மாஸ்கோ, செப்.24- அர்மீனியா, பெலாரஸ், கஜகஸ் தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் டீசல் மற்றும் எரி வாயு ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் எண்ணெய் விலை உய ரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் மேலும் மேலும் கடுமையான பொருளாதாரத் தடை களை இறுக்கி வருகின்றன. மேற்கு லக நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் ஒரு வியூகமாக, புடின் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளார். இத்தடையின் மூலம் மேற்குலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலைகள் மிக அதிகமாகி, மேற்கு நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் சிக்கல் உருவாகும். ஐரோப்பாவில் குளிர்காலம் துவங்க இருக்கும் நிலையில் இந்த ஏற்றுமதி தடை தெளிவான பொருளாதார நிர்ப்பந்தமாக மாறியுள்ளது. குறிப்பாக அமெரி க்காவிற்கு ஆதரவு தந்து, ரஷ்யா விற்கு எதிராக செயல்பட்டு வரும் ஐரோப்பாவில் பொருளாதார அழுத் தத்தை அதிகரிக்கும். கடந்த ஆண்டு எரிபொருள் விலையேற்றத் தால் ஐரோப்பா 60,000 கோடி டாலர்களை இழந்த நிலையில், இந்த ஆண்டு இழப்பு இன்னும் மோசமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலக எண்ணெய் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா, செப்டம்பர் மாத துவக்கத்தில் தங்கள் எண்ணெய் உற்பத்தியை இந்த ஆண்டு முழு வதும் கட்டுப்படுத்துவதாக கூட்டாக அறிவித்திருந்தன என்பது குறிப் பிடத்தக்கது.