டெல்அவிவ்,ஜன.28- பாலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலை யை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகு ஐ நா வின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு வழங்கி வந்த நிவா ரண நிதி உதவிகளை அமெரிக்கா. இங்கி லாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் வெட்டியுள்ளன. இந்த நிதி வெட்டு ஏற்கனவே இஸ்ரேலால் காசா பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள தீவிர மான உணவு பஞ்சத்தை மேலும் தீவிரப்படு த்தும் என பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன.
போர் தீவிரமடைந்தது முதல் குழந்தைகள், பெண்கள் என அனைவருக்குமான உணவு, மருத்துவம் என ஐ.நா. மனிதநேய உதவி களை இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருகிறது. சர்வதேச அமைப்புகளின் முயற்சியை தடுத்து பாலஸ்தீன மக்களை செயற்கை பஞ்சத்திற்குள் இஸ்ரேல் தள்ளுகிறது என கடந்த பல வாரங்களாக இஸ்ரேல் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.எனினும் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனர்கள் மீதான இனப் படுகொலைகளை நிறுத்த மறுத்து பகிரங்கமாக இனப்படுகொலை செய்வதை நிறுத்தவில்லை.
அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.நா. நிவாரண அமைப்பின் அதிகாரிகளும் உடந்தை என ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை ஐ.நா. மீது சுமத்தும் அளவிற்கு இஸ்ரேலின் மூர்க்கத்தனம் அளவு கடந்து விட்டது. இங்கிலாந்தும் இந்த குற்றச்சாட்டை ஏற்பது போல, இது கொடூர மான செயல்; இதைக் கண்டு அதிர்ச்சி அடை ந்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை காரணமாக மாற்றி அக்டோபர் 7 தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டு மென பிற அமெரிக்க ஆதரவு நாடுகளும் நிதி உதவியை வெட்டின. இத்தாலியின் வெளி யுறவு அமைச்சர் அந்தோனி தஜானி, அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து ஐநா அமைப்பிற் கான நிதியை தற்காலிகமாக வெட்டுவதாக தெரி வித்தார். நிவாரண உதவியை முடக்கும் வகை யில் நாடுகளின் நிதி வெட்டுக்களை வர வேற்ற இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ் ஐ நா அகதிகள் நிவாரண அமைப்பின் முழு செயல்பாடுகளை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அனைவரது உதவியை யும் கோருவோம் என பகிரங்கமாக கூறி யுள்ளார்.
இந்நிலையில் ஜனவரி 28 அன்று மட்டும் 165 பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள் ளது இஸ்ரேல் ராணுவம். போர் துவங்கியதில் இருந்து 26,422 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 65,000 பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்துள்ளனர்.