world

img

காசா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் முற்றுகை: நோயாளிகள் பரிதவிப்பு

காசா நகரின் வட பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் பீரங்கி வாகனங்களுடன் முன்னேறி, ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், காசா நகரில் மருத்துவமனைகளில் ஹமாஸ் இயக்கத்தினர் பதுங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இக்குற்றசாட்டுகளை மறுத்து காசா மருத்துவமனைகள் இயக்குனர் முகமது ஜாகோட் கூறியிருப்பதாவது,

அல்-ஷிபா மருத்துவமனை வளாகத்துக்குள் இஸ்ரேல் ராணுவத்தினர் பீரங்கி வாகனங்களுடன் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் இங்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தஞ்சம் அடைந்துள்ள குழந்தைகள் உட்பட நோயாளிகள் அனைவரும் பீதியடைந்துள்ளனர்.இங்கு 2,300 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். இவர்களை வேறு இடங்களுக்கு மாற்றும் வசதிகள் இல்லை. இந்த மருத்துவமனையில் இன்குபேட்டர் செயல்படாததால் ஏற்கனவே 3 குழந்தைகள் இறந்து விட்டன.

எரிபொருள் இல்லாததால் ஜெனரேட்டர்கள் செயல்படவில்லை. இங்கு ஆபரேஷன்கள் எல்லாம் மயக்கம் மருந்து கொடுக்காமலேயே நடைபெறுகின்றன. இங்குள்ளவர்களுக்கு போதிய உணவு, குடிநீர் வசதி இல்லை.சவக்கிடங்குகளில் அழுகும் உடல்களால் மருத்துவமனைகளில் துர்நாற்றம் வீசுகிறது. இப்படியான இக்கட்டனான சூழ்நிலையில் இருக்கையில், இஸ்ரேல் ராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். இவ்வாறு முகமது ஜாகோட் கூறியுள்ளார்.

அல்-ஷிபா மருத்துவமனையின் இந்த அவல நிலைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என ஹமாஸ் இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.