world

img

பத்தில் நான்கு மருத்துவக் கருவிகள் காலாவதியானவை

லண்டன், மார்ச் 21- பிரிட்டனில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் அத்தியாவசியத் தேவை யான மருத்துவக் கருவிகளை வாங்கி  வைப்பதில் அந்நாட்டு அரசு பெரும்  அலட்சியம் காட்டி வருவது அம்பலமாகி யுள்ளது. எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன்,  ரேடி யோதெரபி சிகிச்சை ஆகியவற்றிற் கான மருத்துவக் கருவிகள் மருத்துவ மனைகளில் அன்றாடத் தேவைகளாகும். பிரிட்டனில் உள்ள அரசு மருத்துவமனை களில் புதிய கருவிகளை வாங்காமல் பழைய கருவிகளை வைத்தே பரிசோதனை கள் மற்றும் சிகிச்சைகள் அளித்து வரு கிறார்கள். காலாவதியாகிப் போன கருவி களை வைத்து மருத்துவம் பார்ப்பது அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு ஆபத்தில்தான் முடியும் என்று அந்நாட்டின் தாராளவாத ஜனநாயகக் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் சார்பாக நாடு முழு வதும் ஆய்வு செய்திருக்கிறார்கள். அந்த  ஆய்வின்படி இந்த மோசமான நிலையில்  நூற்றுக்கணக்கான அரசு மருத்துவ மனைகள் இருப்பதாகத் தெரிய வந்திருக் கிறது. இந்த மருத்துவமனைகளில் 30, 35 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய மருத்துவக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு மருத்துவமனையில் 37 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய எக்ஸ்-ரே கருவி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வில் தெரிய வந்துள்ள இந்த விபரம் மருத்துவ வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபரங்களால் மக்கள் மத்தியிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தாராளவாத ஜனநாயகக் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் விடுத்த அழைப்பை ஏற்று,  பிரதமரின் வீட்டை நோக்கிய பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.  பிரிட்டனில் மேம்பட்ட மருத்துவக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கானோர் லண்டனின் மையப்பகுதியில் வலம் வந்தார்கள். இது குறித்துப் பேசிய அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான எட் டேவி, ‘‘உடனடியாக அரசு முதலீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவோம்’’ என்று கூறியுள்ளார்.

மருத்துவமனைகளுக்கு தகவல் கோரி அனுப்பியதில் உடனடியாகப் பதிலளித்த 69 மருத்துவமனைகளில் காலாவதியாகிப் போன 541 மருத்துவக் கருவிகள் உள்ள தாகக் கூறியிருக்கிறார்கள். இதில் பல கருவிகள் தங்களை விட வயது அதிகமானவை என்று பல மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். கூடுதல் நிதியை ஒதுக்குவதன் மூலமே இந்தக் கருவிகள் அனைத்தையும் அகற்றிவிட்டுப் புதிய மருத்துவக் கருவிகளை வாங்க முடியும் என்று பெரும்பாலான மருத்துவமனை களின் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

பெரும் விலை உயர்வு

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத விலை  உயர்வை பிரிட்டன் சந்தித்துக் கொண்டிருக் கிறது. பொதுத்துறையில் கூடுதல் முத லீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படாது என்று  வலதுசாரி அரசு தெரிவித்து விட்டது. விலை வாசியை மேலும் எகிறச் செய்துவிடும் என்று அக்கட்சியினர் கூறுகிறார்கள். தற்போதுள்ள நெருக்கடியை அரசு சிறப்பாகக் கையாளும் என்று மருத்துவ மனைகளும், அவற்றின் ஊழியர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று  பிரிட்டனின் சுகாதாரத்துறை செயலாளரான ஸ்டீவ் பார்க்லே கூறியிருக்கிறார். பலனளிக்கக்கூடிய பேச்சுவார்த்தை க்குத் தயார் என்று அவர் கூறினாலும்,  அத்துறையில் இயங்கும் தொழிற்சங்கங் கள், பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளன. மருத்துவத்துறை ஊழியர் கள் விலைவாசி உயர்வை சமாளிக்க உத வும் வகையில் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்று பல மாதங்களாகப் போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நடைபெற்று வருகின்றன. சரியான வகை யில் சிகிச்சை அளிக்க, ஊழியர்களின் நலன் களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.