world

காசா மீது இஸ்ரேல் போர் சில முக்கிய கள நிகழ்வுகள்

uகடந்த 24 மணி நேரத்தில் 297 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 18,000ஐ தாண்டியது. சுமார் 40,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். 
uபுதிதாக காசா பகுதியிலிருந்து 142 பெண்களையும் குழந்தைகளையும் இஸ்ரேல் கைது செய்துள்ளது. தற்காலிகப் போர் நிறுத்தத்தின் பொழுது விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கைக்கு இணையாக புதிய கைதுகள் தொடர்கின்றன.
uஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காசா போர் நிறுத்தத்துக்கு எதிராக வீட்டோ அதிகாரம் பயன்படுத்திய அமெரிக்கா கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. அமெரிக்க இடதுசாரி செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், பைடன் நிர்வாகத்தை கடுமையாக கண்டித்துள்ளார். தொடக்கத்தில் இஸ்ரேல் எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்தாத பெர்னி சாண்டர்ஸ் தற்பொழுது கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ளார். 
uகான் யுனிஸ் என்பது காசா பகுதியில் காசாவுக்கு அடுத்தபடியாக பெரிய நகரம். காசா தாக்கப்பட்ட பொழுது கான்யுனிஸ் பாதுகாப்பான இடம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இஸ்ரேல் தற்பொழுது இந்த நகரத்தில் குண்டு மழை பொழிகிறது. “பாதுகாப்பான நகரம்” நரகமாக மாற்றப்பட்டுள்ளது.
uஇஸ்ரேல்-பாலஸ்தீன போர் காரணமாக இயேசு நாதர் பிறந்த இடமான பெத்லகேமில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான அளவில் கொண்டாடுவது இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. வரலாற்றில் இது முதல் தடவையாகும்.
uஜோர்டான் அமைச்சர் அய்மான் சஃபாதி காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை அங்கிருந்து முற்றிலும் துரத்த இஸ்ரேல்போர் மூலம் முயல்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
uஇஸ்ரேல் குண்டு வீச்சில் இதுவரை 192மசூதிகளும் 4 தேவாலயங்களும் அழிக்கப்பட்டுள்ளன. 
uஹமாஸ் தாக்குதல் வெற்றிடத்தில் நிகழவில்லை எனவும் அதற்காக பாலஸ்தீன மக்களை கூட்டு தண்டனைக்கு ஆளாக்குவது ஏற்புடையது அல்ல எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் கூறியுள்ளார்.
uஐ.நா.வின் நிவாரண அமைப்பு காசா “பூமியில் ஒரு நரகமாக” தொடர்கிறது என வேதனையுடன் கூறியுள்ளது.
uஅரசியல் பிளவு காரணமாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் செயலிழந்து உள்ளது எனவும் ஆயினும் பாலஸ்தீனத்தில் அமைதி கொண்டுவரும் முயற்சிகளை கை விடப்போவது இல்லை எனவும்பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்ட ரெஸ் கூறியுள்ளார்.
- அ.அன்வர் உசேன்