world

img

பன்முக உலகத்தை ஏற்க மறுக்கிறார்கள்

மாஸ்கோ, ஜூலை 14- பன்முகத்தன்மை கொண்ட உலகம் என்பதை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக்கூட்டணி ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்று ரஷ்ய வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. லிதுவேனியாவின் தலைநகர் வில்னிசிய சில் ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் நேட்டோவின் உச்சிமாநாடு நடைபெற்றது. இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.  “வில்னிசியசில் ஜூலை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் மாநாடு நடந்துள்ளது. மீண்டும் ஒரு முறை பனிப்போர் காலத்தின் திட்டங்களுக்கே அவர்கள் திரும்பியுள்ளார் கள் என்பதையே மாநாட்டு முடிவுகள் காட்டுகின்றன. கொள்கை ரீதியாகப் பிரிந்து நிற்கும் ஒரு பிரிவினரிடமிருந்து “100 கோடி மக்களைக்” காப்பாற்ற “ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரம்” என்று பிரித்திருக்கிறார்கள்

பன்முகத்தன்மை கொண்ட உலகம் உருவாகி வருகிறது என்பதை, அமெரிக்கா தலைமையிலான ஒட்டுமொத்த மேற்குலகம் ஏற்க மறுக்கிறது. ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டு, தங்கள் வசம் இருக்கும் அனைத்து உத்திகளையும் பயன்படுத்தித் தங்கள் மேலாதிக்கத்தைத் தக்க வைக்கப் பார்க்கி றார்கள். தங்கள் தாக்குதல் நடவடிக்கை களை மறைப்பதற்காக ஐக்கிய நாடுகள் சாசனத்தைக் கேடயமாகப் பயன்படுத்துவது நம்பத்தகுந்ததாக இல்லை. நேட்டோவிற்கும், ஐ.நா.விற்கும் பொதுவான அம்சம் எதுவும் இல்லை. சர்வதேச சட்டங்களை மீறுவ தற்காக இவர்களே விதிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். நேட்டோ நடவடிக்கைகளால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த தாகும். நிலையற்ற தன்மை உருவாதல், நாடுகள் அழித்தொழிப்பு, பயங்கரவாதத்தின் தோற்றம், எந்தவித தயக்கமும் இல்லாமல் போர்க் குற்றங்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கொலை மற்றும் அலை, அலையாய் அகதிகள் ஆகியவற்றையே நேட்டோவின் தலையீடுகள் உருவாக்கு கின்றன. புதிதாக உருவாகியுள்ள சர்வதேச அரசியல் நிலவரத்திற்கும், உண்மையாக பாதுகாப்புத் தேவைகளுக்கும் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாமல் நேட்டோ இருக்கிறது.

கிழக்கிலிருந்து ஆபத்து என்று கிளப்பி விட்டதோடு, தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவும், பன்முக உலகம் வளர்வதற்கு உதவும் மையங்களைக் கட்டுப்படுத்தவும் நேட்டோ ராணுவக் கூட்டணியை ஒரு கருவி யாகப் பயன்படுத்த முயல்கிறார்கள். வெளி யில் உள்ள எதிரிகளைத் தேடும் கொள்கை அடிப்படையில்தான் ரஷ்யா குறிவைக்கப் பட்டிருக்கிறது. உச்சிமாநாட்டு ஆவணங்க ளின்படி, “நேச நாடுகளின் பாதுகாப்புக்கு மிக முக்கியமான மற்றும் நேரடி ஆபத்தாக” ரஷ்யா இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.  உண்மைகளைப் பற்றிக் கவலைப்படா மல், உலக எரிசக்தி மற்றும் உணவுப் பாது காப்பை மாஸ்கோ சேதப்படுத்துவதாக  நேட்டோ குற்றம் சாட்டுகிறது. உலகின் ராணுவச் செலவில் பாதிக்கும் மேல் நேட்டோ நாடுகளால் செய்யப்படுகிறது. ஆனால் அவர்கள் அதில் திருப்தியடையவில்லை. வில்னிசியசில் நடைபெற்ற மாநாட்டில் ஒவ்வொரு நாடும் “பாதுகாப்புக்காக” அவர வர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த பட்சம் 2 விழுக்காட்டை ஒதுக்க வேண்டும் என்று உறுதி எடுத்துள்ளனர். அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அமெரிக்கக் கூட்டாளிகள் உக்ரைனுக்கு வழங்கிய பழைய ஆயுதங்கள் இருந்த இடத்தில் புதிய ஆயுதங்களை வாங்கி வைப்பார்கள்.  இந்த நிகழ்வுகளால் பெரும்பாலான நாடுகள் கவலை அடைந்துள்ளன. புதிய நியாயமான உலகை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு மாறாக  செயற்கையாக “நாம்” மற்றும் “அவர்கள்” என்று கோடு கிழிக்கும் வகையில் நேட்டோவின் கொள்கை ள், நடவடிக்கைகள் மற்றும் ராணுவ ஏற்பாடு கள் இருக்கின்றன. புதிய நியாயமான உல கத்தில் அனைத்து நாடுகளும் தங்கள் சட்டப் பூர்வமான நலன்களுக்கான முன்னேற்றப் பாதைகளையும், சமூக அமைப்புகளையும் தாங்களே உருவாக்கிக் கொள்வதே நோக்க மாகும். மற்றவர்களின் பாதுகாப்பை சேதப் படுத்திவிட்டு நமது பாதுகாப்பை உருவாக்கிக் கொள்ள முடியாது. என்னதான் வாஷிங்டன் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஆகியவற்றின் ஆசை யாக இருந்தாலும், இந்த உலகம் “நேட்டோ உலகம்” என்று மாறாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.