மாஸ்கோ, ஆக.21- டென்மார்க் மற்றும் நெதர்லாந்து நாடுகள் அணுகுண்டு வீசும் திறனுள்ள 61, எஃப்-16 ரக போர் விமானங்களை உக்ரைனுக்கு கொடுக்க எடுத்துள்ள முடிவு போரை மேலும் அதிகரிக்கச் செய்யும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த போர் விமானங்களுக்கு எந்த பணமும் இந்த நாடுகள் பெறவில்லை என்பது ரஷ்யாவின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவது மட்டும் இவர்களின் நோக்கம் என காட்டுகிறது. உக்ரைன்-ரஷ்யா போர் துவங்கியதில் இருந்து போரை முடிவிற்கு கொண்டு வர விரும்பாமல் தொடர்ந்து அமெரிக்கா ஆதரவு நாடுகளிடம் உக்ரைன் ஜனாதிபதி ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதே போல அமெரிக்கா மற்றும் ஆதரவு நாடுகள் ரஷ்யா மீது உக்ரைன் மூலமாக ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து நடத்தி வரு கின்றன. இதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக போர் விமானங் களை வாங்கிவிட வேண்டுமென டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிடம் ஆதரவு கேட்டு ஜெலென்ஸ்கி மாறி மாறி அலைந்து கொண்டு இருந்தார். இந்நாடுகளுக்கு இடையே யான விமானப் பயிற்சி முடிந்தவுடன் உக்ரைனுக்கு 61 எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க இருப்பதாக தற்போது அந்நாடுகள் அறிவித்துள்ளன. 2024 துவக்கத்தில் முதலில் ஆறு விமா னங்களும் பிறகு 19 விமானங்களும் வழங்கப்படும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகஸ்ட் 20 (ஞாயிறு) அன்று தெரிவித்தார். உக்ரை னுக்கு வழங்கப்படும் இந்த போர் விமா னங்களை நாட்டின் எல்லைக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென நிபந்தனை. எனவே போர் விமானங்களை உக்ரைன் தங்கள் எல்லைக்குள் மட்டுமே பயன்படுத்துவார்கள் என டென்மார்க்கின் பாதுகாப்பு அமைச்சர் ஜேக்கப்-ஜென்சன் ஒரு சமாளிப்பு பதிலை கூறியுள்ளார். மேலும் ‘‘டாங்கிகள், போர் விமா னங்கள் என எந்த ஆயுதங்கள் வழங்கப் பட்டாலும் இது தான் நிபந்தனை’’ என அவர் கூறியதன் மூலம் ஆயுத வியா பாரத்தை அதிகரிகப்பதற்காக போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை என்பதை குறிப்பாக உணர்த்தியுள்ளார். நெதர்லாந்தில் 42 எஃப்-16 ரக விமானங்கள் உள்ளன. இவை அனைத்தும் உக்ரை னுக்கு வழங்கப்படுமா என இன்னும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த மே மாதம் வரையிலும் நெதர் லாந்து மற்றும் டென்மார்க் நாடுகள் இந்த விமானங்களை தர முன்வரவில்லை. கடந்த வாரம் அந்நாட்டு அரசுகளுக்கு அமெரிக்கா கடிதம் அனுப்பிய பிறகே இந்த விமானங்களை வழங்கி பயிற்சி கொடுக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இவ்வாறு பின்னால் இருந்து உக்ரைன்-ரஷ்யா போரை நீட்டிக்கச் செய்யும் வேலையை அமெரிக்கா செய்துள்ளது.