world

இம்ராம்கான் மீது துப்பாக்கிச்சூடு: 3 பேர் கைது

லாகூர், நவ.4- பாகிஸ்தான் நாட்டின் இந்திய எல்லைப் பகுதி நகரமான வசிராபாத்தில் வியாழனன்று  மாலை முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரு மான இம்ரான்கான் (70) பங்குபெற்ற பேரணி யில் மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி னார். இந்த துப்பாக்கிசூட்டில் இம்ரான்கா னின் வலது காலில் குண்டு பாய்ந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டதாக வீடியோ  ஆதாரத்தின் படி நவீத் முகமது பஷீர் கைது  செய்யப்பட்டார். மேலும் பஷீருக்கு துப்பாக்கி மற்றும் தோட்டா சப்ளை செய்த தாக வஹாஸ், சஜித் பட் ஆகிய இருவரும் வெள்ளியன்று கைது செய்யப்பட்டனர். தற்போதைய நிலையில், இம்ரான் கான் நலமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் லாகூர் ஷௌகத் கான் மருத்துவ மனை நிர்வாகம் அறிக்கை வெளி யிட்டுள்ளது.

;