world

img

மலேசியா: 3 காரும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 8 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பலி

மலேசியா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில்  8குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மலேசியாவில், செலாங்கோர் மாகாணத்தின் வெள்ளிக்கிழமை இரவு 11.40 மணியளவில் மூன்று கார்களும், ஒரு லாரியும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் சிக்கியிருந்தனர். இதில் 8  உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர். 
இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;