பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லூலா டி சில்வா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில், வலதுசாரி வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி போல்சோனாரோ, இடதுசாரி வேட்பாளர் லூலா டி சில்வா உள்பட 11 பேர் போட்டியிட்டனர்.
இதில், லூலா டி சில்வா 47.9 சதவிகித வாக்குகளும், போல்சோனாரோ 43.6 சதவிகித வாக்குகளும் பெற்றனர். பிரேசில் அரசமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் முதல் இரு இடங்களைப் பெற்றவர்கள் இரண்டாம் சுற்று தேர்தலில் போட்டியிடுவர்.
அதன்படி, இரண்டாவது சுற்று தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து எண்ணப்பட்ட வாக்குகளில், வெற்றிக்கு தேவையான 50 சதவிகிதத்தை லூலா பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பதிவான வாக்குகளில், லூலா 50.9 சதவிகித வாக்குகளும், போல்சோனாரோ 49.1 சதவிகித வாக்குகளும் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், மூன்றாவது முறையாக இடதுசாரி கட்சியின் தலைவர் லூலா டி சில்வா ஜனாதிபதியாவது உறுதியாகியுள்ளது. உலக நாட்டு தலைவர்கள் பலரும் லூலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.