை.