world

img

டிரம்ப்பை சந்திக்க தயார் - புடின்

மாஸ்கோ,டிச.20- அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள டிரம்ப்பை சந்திக்க நான் தயாராக உள்ளேன் என ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் - ரஷ்யப் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்க ஜனாதி பதி தேர்தலின் போது டிரம்ப் வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில் அதுகுறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் புடின் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் ரஷ்ய  ஜனாதிபதி புடின் செய்தியாளர் சந்திப்பு நடத்து வது வழக்கம். அப்படி நடந்த செய்தி யாளர்கள் சந்திப்பிலேயே, நான் எந்த நேரத்திலும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பை சந்திக்க தயார் எனவும் அவருடன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளதாகவும் புடின் தெரிவித்தார்.  மேலும் அவரை நான் எப்போது சந்திக்க போகிறேன் என தெரியவில்லை. அவரும் எங்களுடைய சந்திப்பு பற்றி எதுவும்  கூறவில்லை. நான் அவருடன் பேசி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது என கூறினார். அதே போல உக்ரைன் உடனான போரில் ரஷ்யா பலவீனமடைந்து விட்டதாக கூறுகிறார்கள். உண்மையில் இந்த போருக்கு பிறகு தான்  நாங்கள் மேலும் பலமுடையவர்களாக மாறியுள்ளோம்.  ஒவ்வொருநாளும் ரஷ்யப்  படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியில் முன்னேறி வருகின்றன.  பல இடங்களை கைப்பற்றி வருகின்றன எனவும் குறிப்பிட்டார். அதேபோல மேற்கு நாடுகளின் ஆயு தங்களை ரஷ்யா மீது உக்ரைன் மீண்டும் பயன்படுத்தினால் ரஷ்ய ராணுவத்தின் ஆர்ச னிக் ரக ஹைப்பர்சோனிக் ஏவுகணையை மீண்டும் உக்ரைன் மீது பயன்படுத்துவோம் என எச்சரிக்கையும் விடுத்தார்.   இரண்டு ஆண்டுகள் கடந்து நடை பெற்று வரும் உக்ரைன்-ரஷ்யப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ரஷ்யா விரும்புகிறது. இதற்கான நிபந்தனைகளை யும் ரஷ்யா ஏற்கனவே கூறியுள்ளது.  ஆனால் உக்ரைன் - ரஷ்யப்  போரை மேலும் நீடிப்பதற்கான திட்டத்தை வகுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக முக்கியமான தலைவர்கள் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.