பாலஸ்தீன மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராகவும் இடதுசாரிக் கட்சிகள் தில்லியில் சனியன்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் து.ராஜா, சிபிஐ(எம்-எல்) தில்லி மாநில செயலாளர் ரவி ராய் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்குபெற்று உரையாற்றினர்.