world

img

கராச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் பலி  

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  

பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 3 சீனர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

குண்டுவெடிப்பை தொடர்ந்து, மீட்பு படையினர் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் இந்த சம்பவத்தில் கார் ஒன்று வெடித்து சிதறியுள்ளது.

முதற்கட்ட தகவலின்படி, கராச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே ஒரு வேனில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வேனில் 7 முதல் 8 பேர் இருந்தன. இருப்பினும் உயிரிழப்புகளின் சரியான எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

மேலும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் கராச்சி பல்கலைக்கழகத்தில் சீன மொழி கற்பிக்கும் மையமான கன்பூசியஸ் துறையில் இருந்து திரும்பி வருவதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;