இஸ்லாமாபாத்,ஆக.6- பாகிஸ்தானில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 30 பேர் பலியாகினர். ஷாஜத்பூர் மற்றும் நவாப்ஷா இடையே அமைந்துள்ள சஹாரா ரயில் நிலையம் அருகே ராவல்பிண்டி நோக்கிச் செல்லும் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் தடம் புரண்டது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.