மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உடன் படிக்கைபடி, இந்திய வீரர்கள் வெளியேற இரு தேதிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு 18ஆம் தேதி தெரிவித்துள்ளார். மே 10க்கு முன் அனைத்து வீரர்களையும் இந்தியா திரும்பப் பெற்றுக்கொள்ளும். அதற்கு முன்னதாக மார்ச் 10க்குள் முதல் கட்ட வீரர்கள் வெளியேறுவார்கள் என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.