கிழக்கு லிபியாவில் டேனியல் புயலால் ஏற்பட்ட கடும் வெள் ளப்பெருக்கில் உயிரிழந்த வர்கள் எண்ணிக்கை இரண்டாயி ரத்தை கடந்துள்ளது; ஆயிரக்கணக் கானவர்களைக் காணவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளன. ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை களில் பெங்காசி, சூசா, பைடா, அல்-மார்ஜ் மற்றும் டெர்னா ஆகிய நகரங்களை டேனியல் புயல் கடு மையாக தாக்கியது.அந்நாட்டின் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் அல்-மோஸ் மரி, டெர்னாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஐத் தாண்டி இருக்கலாம் எனவும், மேலும் 5,000 முதல் 6,000 பேர் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளதாகவும் கூறி யுள்ளார். இடிந்து விழுந்த அணைகள் டெர்னா, முற்றிலும் மலைகளால் சூழப்பட்ட நகரம். இந்த மலைப் பகுதியில் இருந்த இரு அணைகள் இடிந்து விழுந்ததில் மலைகளில் இருந்து நகரின் மையப்பகுதி வழி யாக வெள்ளம் புகுந்து 10 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உயர்ந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி மக்கள் உயிர் இழந்துள்ளனர். அணைகளில் இருந்து 30 மில்லியன் கன சதுர மீட்டருக்கும் அதிகமான நீர் நகரத்திற்குள் புகுந்துள்ளது என சில வல்லுநர்கள் கூறியுள்ளனர். மேலும் நகரின் பேரழிவு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பலி எண்ணிக்கை குறைந்தது 10 ஆயிர மாக உயரும் என கூறப்பட்டுள் ளது. இந்த பேரிடரால் நகரம் முழு வதும் மின் மற்றும் இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள் ளது. எனவே அங்கு என்ன நடக்கிறது என்பதை உலகளவில் முழு விபரங்களை தெரிவிப்பதில் சிரமங்கள் உருவாகியுள்ளன. டெர்னாவிற்கு வெளியே, கிழக்கு நகரமான பெய்டாவில்
12 பேர் இறந்துள்ளதாக நகரின் முக்கிய மருத்துவமனை தெரிவித்துள் ளது. ஆம்புலன்ஸ் மற்றும் அவசர கால ஆணையத்தின்படி, வட கிழக்கு லிபியாவின் கடலோர நகர மான சூசாவில் மேலும் ஏழு பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஷஹாத் மற்றும் ஒமர் அல்-மொக் தார் நகரங்களில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது. இதேபோல மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டு நிறு வனத்தினர் என பலரும் வெள்ளத் தில் சிக்கி உயிர் இழந்துள்ளனர். துக்க நாள் அறிவிப்பு லிபியாவின் கிழக்குப் பகுதி யைத் தலைநகராக கொண்ட நாடாளுமன்றம் மூன்று நாட்களை துக்க நாளாக அறிவித்தது. அதே போல் திரிபோலியில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இடைக்கால அரசின் பிரதமர் அப்துல் ஹமித் டிபீபா, பாதிக் கப்பட்ட அனைத்து நகரங்களிலும் “பேரழிவு பகுதிகள்” எனவும் மூன்று நாட்கள் துக்க நாளாகவும் அறி வித்தார். லிபியாவில் உள்ள நான்கு முக்கிய எண்ணெய் துறைமுகங்க ளான ராஸ் லானூப், ஜூயிடினா, பிரேகா மற்றும் எஸ் சிட்ரா ஆகி யவை சனிக்கிழமை மாலை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டதாக கூறப்படுகிறது. லிபியாவில் ஏற்பட்ட இந்த பேரிடரை ஐக்கிய நாடுகள் சபை உன்னிப்பாக கவனித்து வருவதாக வும் , “உள்ளூர் மற்றும் தேசிய அளவில் பாதுகாப்பு மற்றும் நிவார ணத்திற்காக அவசரகால நிவாரண உதவிகளை வழங்குவதாகவும்” கூறியுள்ளது.