கொழும்பு/இராமேஸ்வரம், மார்ச் 26- இலங்கையில் தற்போது நிலவி வரும் அசாதா ரண பொருளாதார நெருக்கடி காரணமாக சில இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் இருந்து கைக்குழந்தையுடன் தமிழகம் வந்துள்ள கஜேந்திரன் - மேரி கிளாரா தம்பதியர், அங்கு நிலவும் சூழல் குறித்து விளக்கினர். “இலங்கையில் விலைவாசி உயர்வு காரணமாக எங்களால் அங்கு வாழ முடியாது. குழந்தைக்கு கொடுக்கும் பால்மாவு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் விலை அதிகரிக்கும் என மளிகை கடை உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவ ரால் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. அவருடைய வருமானத்தை வைத்து எங்களால் இலங்கையில் வாழ முடியாது என தீர்மானித்து நான்கு மாத குழந்தையுடன் உயிரை பணயம் வைத்து ஃபைபர் படகில் தமிழகத்திற்கு வந்துள்ளோம். எங்களை படகில் அழைத்து வந்தவர் அதி காலை 1 மணியளவில் தனுஷ்கோடி அருகே உள்ள ஒரு மணல் திட்டில் இறக்கி விட்டுவிட்டு, “இதுதான் மண்டபம் பகுதி. விடிந்தவுடன் நீங்கள் நடந்து அல்லது வேறு படகில் மண்டபம் அகதிகள் முகாமுக்கு சென்று விடலாம்” என கூறி சென்றார்.
அதை நம்பி விடியும் வரை காத்தி ருந்தோம். ஆனால் காலையில் பார்க்கும்போது தான் நாங்கள் கடலுக்கு நடுவில் உள்ள ஒரு மணல் திட்டில் இருக்கிறோம் என தெரிய வந்தது. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை யாருமே இல்லை. உதவி கேட்க யாரும் இல்லாமல் கைக்குழந்தையுடன் நடுக்கடலில் கடும் காற்று மற்றும் வெப்பத்துக்கு மத்தியில் பல மணி நேரம் காத்திருந்தோம். அப்போது அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் செல்பேசியை வாங்கி மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள எங்களது உறவினர்களை தொடர்பு கொண்டோம். அவர்கள் மூலமாக கடலோர காவல் படைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீர் இன்றி குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியாமல் மணல் திட்டில் காத்திருந்தோம். பின்னர் எங்களை மீட்டு கடலோர காவல்படை முகாமுக்கு அழைத்து வந்தனர். மண்டபம் வந்த பிறகு தான் எங்களுக்கு உயிரே வந்தது. இறுதி கட்ட போரின் போது இலங்கை யில் வாழ முடியாமல் எங்கள் உறவினர்கள் பலர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தனர். ஆனால் இப்போது உணவுப் பஞ்சத்தில் இருந்து உயிர் பிழைப்பதற்காக நாங்கள் எங்கள் கை குழந்தையுடன் தமிழகத்துக்கு வந்துள்ளோம். இலங்கையில் இதே நிலை நீடித்தால் பட்டி னிச்சாவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் என நாங்கள் வசிக்கும் பகுதியில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக தமிழ கத்திற்கு வர காத்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மேரி கிளாரா கூறினார்.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து பைபர் படகில் ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடிக்கு புறப்பட்டு வந்தனர். நடுக்கடலில் படகின் இஞ்சி னில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்தி ற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்த ளித்ததாக தெரிவித்தனர். பல மணி நேர முயற்சி க்கு பின் பழுதை சரி செய்து, செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகம் வந்து சேர்ந்தனர். “இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தகாலங்க ளில் உறவுகளையும் உடமைகளையும் இழந்து, உயிர் பிழைத்தால் போதும் என 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாய் வந்து, போர் முடிந்த பின் 2012ல் மீண்டும் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றோம். தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து குழந்தைக ளோடு மீண்டும் இரண்டாவது முறையாக அகதி களாக தனுஷ்கோடி வந்துள்ளோம். இலங்கை யில் தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல்லாயிரம் பேர் தமிழ கத்தில் அகதிகளாக தஞ்சமடைய உள்ளனர்,’’ என அவர்கள் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்கிழமை காலை முதல் இரவு வரை இலங்கை தமிழர்கள் 16 பேர் அகதிகளாக தனுஷ் கோடிக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.