பிரிட்டனில் முதியவர்களை குறிவைத்து புதிய வகை நோய் ஒன்று வேகமாக பரவி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்குதல் உலக மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ச்சியாக கொரேனா வைரஸ்ன் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு ஆல்பா,பீட்டா, காமா, டெல்டா, டெல்மிக்ரான், புதிய வகை தொற்றுகள் ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் புதிதாக தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 110க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லண்டனில் புதிய வகை லோன்லினஸ் எபிடமிக் என்ற நோய் பரவி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த நோயால் 65 வயதை கடந்தவர்கள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். இந்த புதிய வைரஸால் தற்போது 36 லட்சம் முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 80 வயதை கடந்தவர்களில் சுமார் 23 சதவீதம் பேர் தனித்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவதால் அவர்களும் லோன்லினஸ் எபிடமிக் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.